சனி, 26 அக்டோபர், 2019

*🌷அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ செலவை வழங்க மறுத்த உத்தரவு ரத்து.*

*அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளை வழங்க* *மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
*சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த பல்வேறு மனுக்களில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.* *இந்தத் திட்டத்துக்காக ஒரு குறிப்பிட்டத் தொகை அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்தும்,* *ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்தும் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்கள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் தங்களுக்கான அவசர சிகிச்சைப் பெற்றால் அதற்கான செலவுத் தொகையை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம்.*
*ஆனால் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலோ, திட்டத்தில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றாலோ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கும் செலவுத் தொகை வழங்கப்படுவதில்லை.* *எனவே, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவச் செலவுத் தொகையினை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.*
*இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும்,* *வரையறை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றதாகவும் கூறி பலருக்கு மருத்துவச் செலவுகளை அரசு வழங்க மறுத்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.*
*இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியத் தொகை இவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, மருத்துவச் செலவுத் தொகையை திரும்பி வழங்க முடியாது என அரசு கூற முடியாது.* *இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்ப வழங்க மறுத்த அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.*
*மேலும், மனுதாரர்களின் இந்தக் கோரிக்கையை மாவட்ட குழுக்களுக்கு அரசு மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கையை 30 நாள்களுக்குள் பரிசீலித்து 6 சதவீத வட்டியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும்.*
*தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி இருந்தால்,* *அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைப் பெற்றிருப்பர்.*
*ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.*
*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
------------------—------------------------------
*பத்திரிக்கையாளர் கணேஷ் சங்கர் வித்யார்தி பிறந்த தினம் இன்று.*

*இந்திய பத்திரிக்கையாளர் கணேஷ் சங்கர் வித்யார்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பதேபூரில் பிறந்தார்.*

*இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்த இவர்,*
*விடுதலை போராட்ட இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்.*

*இவர் புகழ்பெற்ற பிரதாப் என்ற ஹிந்தி செய்தித்தாளின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் ஆவார்.*


*பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி லாகூர் மத்திய சிறையில் ஆங்கிலேயே அரசினால் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். அதற்கு அடுத்து மார்ச் 24ஆம் தேதி அவர்களது தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் முழு கடை அடைப்பை நடத்த முயன்றனர். தொடர்ந்து இந்து மற்றும் இஸ்லாமிய கும்பல்களால் நடந்த வன்முறை மற்றும் பதில் வன்முறையால் 400 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கான்பூரே சூறையாடப்பட்டது.*

*அதற்கடுத்த ஆறு நாட்கள் மார்ச் 30 வரை இரு மத வழிப்பாட்டு தலங்கள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த வன்முறையில்தான் ஐக்கிய மாகாண காங்கிரசு அமைப்பின் (United Province Congress Committee) தலைவரும் பகத்சிங்கின் நண்பரும் தீரமிக்க விடுதலை போராட்ட வீரருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi) தன்னுடைய இன்னுயிரை இழந்தார். மார்ச் 25ஆம் தேதி வன்முறையினால் பற்றிக்கொண்ட நெருப்பிலிருந்து அப்பாவி இந்து மற்றும் முஸ்லீம் மக்களை காப்பாற்றும் முயற்சியின் போது அந்த துயரம் நடந்தேறியது.*
*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
*மிர்துலா சாராபாய்*
*நினைவு தினம் இன்று.*

 *மிர்துலா சாராபாய் ( 6 மே 1911 -  26 அக்டோபர் 1974) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.*

 *அகமதாபாத்தில் பிறந்த இவர் வளமான தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.*

*அம்பாலால் சாராபாய், சரியா தேவி  அவருடைய பெற்றோர்கள்.*

*இவர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
விக்ரம் சாராபாய் அவர்களின் சகோதரி ஆவார்.*

