சனி, 23 டிசம்பர், 2017

To know your salary , PTPF , CPS & Health card details...



To know your monthly salary details, click here...

To know your PTPF account slip, click here...

To know your CPS account slip, click here...

To check your health card 2016,click here...

இரண்டாம்பருவத் தேர்வு விடுமுறையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோருக்கு கணினிப்பயிற்சி தரப்படும் என்பதை ஆசிரியர் மன்றம் ஆட்சேபிக்கிறது...


அன்பானவர்களே! வணக்கம்.

இரண்டாம்பருவத் தேர்வு விடுமுறையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோருக்கு  கணினிப்பயிற்சி தரப்படும் என்பதை ஆசிரியர் மன்றம் ஆட்சேபிக்கிறது ;
கடுமையாக எதிர்கிறது.
வேலைநாள் இழப்பு எங்கு(பள்ளியில்/அலுவலகத்தில்) ஏற்பட்டதோ அங்குதான் வேலைநாள் ஈடுசெய்வதற்கு ஆணையிடுவது
தான் பொருத்தமானதாகும்.
இதைசெய்யாது இரண்டாம்பருவத்
தேர்வில்  கணினிப்பயிற்சி என்று அறிவிக்கப்பட்டு
 இருப்பது 
ஒரு வகையில் தமிழக அரசின் பழிவாங்கும்
நடவடிக்கையாகும்;
அச்சுறுத்தல் தன்மை கொண்டதாகும் என்றே கருத வேண்டி வருகிறது.

ஜாக்டோ-ஜியோ வின் போராட்ட நடவடிக்கைகளில் பின்னடைவினை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே கணினிபயிற்சி அறிவிப்பை ஆசிரியர்மன்றம் காண்கிறது.
எத்தகு அச்சுறுத்தல்களையும்,
அடக்குமுறைகளையும்,
மிரட்டல்களையும்,
சதித்திட்டங்களையும்
தூள்தூளாக்கி 
தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு அலுவலர்களின் ஒட்டுமொத்த பொதுநலன்களை பேணிப்பாதுகாப்பதில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு 
முழுவீச்சோடு தொண்டாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் .இனமானக்காவலர் .பாவலர்.க.மீ அவர்கள் ,தமிழ்நாடு ஜாக்டோ-ஜியோவின் மாநில அமைப்போடு இணைந்து நின்று கணினிப்பயிற்சி திட்டத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
              நன்றி.
~முருகசெல்வராசன்.

மாத ஊதியத்தில் PLI செலுத்துபவர்களின் கவனத்திற்கு....



✍இனி மாதாமாதம், செலுத்தி வந்த PLI தொகைக்கு சேவை வரி பதிலாக GST வரியாக மாற்றப்பட்டுள்ளது.

✍எப்படி கணக்கிடுவது என்ற விளக்கம் படத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் மன அழுத்தம் தீர 'ஹெல்ப் லைன்' அறிமுகம்...


பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.

ஆலோசனை மையம்:

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்களுக்கு உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகளை விவரிக்கவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், கட்டணமில்லா தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட உள்ளது.

இனிமேல், '14417' என்ற எண்ணில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் தொடர்பு கொள்ளலாம். 

அவற்றில், உயர் கல்வி படிப்பதற்கான தகவல்கள், தேர்வு விபரங்கள், பாடத்திட்ட சந்தேகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு பிரச்னைகள்... நலத்திட்டம் கிடைக்காமை, மன அழுத்த பிரச்னைகள் போன்றவை குறித்து, மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்துக்காக, தமிழக அரசு, 1.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மாணவர்களுக்கு உடல்நலம், உளவியல் ஆலோசனைகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் குறித்த தகவல்களையும் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 2017_ வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வேலை நிறுத்த காலத்தினை பணிக்காலமாக ஈடுகட்டும் வகையில் 27-12-2017 முதல் 30-12-2017 முடிய 4 நாட்கள் கணினிப்பயிற்சி...

வெள்ளி, 22 டிசம்பர், 2017

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் -பள்ளிபாளையம் ஒன்றிய செயற்குழு கூட்டம் (22/12/17)~நிகழ்வுகள்...

CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு...

நிதி உதவி பெறும் பள்ளிகள்- மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ள உபரி ஆசிரியர்களை மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த நிதி உதவி பள்ளிக்கு திரும்ப உத்தரவு - சேலம் DEEO செயல்முறைகள்...



EMIS Android Application's News...

அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை" வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய "Emis Android Application" வெளியிடப்பட்டுள்ளது.

1.இணையதளத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களின் பெயர்கள் மட்டுமே ஆண்ட்ராய்ட் செயலியில் காட்டப்படும்.இணையதளத்தில் இல்லாத மாணவர்களின் பெயர்கள் ஆண்ட்ராய்ட் செயலியில் இருக்காது.

2.ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி புகைப்படம்,இரத்தவகை, ஆதார் எண் போன்றவற்றை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.

3.அடையாள அட்டை அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்த தேவை இல்லை.

4.Student id செயலியை அடையாள அட்டைக்கான தகவல்கள் பதிவேற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும்.புதிய பதிவு,சேர்த்தல், நீக்கல் செய்ய இயலாது.

5.வருகைப்பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர்களும், இணையதளத்தில் உள்ள மாணவர் பெயர்களும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

6.செயலியை Playstore ல்
டவுன்லோடு செய்துகொள்ளவும்.

Facebook ல் அறிமுகமாகும் புதிய வசதி!



ஃபேஸ்புக்கில் அறிமுகமின்றி ஒருவரின் புகைப்படத்தை மற்றொருவர் வெளியிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.

'போட்டோ ரிவ்யூவ்' எனப்படும் இந்த புதிய தொழில்நுட்பம், உங்கள் அனுமதியின்றி உங்கள் புகைப்படங்களை யாரேனும் அப்லோடு செய்தால் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும். உங்களுக்கு விருப்பமிருந்தால் அந்தப் புகைப்படத்தில் உங்களை டேக் செய்து கொள்ளலாம். இல்லையெனில் சம்பந்தப்பட்ட நபரிடம் கூறி அதை நீக்கச் சொல்லலாம் அல்லது ஃபேஸ்புக்கிடம் புகார் அளிக்கலாம்.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயந்திர கற்றல் பிரிவின் தயாரிப்பு மேலாளர் நிபுன் மேத்தர் கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பத்தால் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்களால் பதிவிடுவதைத் தவிர்க்க முடியும். இந்த அம்சம் மக்களுக்கு அதிகமான கட்டுப்பாட்டை வழங்குகிறது. மேலும் பயனர்கள் தங்கள் பாதுகாப்பை உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஒரே புகைப்படத்தில் பல ஃபேக் ஐடிகள் இயங்கிவருவதை நாம் பார்த்திருப்போம். இனிமேல் இதுபோன்ற ஐடிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.