செவ்வாய், 19 மே, 2020

மே 19,
வரலாற்றில் இன்று.


ஹோ சி மின் பிறந்த தினம் இன்று.

ஹோ சி மின்
(மே 19, 1890 – செப்டம்பர் 2, 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர்.

ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி வியட்நாமுக்கு கிடைத்த விடுதலையை அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு என சொல்லிக்கொண்டு உலகப்போரில் செலுத்திய குண்டுகளை விட அதிகம் செலுத்தி பறிக்க முயன்றது அமெரிக்கா.  அப்பொழுது மக்களை வழிநடத்தி கொரில்லா போர் முறையால் நாட்டை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்ற நிஜத்தலைவன் ஹோ சி மின்.

வியட்நாம் குட்டி தேசம் ; நெடுங்காலம் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தேசம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்துக்கு உள்ளானது . உலகப்போர் சமயத்தில் நாஜிக்களின் பொம்மை அரசாங்கம் நாட்டை ஆண்டது ;பின் அங்கிருந்து ஆட்சி ஜப்பானுக்கு பாஸ் ஆனது .பிரான்ஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க படைகளை அனுப்பியது . அங்கிள் ஹோ காட்டிய வழிகாட்டுதலில் தீர்க்கமாக மக்கள் போராடினார்கள் . கூடவே சோவியத் ரஷ்யாவின் உதவியும் சேர்ந்து கொண்டது . ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நாடு வடக்கு வியட்நாம்,தெற்கு வியட்நாம் என பிரித்து கொள்ளப்பட்டது.

அங்கிள் ஹோ என அழைக்கப்பட்ட ஹோ சி மின் பேசினாலே மக்கள் கண்ணீர் விட்டார்கள் ; அவரின் சிந்தனை மக்களை ஒன்றிணைந்த வியட்நாமை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை வார்த்து எடுத்தது . அமெரிக்கா யார் இவர் என்று பார்த்தது ; கம்யூனிஸ்ட் என்று தெரிந்தது .படைகளை அனுப்பிக்கொண்டே இருந்தது .எளிய மக்களின் வீடுகளில் போய் ஹோ சி மின் ஆதரவு திரட்டினார் ; கொரில்லா போர் முறையை பின்பற்றினார்கள் .

வருகிற எல்லா அமெரிக்க அதிபரும் போரை நிறுத்துவதாக அறிவித்து விட்டு தொடர்ந்து போர் செய்துகொண்டே இருந்தார்கள் . இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட குண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன . ஹோ சி மின் எங்கே போனார் என்றே தெரியவில்லை ,அவ்வப்பொழுது தோன்றுவார் ;
தொடர்ந்து ஊக்கப்படுத்திக்
கொண்டே இருந்தார்.
மே 19, வரலாற்றில் இன்று.

சுதந்திரப் போராட்ட வீரர் நானா சாகிப் பிறந்த தினம் இன்று.

மராட்டிய மாநிலத்தின் மதோரன் மலைகளுக்கு இடையே உள்ள ஓர் அழகிய சிறு கிராமம் வேணு. இந்தச் சிற்றூரில் மாதவராவ் நாராயணன் கங்காபாய் தம்பதிகளுக்கு மகனாய் 1824ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நானாசாகிப்.

இந்தக் காலகட்டத்தில் புனாவை ஆட்சி செய்த பாஜிராவ் பேஷ்வா ஆங்கிலேயரிடம் தனது ஆட்சி உரிமையைப் பறி கொடுத்து விட்டு,
ஆண்டிற்கு எட்டு லட்ச ரூபாய் கருணைத் தொகையைப் பெற்றுக் கொண்டு, புனாவில் இருந்து வெளியேறி, கான்பூர் அருகில் உள்ள பித்தூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது பாஜிராவ் பேஷ்வாவுடன் இருக்க உறவினர்கள் பலர் வந்து சேர்ந்தனர். அப்படி வந்து சேர்ந்தவர்களில் ஒரு குடும்பம் தான் நானா சாகிப் குடும்பமும்.