*இவர் பள்ளிக்குப் போகாமலே இல்லத்தில் இருந்து கல்வி பயின்றார்.இருப்பினும் 1928 இல் குஜராத் வித்யாபீத்தில் சேர்ந்து இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு, உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் அழைப்பை அடுத்து அயல்நாட்டுப் பொருள்கள், நிறுவனங்கள் முதலியவற்றைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்கினார். எனவே வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பை மறுத்தார்.*
*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*தனி நாடாக இருந்த ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த தினம் இன்று (1947).*


*அதை ஆண்ட மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கான கையெழுத்தை இட்ட தினம்இன்று.*

*மார்ச் 16, 1846ல் காஷ்மீரை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். பிறகு ஜம்முவை ஆண்டு கொண்டிருந்த குலாப் சிங் என்பவருக்கு காஷ்மீரை விற்றனர். ஹரி சிங், குலாப் சிங்கின் கொள்ளு பேரனாவார்.*
*🌷அக்டோபர் 26, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
 *பெரியம்மை நோய் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த தினம் இன்று (1977).*

 *இந்த நோய் சோமாலியாவில் உள்ள ஒருவருக்கு கடைசியாக வந்ததாக அறியப்பட்டது. ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் இருந்தது.*

*எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தபின்னர் பெரியம்மை நோயின் தாக்கம் உலகில் குறைய ஆரம்பித்தது.*

வெள்ளி, 25 அக்டோபர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பின் வேண்டுகோளின் மீது விரைவு நடவடிக்கைகள் மேற்கொண்ட நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலருக்கு நன்றி பாராட்டுவோம்!



அன்பானவர்களே!வணக்கம். பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியருக்கு பிழைப்பூதியம்  இன்று வரை (25.10.19)
வழங்கப்பட வில்லை; விரைந்து  வழங்கப்பட வேண்டும் என்று என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பு  வேண்டுகோள் விடுத்தது. இவ்வேண்டுகோள் கிடைக்கப்பெற்றதும் நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் விரைந்து தலையீடு செய்வதாக தெரிவித்தார். இத்தகு நிலையில்   எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் நேற்றைய (24.10.19)தேதியிட்டு,அதாவது முன்தேதியிட்டு பிழைப்பூதிய ஆணையை (தப்பித்துக்கொள்ளும் உள்ளுணர்வில்) பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியருக்கு அளித்துள்ளார். பிழைப்பூதிய ஆணையை மட்டும்  வைத்துக்கொண்டு  தீபாவளியை கடத்திட ; நகர்த்திட இயலாது என்பதை அனைவரும் நன்கறிவர்.
வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்ட சர்க்கரை எனும் வார்த்தையை மட்டும்  வைத்துக கொண்டு மிகச்சிறந்த  பில்டர் காபியை  சுவைக்கவே இயலாது என்பதை அனைவரும்  உணர்ந்திருந்தாலும், தற்போதைக்கு இவ்வளவே இயலும் என்று சொல்லாமல் சொல்லப்பட்டுள ளது என்பது தெளிவாகவே தெரியவருகிறது. பிழைப்பூதியமே தராமல் அலையடித்து, காயடித்து
தன்வழிக்கு கொண்டுவந்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்த  எருமப்பட்டிவட்டாரக் கல்விஅலுவலர் தற்போது முன்தேதியிட்டு பிழைப்பூதிய ஆணை வழங்கிஉள்ளார் எனில் யோசிக்க வேண்டியது நிறையவே உள்ளது. ஏனெனில் , நேற்றைக்கு(24.10.19) பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியரை அழைத்துப்பேசிய எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலகப் பிரிவெழுத்தர் தனக்கும்,தங்களது அலுவலகத்திற் கும்  பிழைப்பூதியம் வழங்க விதிகளில் இடமில்லை என்றும்,எங்களுக்கு அதிகாரமில்லை  என்றும் ,தற்காலிக பணிநீக்கம் செய்த மாவட்டக்கல்வி அலுவலரிடமே சென்று கேளுங கள். நீங்கள் மாவட்டக்கல்வி அலுவலருக்கு 50℅பிழைப்பூதியம் வேண்டி கடிதம் கொடுத்து நாமக் கல் மாவட்டக்கல்வி அலுவலரிடம் பிழைப்பூதியம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று  தலைமையாசிரியருக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் செய்துள்ளார் என்பதே யெதார்த்தமான உண்மைநிலையாகும்.
இத்தகு மனநிலையில், மமதைநிலையில் நேற்றைக்குச் சொன்ன பிரிவெழுத்தர் இன்றைக்கு ஆணை வழங்குவது என்பது ?!
எவ்வாறு?!எப்படி!?.
இதற்கெல்லாம் காரணம் நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலரின் சட்டப்படியான, விதிப்படியான  தலையீடே ஆகும். எது எவ்வகையாயினும் இத்தகு பணிமுன்னேற்றத்தை,இவ்வாறான பிழைப்பூதிய ஆணையை வரவேற்போம்!பொட்டிரெட்டிப்பட்டி பள்ளித்தலைமையாசிரியரின் வங்கிக்கணக்கில் விரைந்து பிழைப்பூதியம் அனுமதிக்கப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்போம்! பிழைப்பூதிய ஆணை வெளியாகிட  காரணமான நாமக்கல்மாவட்டக்கல்வி அலுவலருக்கு நன்றி பாராட்டுவோம்!
மிக்கநன்றி! -முருகசெல்வராசன்.,மாசெ., தநாதொப ஆசிரியர் மன்றம்.,
நாமக்கல்மாவட்டம்.

