ஞாயிறு, 7 ஜூன், 2020

*🌐ஜூன் 7,வரலாற்றில் இன்று:ஜேம்ஸ் யங் சிம்சன் பிறந்த தினம்.*

ஜூன் 7, வரலாற்றில் இன்று.

ஜேம்ஸ் யங் சிம்சன் பிறந்த தினம் இன்று.

ஸ்காட்லாந்து நாட்டு  மகப்பேறு மருத்துவரான ஸேர் ஜேம்ஸ் யங் சிம்சன்
( Sir James Young Simpson) 1847ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 04ஆம் திகதி  Chloroformஐ
அறுவைச் சிகிச்சைகளின் போது வலி உணரா நிலையை ஏற்படுத்தத் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார்.

1811ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07ஆம் நாள்
Edinburghல் பிறந்த அவர் எடின்பரோ பல்கலைக் கழகத்தில்  M.D.பட்டம் பெற்று அங்கு மகப்பேறு மருத்துவப் பேராசிரியர் ஆனார்! பாஸ்டனில் அறுவை மருத்துவத்துக்கு ஈத்தரைப் பயன்படுத்தும்
செய்தி ஸ்காட்லாந்துக்கு எட்டியவுடன்,
சிம்சன் முதன்முதலில் ஈத்தரைப் பயன்படுத்திப் பிரசவ வலியைக் குறைத்தார்! பிறகு குளோரோஃபார்மை,
மகப்பேறு மருத்துவர்களும், மதகுருமார்களும் எதிர்த்த போதிலும், பயன்படுத்தினார்!

Chloroform தெளிந்த, நிறமற்ற,கனமான,
தீப்பற்றாத, நீர்ம நிலையில் உள்ள ஈத்தர் போன்று மணமுடைய கரிம ரசாயனச் சேர்மம்! இது அறுவைச் சிகிச்சையின் போது,
வலி உணரா நிலையை ஏற்படுத்த வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்ட முதல் பொருளாகும்! இதில் ஓரளவு நச்சுத்தன்மை
இருப்பதால், வலியை உணரா நிலையை ஏற்படுத்தும் பிற பொருள்கள் நடைமுறைக்கு
வந்தபின் இதன் பயன்பாடு பெருமளவு குறைந்தது!

ஸேர் ஜேம்ஸ் யங் சிம்சன் குளோரோஃபார்மை பயன்படுத்துவது பற்றிக் கண்டறிந்ததோடு, இரும்புக் கம்பித் தையல்கள், ரத்த ஒழுக்கைத் தடுக்க அழுத்தத்தைப் பயன்படுத்தும் முறை, சிம்சன்
இடுக்கி (நீண்ட மகப்பேற்று இடுக்கி) ஆகியவற்றையும் அறிமுகம் செய்திருக்கிறார்!

1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் நாள் சிம்சன் காலமானார்!

G.O (Ms).No: 62 Date: 1.6.2020 Fundamental Rules- Rule 56 - Enhancement of the age of retirement on Superannuation Period from 58years to 59 years_ amendment- issued



சனி, 6 ஜூன், 2020

நாமக்கல் மாவட்டத்தில் 308 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு...

10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள்ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட் பெறலாம்...

*☀Income Tax News - வருமான வரி கணக்குத் தாக்கல் ITR(Filing of Income Tax Return) பணியை தொடங்கலாம்.*

*☀Income Tax News - வருமான வரி கணக்குத் ITR பணியை தொடங்கலாம்.*
*அனைவருக்கும் வணக்கம்!!*


*2019-20 நிதியாண்டிற்கான (Financial Year) அதாவது 2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Assessment Year) வருமான வரி கணக்குத் தாக்கல் (Filing of Income Tax Returns) செய்வதற்கான இணையதளம் https://www.incometaxindiaefiling.gov.in தற்போது தயாராக உள்ளது.*

*வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் Form 26AS ல் நாம் செலுத்திய வருமான வரி சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் ITR பணியை தொடங்கலாம்.*
*எப்போதும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி  கடைசி நாள் ஆகும். இந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது*

20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்து இருப்பவர்களுக்கு இறுதிவாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம்


முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க மானியக் கடன்_மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு


Provident Fund-Letter_No_1074_Subscription for the old period due to age of retirement on superannuation of superior service employees/teachers extended from 58 years to 59 years - Instructions - Regarding.



*🌐மன்ற வரலாற்றில்இன்று: கடந்தாண்டு.இதே நாளில் (06.06.2019)இனக்காவலர்-.பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களுடன் நாமும்.நாமக்கல் மாவட்டமும்...*

*

🌐மன்ற வரலாற்றில்இன்று: கடந்தாண்டு
இதே நாளில் (06.06.2019)இனக்காவலர்-பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களுடன்  நாமும்.நாமக்கல் மாவட்டமும்...

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு தினம் இன்று.*

ஜூன் 6,
வரலாற்றில் இன்று.

திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு தினம் இன்று.



ஆலங்குடி சோமு (12 டிசம்பர் 1932 - 6 ஜூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது (1973 - 1974) பெற்றுள்ளார்.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 1960இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.

இவர் எழுதிய பாடல் தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.

சில பிரபல பாடல்கள்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... (அடிமைப் பெண்)
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)
இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.