பதவியை இழந்த பேஷ்வாவிற்குப் பிள்ளைப் பாசம் ஏற்பட்ட காரணத்தால் 1827இல் விழா நடத்தி நானாசாகிப்பைத் தனது சுவீகாரப் பிள்ளையாகத் தத்து எடுத்துக் கொண்டார். ராஜ்யம் என்று எதுவும் இல்லாவிட்டாலும் பேஷ்வா பட்டம் கிடைத்ததால் நானாசாகிப் பேஷ்வா என அப்போதே அழைக்கப்பட்டார்.
அரச குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் சிறுவயதிலேயே வாட்பயிற்சி, குதிரையேற்றம்,
யானையேற்றம் போன்றவற்றில் சிறந்த தேர்ச்சியுடன் விளங்கினான். இந்தச் சமயத்தில்தான் காசியில் இருந்து குடிபெயர்ந்து பித்தூருக்கு வந்து சேர்ந்த மனு என்கிற (ஜான்சிராணி) லட்சுமிபாயின் நட்பும் கிடைத்தது. இவர்கள் அனைவரும் இணைந்தே யுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

நானாசாகிப் 1857 மே 22இல் பித்தூரிலிருந்து கான்பூர் வந்து சேர்ந்தார். அப்போது நானாசாகிப்பிடம் 4000 போர்வீரர்கள் இருந்தார்கள். லக்னோ, அம்பாலா ஆகிய நகரங்களுக்கு நானாசாகிப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிக ரகசியமாக இந்திய சிப்பாய்களையும் பிரமுகர்களையும் புரட்சிப் போராட்டத்தில் சேர்த்துக்
கொண்டார்.

சென்ற இடங்களில் எல்லாம் நானாசாகிப்பிற்கு உதவியும், ஆதரவும் கிடைத்தது.
1857 ஜூன் 27இல் கான்பூர் கோட்டையின் மீது தாக்குதல் நடத்தி கோட்டையைக்
கைப்பற்றினார். கோட்டை மீது நடத்தப்பட்ட சிப்பாய்களின் புரட்சிப் போரால் ஆயிரக்கணக்கான வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர். போரின் இறுதியில் நான்கு ஆங்கிலேயர்களும், 125 ஆங்கிலப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர்
தப்பினர்.

ஆறு நாட்கள் நடைபெற்ற கடுமையான போரின் இறுதியில் தோல்வியை ஒப்புக் கொண்டு ஜெனரல் வீலர் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். சமாதான உடன்படிக்கையை நானாசாகிப் ஏற்றுக் கொண்டார். உடன்படிக்கையை ஆங்கில மொழியில் தயாரிக்கத் தொடங்கியபோது, புரட்சித் தளபதிகளில் ஒருவரான அனிமுல்லாகான், "உடன்படிக்கை எங்கள் நாட்டு மொழியில் எழுதப்படவேண்டும்; அந்நியமொழி ஆங்கிலத்தில் இருக்கக்கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதை ஏற்ற ஆங்கிலேயன் இந்தி மொழியில் எழுதி உடன்படிக்கை செய்து கொண்டான். கான்பூர் பகுதியில் கலவரம் நடந்தபோது இந்திய சிப்பாய்கள் நான்கு ஆங்கிலேயப் பெண்களைக் கடத்திச் சென்று விட்டனர். கடத்திச் செல்லப்பட்ட வெள்ளைக்காரிகளிடம் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தல் உட்பட பல வேலைகளை வாங்கினர். இதை அறிந்ததும் நானாசாகிப் கொதிப்படைந்தார். அந்தப் பெண்களை விடுவித்து பாதுகாப்பாக உரியவர்களிடம் ஒப்படைக்கச் செய்தார்.

கான்பூர் நகரவாசிகள், பெரிய குடும்பத்துப் பெண்கள் என பலரும் நானாசாகிப்பிற்கு உதவியாக இருந்து வந்தனர். போராளிகளுக்கு உணவு கொடுப்பது, வெடிமருந்து, தோட்டாக்கள், ஆயுதங்கள் சேகரித்துக் கொடுப்பது உட்பட பல வேலைகளில் பெண்கள் உதவி செய்தார்கள்.

நானாசாகிப் தனது ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் சொத்து உரிமை சார்ந்த சிவில் நீதிமன்றங்களை அமைத்திருந்தார். குற்றவியல் நீதிமன்றமும் உண்டு. குற்றம் செய்தவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்பட்டது. முதல் இந்தியச் சுதந்திரப் போரின் தளபதிகளில் ஒருவரான நானாசாகிப்பின் தீவிர முயற்சியால் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சி மீரட், கான்பூரில் இருந்து துவங்கி லக்னோ வரை பரவி விட்டது.

1857 மே 14இல் புரட்சியாளர்கள் தில்லி மாநகரை ஆங்கிலேயரிடமிருந்து விடுவித்தனர். மே 30ஆம் நாள் இரவு லக்னோ ராணுவ முகாம் மீது புரட்சியாளர்கள் பீரங்கித் தாக்குதலைத் துவக்கினார்கள். ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி தீவிரம் அடைந்தது. அலிகார், மைன்புரி, இடாவா, பரேலி, முராதாபாத் உட்பட சுமார் 31 ஊர்கள் ஆங்கிலேயர் களிடமிருந்து விடுவிக்கப்பட்டன.

இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக விளங்கிய நானாசாகிப் மீது கும்பினி அரசு ஆத்திரம்
கொண்டிருந்தது. இதற்கு முன்பே கிழக்கிந்திய கும்பினி அரசு, புரட்சித் தளபதி நானா சாகிப்பைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இனாம் அளிப்பதாக பிரகடனப்படுத்தி இருந்தது. சுவரொட்டிகளைப் பட்டி தொட்டியெங்கும் ஒட்ட வைத்தது.

"நானாசாகிப்" கூடவே ஒரு காது அறுந்த வே
மே 19, வரலாற்றில் இன்று.

இந்திய நவீன தொழில்துறையின் முன்னோடி ஜாம்செட்ஜி டாடா நினைவு தினம் இன்று(1904).

ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா (ஜாம்செட்ஜி டாடா) (மார்ச் 13, 1839 - மே 19, 1904) இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.

திங்கள், 18 மே, 2020

தமிழகத்திலேயோ அல்லது வௌிமாநிலங்களிலோ சிக்கி உள்ளவா்கள், அந்தந்த காரணங்களுக்கு சம்பந்தப்பட்ட இணைய தள முகவாியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சொந்த வாகனங்களில் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கான பயண அனுமதி சீட்டு விண்ணப்பிக்க *https://tnepass.tnega.org/* இணைப்பை பயன்படுத்தவும் தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் அரசு போக்குவரத்தின் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பினால் *https://rtos.nonresidenttamil.org/* இணைப்பை பயன்படுத்தவும் வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள் அங்கிருந்து அரசு போக்குவரத்தின் மூலம் தமிழகம் திரும்ப *https://rttn.nonresidenttamil.org/* என்ற இணைப்பை பயன்படுத்தவும் ஏனைய சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள் 9345168402, 9566300846, 9444920525, 9080144760, 9444761625 மற்றும் கட்டணமில்லா உதவி எண் 1070, 1077 18004251333 (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) இந்த அவசரகால *போக்குவரத்து அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.*
தமிழகத்திலேயோ அல்லது வௌிமாநிலங்களிலோ சிக்கி உள்ளவா்கள், அந்தந்த காரணங்களுக்கு சம்பந்தப்பட்ட இணைய தள முகவாியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சொந்த வாகனங்களில் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கான பயண அனுமதி சீட்டு விண்ணப்பிக்க *https://tnepass.tnega.org/* இணைப்பை பயன்படுத்தவும் தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் அரசு போக்குவரத்தின் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பினால் *https://rtos.nonresidenttamil.org/* இணைப்பை பயன்படுத்தவும் வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள் அங்கிருந்து அரசு போக்குவரத்தின் மூலம் தமிழகம் திரும்ப *https://rttn.nonresidenttamil.org/* என்ற இணைப்பை பயன்படுத்தவும் ஏனைய சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள் 9345168402, 9566300846, 9444920525, 9080144760, 9444761625 மற்றும் கட்டணமில்லா உதவி எண் 1070, 1077 18004251333 (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) இந்த அவசரகால *போக்குவரத்து அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.*
தமிழகத்திலேயோ அல்லது வௌிமாநிலங்களிலோ சிக்கி உள்ளவா்கள், அந்தந்த காரணங்களுக்கு சம்பந்தப்பட்ட இணைய தள முகவாியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சொந்த வாகனங்களில் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கான பயண அனுமதி சீட்டு விண்ணப்பிக்க *https://tnepass.tnega.org/* இணைப்பை பயன்படுத்தவும் தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் அரசு போக்குவரத்தின் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பினால் *https://rtos.nonresidenttamil.org/* இணைப்பை பயன்படுத்தவும் வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள் அங்கிருந்து அரசு போக்குவரத்தின் மூலம் தமிழகம் திரும்ப *https://rttn.nonresidenttamil.org/* என்ற இணைப்பை பயன்படுத்தவும் ஏனைய சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள் 9345168402, 9566300846, 9444920525, 9080144760, 9444761625 மற்றும் கட்டணமில்லா உதவி எண் 1070, 1077 18004251333 (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) இந்த அவசரகால *போக்குவரத்து அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.*
*✒தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக் கிளையின் சார்பில் பரமத்தி ஒன்றியத்தில் 12 தொடக்கப்பள்ளிகளுக்கு தூய்மைப்பணியாளர் ஊதியம் மற்றும்* *பராமரிப்புத் தொகை 16 மாதங்களுக்கு வழங்கிட வேண்டி  07.05.2020 அன்று உதவி இயக்குநர், ( ஊராட்சிகள்)*
*நாமக்கல் அவர்களுக்கு விண்ணப்பம்  அனுப்பப்பட்டது.*
*அம்மனுவின்  மீது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) நாமக்கல் அவர்கள் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு  திட்ட இயக்குநர்,ஊரக வளர்ச்சித் திட்ட முகமை,நாமக்கல் அவர்களுக்கு உதவி இயக்குநர் அவர்களால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.*
*நடவடிக்கை எடுக்க கோரும் கடிதம்* 👉👉👉
மே 18, வரலாற்றில் இன்று.