Go No:334 date of:24.10.2019 GPF Rate of interest for the financial year 2019-2020


சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின் வாதை- என்றுரைப்பார் பாவேந்தர் பாரதிதாசன். நீதிக்கான நீண்ட நெடிய பயணத்தில் தீரமுடன் பயணிப்போம்!குரல் கொடுப்போம்!



அன்பானவர்களே! வணக்கம்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் ,பொட்டிரெட்டிப்பட்டி தொடக்கப்பள்ளியில் எதிர்பாராத விதமாக கழிப்பறைச்சுவர் இடிந்து விழுந்தது.இரண்டு குழந்தைகள் காயமுற்றனர். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விரைவு நடவடிக்கைகளின் காரணமாக , தலையீடுகளின் காரணமாக,நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் முன் முயற்சிகளின் மூலமாக  குழந்தைகளுக்கு உயர்மருத்துவச் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்று நலமுடன் உள்ளனர். பள்ளியில் தொடர்ந்து கல்வி பயில்கின்றனர்.மேற்கண்ட எதிர்பாராத சம்பவத்திற்கு இதர அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், கல்வித்துறைத் அலுவலர்களும் பள்ளித் தலைமையாசிரியரை மட்டும் பொறுப்பாக்கி கைகழுவிக் கொண்டு விட்டு, தற்காலிகபணி நீக்கம் செய்துவிட்டு  இப்பிரச்னையில் தங்களை எல்லாம் பரிசுத்தமாக்கிக் கொண்டுவிட்டனர். ஆனாலும் ஒரு குழந்தையின் பெற்றோர் பெருந்தொகையை குழந்தைக்கு உதவித்தொகையாக வழங்கிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.தமிழக கல்வித்துறை ரூ 50,000/உதவித்தொகையை காசோலையாக குழந்தைகளின் பெற்றோரிடம் அளித்துள்ளது. மேற்கண்ட விபத்துக்குள்ளான  பெற்றோர்  தொடுத்துள்ள வழக்கிற்கு எதிர்உரை அளிப்பதற்குக்கூட தற்காலிக பணிநீக்கத்தில்  வைக்கப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியரை நீதிமன்றத்தில் ஆசராக வேண்டுமென்றுச்சொல்லி சென்னையில் வைத்து வழக்குச்செலவுக்கென சற்றொப்ப ரூ12,000/ வரை எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் ஈவு இரக்கமற்ற வகையில் பணம் பறித்துள்ளார். இத்தகுவழிப்பறிக்கொள்ளைக்கு ஒப்பான செயலை எரும்ப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் துணிச்சலுடன் செய்திட பக்கபலமாக இருப்பது எது?எவர்?என்பது ஆராயப்படவேண்டும .
இத்தோடு இவ்வலுவலுரின் திருப்பணிகள் முடிந்திடவில்லை. தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியரை அலைபேசியில் பேசிடும் நேரங்களில் , வரவழைத்து நேரில் சந்திக்கும் பொழுதில் எல்லாம் ,ரூ30,000/கொடு என்று நச்சரிக்கும் காரியங்களை செய்யத்தவறுவதே இல்லை. இம்மாதிரியாக   அப்பள்ளி ஆசிரியர்களிடமும்  பணம் திரட்டி பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் தந்து வழக்கை முடித்துக்கொள்ளலாம்(!?) என்று அரியபெரிய காரியம் ஆற்றுகிறார்.
ஒரு நீதிமன்ற
வழக்கை ஒரு அரசு அலுவலர் சட்டப்படியாக அணுகிடல் வேண்டும் எனும் பாலபாடம் கூடாது அறியாது  பள்ளியில் பெரியமனிதர்கள் என சிலரை  அழைத்துவைத்தும்,ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க ஆசிரியர்கள் என சிலரை அடையாளம் கண்டறிந்து அழைத்துவைத்துக்கொண்டு பள்ளியை,கல்வியை கட்டபஞ்சாயத்து செய்திடும் இடமாக மாற்றிடுவதற்கு எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலருக்கு எங்கிருந்து ?எவரிடமிருந்து? வழிகாட்டல்  செய்யப்படுகிறது என்பதும் ஆராயப்பட வேண்டும்.
இத்தோடு எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் திறன்மிகு நிர்வாகப்பணிகள் நின்றபாடில்லை. மேற்கண்ட பொட்டிரெட்டிப்பள்ளிக்கு  எங்குமே கேட்டிறாத வகையில், கண்டிறாத வகையில் பள்ளியின் ஆசிரியர்கள் அறுவருக்கும் மாதத்திற்கு ஒருவராக பள்ளித்தலைமையாசிரியர் பொறுப்பேற்று பள்ளியை நடத்திட வேண்டுமென்று சுழற்சிமுறையில் தலைமையாசிரியர் பொறுப்பு வழங் கி எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் மகாகவி பாரதியின் கனவை நனவாக்கியும் (?!)உள்ளார்.
மேற் கண்டவாறு சுழற்சிமுறை தலைமையாசிரியர் நியமனத்திற்கு எங்கிருந்து ?எவரிடமிருந்து ?ஆலோசனை வழங்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்படவேண்டும்.
 மேலும் ,எரும ப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர்  பள்ளித்தலைமையாசிரியர் தற்காலிகபணி நீக்கத்தில் வைக்கப்பட்டுள் ளதால் பக்கத்து ஈராசிரியர் பள்ளியில் இருந்து மாற்றுப்பணி நியமனம் வேறு ஒன்று செய்துள்ளார்.
தற்காலிக பணிநீக்கப்பணியிடத்திற்கு தேவையற்ற வகையில்  மாற்றுப்பணி நியமனம் செய்து ஈராசிரியர் பள்ளியை ஓராசிரியர் பள்ளியாக்கி ஈராசிரியர் பள்ளியை,
இப்பள் ளி மாணாக்கர்களின் கல்வியை சீரழிப்பது குறித்து ஆராயப்படவேண்டும்.
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர்
இம்மாதிரியாக, ஒருமாதிரியாக சட்டத்திற்கு,
விதிகளுக்கு,
செயல்முறைகளுக்கு, நடைமுறை மரபுகளுக்கு
ஒவ்வாதவைகளை , எதிரானவைகளை சுய ஆதாயம் தேடிக்கொள்ளும் பெருவிருப்பத்தோடு நிறைவேற்றிக்கொள்கிறார். ஆனால் சட்டப்படி வழங்கிட வேண்டிய வாழ்வூதியத்தை,பிழைப்பூதியத்தை மட்டும் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்பட்டுள்ள தலைமையாசிரியருக்கு பிடிவாதமாக அனுமதிக்காது  இத்தலைமையாசிரியரை கொடுமைப்படுத்துகிறார். இத்தலைமையாசிரியரின் குடும்பத்தை நிர்கதியாக தெருவில் நிறுத்தி வேடிக்கைப்பார்த்து இரசித்து வருகிறார்.  