ஆலிவர் ஹெவிசைடு (18 மே 1850 – 3 பெப்ரவரி 1925) பிறந்த தினம் இன்று.

 ஹெவிசைடு தானே படித்தறிந்த ஆங்கில மின்பொறியாளர், கணிதவியலாளர், மற்றும் இயற்பியலாளர் ஆவார். இவர் மின்சுற்றுக்களை ஆய்வதற்கு சிக்கலெண்களை பயன்படுத்தியவரும், வகையீட்டுச் சமன்பாடுகளை தீர்க்க கணித நெறிமுறைகளைக் (இவை பின்னாள் இலப்பிளாசு மாற்றுக்களுக்கு இணையானவை) கண்டறிந்தவரும், மாக்சுவெல்லின் களச் சமன்பாடுகளை மின்சாரம், காந்தவியல் விசைகளையும் ஆற்றல் பாயத்தையும் கொண்டு சீரமைத்தவரும் தன்னிச்சையாக திசையன் பகுப்பாய்வை வடிவமைத்தவர்களில் ஒருவரும் ஆவார்.

 தனது வாழ்நாளின் பெரும்பகுதியும் அறிவியல் சமூகத்துடன் ஒப்பாது இருந்தபோதும் அறிவியல் மற்றும் கணிதத்தின் அணுகுமுறையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர்.

 அயனி மண்டலத்தின் ஒருபகுதி இவரது பெயரையும் தாங்கியவண்ணம் எவிசைடு-கென்னலி அடுக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மே 18, வரலாற்றில் இன்று.

உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் இன்று.

H.I.V தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது.  எய்ட்ஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதன் முலம் எய்ட்ஸ் ஆபத்தினை குறைக்க முடியும்.  இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டு முதல் மே-18 அன்று ""உலக தடுப்பூசி விழிப்புணர்வு தினம்"" அனுசரிக்கபடுகிறது.
மே 18,
வரலாற்றில் இன்று.


எழுத்தாளர்
எம். வி. வெங்கட்ராம் பிறந்த தினம் இன்று.

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16ஆவது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது.
1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.


1920 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழி
பெயர்த்திருக்கிறார். 1948 இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். 'தேனீ ' இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகி
இருக்கின்றன.

பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்காக அறுபது சிறுநூல்களை எழுதினார். நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபக்தர்களைப்
பற்றிய பள்ளி
மாணவர்களுக்கான நூல்கள் இவை.  எம்.வி.வெங்கட்ராம் எழுதிய இந்நூல்கள் இப்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளன

மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பம் இவரது.

 1952-53களில் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.2000ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி அவர் காலமானார்.


புதினங்கள்

நித்தியகன்னி
இருட்டு
உயிரின் யாத்திரை
அரும்பு
ஒரு பெண் போராடுகிறாள்
வேள்வித் தீ
காதுகள்

சிறுகதைத் தொகுதிகள்

குயிலி (1964)
மாளிகை வாசம் (1964)
வரவும் செலவும் (1964)
மோகினி (1965)
உறங்காத கண்கள்(1968)
அகலிகை முதலிய அழகிகள் (1969)
இனி புதிதாய் (1992)
எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் (1992)
முத்துக்கள் பத்து (2007)
பனிமுடி மீது கண்ணகி
குறுநாவல்கள் தொகு
நானும் உன்னோடு மற்றும் 6 குறுநாவல்கள்

கட்டுரை தொகுப்புகள்

என் இலக்கிய நண்பர்கள்
நாட்டுக்கு உழைத்த நல்லவர் (40க்கும் மேற்பட்ட நூல்கள்)
ஆனந்த விகடனில் 1970களில் "நஞ்சு" என்ற தொடர் நாவலை எழுதினார். "பாலம்" என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தபோது அதில் அதில் "காதுகள்' நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு "காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. "வேள்வித்தீ" என்ற புதினம் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது.

விருதுகள்

சாகித்திய அகாதமி விருது (காதுகள், 1993)
தமிழக அரசு விருது (எம்.வி. வெங்கட்ராம் கதைகள்)

சித்த சூரி ரத்ன விருது

லில்லி தேவசிகாமணி விருது

சாந்தோம் விருது

புதுமைப்பித்தன் சாதனை விருது