இத்தலைமையாசிரியரின் குடும்பத்தின் தீபாவளியை கறுப்புத்தீபாவளியாக,துக்க தீபாவளியாக்கி வருகிறார். மாதச்சம்பளமே இல்லாது ,வீட்டோடு முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்தலைமையாசிரியரிடம் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்குக்கு  செலவுத்தொகை வாங்கிடத் தெரிகிறது.
வழக்கை முடிவுக்கு கொண்டுவர இலட்சத்தில் பணம் கொடு என்று அச்சுறுத்திடத் தெரிகிறது. சட்டவிரோதமான காரியமெல்லாம் மிகச்சரியாக திட்டமிட்டுச் செய்திட தெரியும் எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலருக்கு சட்டப்படியாக பிழைப்பூதியம் வழங்கிடத்தெரியாது;தெரியவில்லை (!?)என்று  எவராவது உரைத்தால் ,அது தான் இக்கல்வியாண்டின்(2019-20) ஆகப்பெரிய நகைச்சுவைகளில் ஒன்றாக இருக்கும்(!?). பொட்டிரெட்டிப்பட்டி பள்ளி தலைமையாசிரியருக்கு  பிழைப்பூதியம் கோரியும்,அநியாயமாக பழிவாங்கப்படுவோருக்கு
நீதி கோரியும் , எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் மீது தொடர்ந்து எழுந்துவரும் புகார்களின் முகாந்திரங்களைகணக்கில் கொண்டு,கல்வித்துறைக்கு அவப்பெயரைத்தேடித்தரும் , தவறிழைக்கும் அலுவலரை  பாதுகாக்காது ஒழுங்குநடவடிக்கைகள்  வலியுறுத்தியும் நாமக்கல்மாவட்டக்கல்வி அலுவலரிடம் இன்று(25.10.19) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்,நாமக்கல் மாவட்ட அமைப்பு கோரிக்கை விண்ணப்பம்  அளிக்கிறது. பொதுநன்மைக்கான,
அறத்திற்கான,
நீதிக்கான பெருவிருப்பம் கொண்ட நல்லோர்களின் ஆதரவினை தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல்மாவட்டமைப்பு வேண்டுகிறது. -முருகசெல்வராசன் .
*நிதி உதவிப் பள்ளிகளது  - பள்ளிக்குழு புதுப்பித்தல் - அங்கிகாரம் புதுப்பித்தல் காலதாமதம் காரணமாக - ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தப்படக்கூடாது.*

*தொடக்கக்கல்வி இயக்குநரின் தெளிவுரை.*
👇👇👇👇👇👇👇👇
*🌷அக்டோபர் 25, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------

*ஜெஃப்ரி சாசர் (Geoffrey Chaucer)பிறந்த தினம் இன்று(1343).*

 *இவர் ஒரு ஆங்கில*
*நூலாசிரியரும், கவிஞரும்,*
*மெய்யியலாளரும்,*
*இராஜதந்திரியும் ஆவார்.* *இவர் பல ஆக்கங்களை எழுதியிருந்தபோதும், இவரது நிறைவு* *செய்யப்படாத கன்டபரி கதைகள் (The Canterbury Tales) என்னும்* *ஆக்கத்துக்காகவே இவர் பெரிதும் நினைவுகூரப் படுகிறார்.*  *ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனப்படும் இவர், உள்ளூர்*
*ஆங்கில மொழியின் கலை மரபை விளக்கிய முதல்வர் எனவும் கருதப்படுகிறார்.*