ஞாயிறு, 10 மே, 2020

கொரானா பேரிடர் காலத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஊரடங்குக் காலத்தில்  11.05.2020 (திங்கள்) முதல் 34 வகை கடைகள் திறக்கப்படுகிறது!
தமிழக அரசு அனுமதி !

RTI யில் அதிர்ச்சி தகவல் _ தள்ளி வச்சது ரூ 4லட்சம் கோடியில் வசூல் வெறும் ரூ45 கோடி தான்


மத்தியஅரசே! செம்மொழி தமிழ் ! சீ்ரிளமை மொழி தமிழ்! மறக்கலாமா?!மறைக்கலாமா?


மே 10, வரலாற்றில் இன்று.

நெல்சன் மண்டேலா வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்காவின் முதலாவது ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற தினம் இன்று (1994).

 மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கானநோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. 2008 ஜூன் மாதம் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
மே 10, வரலாற்றில் இன்று.

உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் இன்று.

உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் ஆண்டு தோறும் மே 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும் எலும்புகளையும் தாக்குகிறது. தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமி தொற்று, உணவுப் பழக்கம் போன்ற காரணங்களாலும் மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
மே 10,
வரலாற்றில் இன்று.

நயந்தரா சாகல் பிறந்த தினம் இன்று.

நயந்தரா சாகல்
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்.

அரசியல், வரலாறு போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளார். புதினங்கள் சிலவும் எழுதியிருக்கிறார்.

 இலக்கியத்துக்கான சாகித்திய அகாதமி விருது (ஆங்கிலம்) 1986 ஆம் ஆண்டில் Rich Like Us (1985) என்ற இவரது ஆங்கிலப் புதினத்திற்கு வழங்கப்பட்டது.

இவர் காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டின் மகள் ஆவார்.

 நயந்தரா சாகல் தாம் எழுதிய கதைகளில் இந்தியப் பெண்களின் அறியாமையையும் அடிமைத்தனத்தையும் சித்திரித்துக் காட்டியுள்ளார்.

1970-80 களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளைப் பற்றி எழுதி வந்தார்.

நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் நெருங்கிய உறவினராக இருந்தபோதும், நயந்தரா சாகல் தமக்கென சில கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருந்தார். அவற்றை வெளிப்படையாக எழுதினார் என்பது குறிப்பிடத் தக்கது. ஒன்பது புதினங்களும் எட்டு பிற நூல்களும் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக டேராடூனில் வாழ்ந்து வருகிறார்.
மே 10,
வரலாற்றில் இன்று.

சிப்பாய் கலகம் தொடங்கிய தினம் இன்று (1857).

பிரிட்டிஷாரின் படைகளில் பணியாற்றி வந்த இந்தியர்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் தொடர்பாக எழுந்த அதிருப்தி போராட்டமாக வெடித்தது. குண்டுகளை மூடியிருந்த உறையானது விலங்கினங்களின் கொழுப்புகளால் ஆனது என்ற தகவல் அறிந்த இந்தியர்கள் தங்கள் மத உணர்வுகளுக்கு எதிராக செயல்பட இயலாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 1857ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் மீரட் நகரில் தொடங்கிய கிளர்ச்சியானது, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, குர்கான் ஆகிய இடங்களுக்கும் பரவியது. ஆனாலு‌ம் இப்புரட்சி ஆங்கிலேயருக்கு எதிராக வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. இருப்பினும் இந்தியாவில் சுதந்திரத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்‌ட முதல் அடியாக இது கருதப்பட்டது.
மே 10,
வரலாற்றில் இன்று.


அன்னையர் தினம் இன்று.

அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.

அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

அம்மாவுக்கு,அம்மா என்ற ஒரு ரோல் மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, வேலைக்கு சென்று, குடும்ப பாரத்தை பகிர்ந்து, கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அமைதியாக அன்புடன் சிரித்து நடந்து கொள்ளும் பாங்கு. இத்தனையும் அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.

அந்த அன்னையைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை குளிர்விக்க, ஆச்சரியப்படுத்த, அன்று ஒரு நாளாவது அவளை அமர வைத்து ஓய்வு கொடுத்து, பரிசுகள் கொடுத்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் வாசித்து, அவளுடன் பொழுதை போக்க நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

சரி. இனி அன்னையர் தினம் எப்படி பிறந்தது என்று பார்ப்போம்.

அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக ''மதர்ஸ் டே ஒர்க் கிளப்'' என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, பேணி காத்தல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, எவ்வாறு கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை அளித்தார்.

ஒருமுறை தனது தாய் நடத்தி வந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளியில் போதித்துக் கொண்டு இருக்கும்போது, அன்னையைப் போற்றுவதற்கு ஒரு நாள் ''அன்னையர் தினம்'' வரும் என்று பாடி இருந்தது அவரது காதுகளிலும், நினைவிலும் வந்து வந்து சென்றது.

இந்நிலையில் அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்துவிட, அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில், 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்கு, 1908, மே 10ஆம் தேதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அனுப்பினார். அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார்.

அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28வது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார்.

 இதையடுத்து, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 2வது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் மே 2 ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடினாலும், பிரிட்டனில் ஈஸ்டர் திருநாளில் இருந்து மூன்று வராங்களுக்கு முன்பு வரும் ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுகின்றனர்.

சனி, 9 மே, 2020

தமிழகப் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டப் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் பணிகள் என்ன?
யார் இந்த சி.ரங்கராஜன்?

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தமிழகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைச் சீரமைக்க 24 பேர் கொண்ட பொருளாதார வல்லுநர்கள், பல்துறை நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

24 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரான சி.ரங்கராஜனை தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவி்ட்டுள்ளது.

இந்தக் குழுவில் பல்துறை வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் என 14 பேரும், மாநில அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்து அடுத்த 3 மாதங்களில் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வார்கள்.

இந்தப் பொருளாதார உயர்மட்டக் குழுவின் பணிகள் என்ன?

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் தமிழகப் பொருளாதாரத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உடனடியாக மற்றும் நடுத்தர காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்தல். லாக்டவுன் கொண்டுவரப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு, மற்றும் கூடுதல் செலவினங்கள் முன்தடுப்பு நடவடிக்கைகள், சமூக விலகலைக் கடைப்பிடித்தலால் ஏற்பட்ட தாக்கங்களையும் ஆய்வு செய்தல். தமிழகப் பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிய காலத்திலும், நடுத்தர காலத்திலும் இருக்கும் வாய்ப்புகள், அச்சுறுத்தல்களை ஆய்வறிந்து கூறுதல். தமிழகப் பொருளதார வளர்ச்சிக்கான முக்கியமான துறைகளை கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேவையான உதவிகளைக் கண்டறிதல். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படும் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஆதரவு அளிக்கவும் தமிழக அரசு சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டயதையும் அறிவுறுத்துதல். கரோனா வைரஸால் தமிழக அரசின் நிதிச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பு, நிதிச்சூழலை மேம்படுத்தும் வழிகள் கண்டறிதல். குறிப்பாக வரி விதிப்பை உயர்த்துதல், உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம், முன்னுரிமை அளித்துச் செலவழித்தல், வருவாயைப் பெருக்குதல் போன்றவற்றை ஆய்வு செய்தல். தமிழக அரசுக்கு இருக்கு நிதிப் பிரச்சினைகள், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு எடுக்க வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகளை ஆராய்தல். கட்டுமானத்துறை, சிறு தொழில்கள், சிறு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் நிதி, நிதியுதவி அளித்தலைக் கண்டறிதல்.

இந்தப் பணிகளை பொருளாதார உயர்மட்டக் குழு செய்ய உள்ளது.

யார் இந்த சி.ரங்கராஜன் ?

தமிழகத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி ரங்கராஜன் திருச்சியில் உள்ள தேசியக்கல்லூரியிலும், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியிலும் பட்டம் பெற்றவர். 1964-ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அகமதாபாத் ஐஐஎம்ஏ உயர் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் ரங்கராஜன் இருந்துள்ளார்.

அதன்பின் கடந்த 1982 முதல் 1991-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த சி.ரங்கராஜன், 1992 முதல் 1997-ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்தார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகவும் சி.ரங்கராஜன் பதவி வகித்துள்ளார். ஆந்திராவின் ஆளுநராக இருந்த காலத்தில் 1998 முதல் 1999 வரை ஒடிசாவின் ஆளுநராகவும், 2001 முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பையும் வகித்துள்ளார்.

அதன்பிறகு நாட்டின் 12-வது நிதிக்குழுவின் தலைவராக சி.ரங்கராஜன் நியமிக்கப்பட்டார். அதன்பின் 2005 முதல் 2008-ம் ஆண்டு பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இந்தப் பதவிக்காலம் முடிந்ததும் மாநிலங்களவை எம்.பி.யாகவும், பின்னர் 2009-ம் ஆண்டு மீண்டும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் ரங்கராஜன் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிந்ததும் தனது பதவியை ரங்கராஜன் ராஜினாமா செய்தார்.

இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும், ஹைதராபாத் பல்கலைக்கழக்தின் முன்னாள்துணை வேந்தராகவும், சிஆர் ராவ் கல்வி நிறுவனத்தின் நிறுவனத் தலைவராகவும் ரங்கராஜன் பொறுப்பு வகித்தவர்.

இந்திய அரசின் 2-வது உயர்ந்த விருதான பத்மவிபூஷண் விருது பெற்ற ரங்கராஜன் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸின் தலைவராக உள்ளார்.

இந்தியாவின் வறுமைக்கோடு குறித்த கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரங்கராஜன் தலைமையில் அளிக்ககப்பட்ட அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.நாட்டின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் கணக்கிடும் முறையை ரங்கராஜன் குழு மாற்றியமைத்தது.கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.37,நகர்ப்புறங்களில் ரூ.47 என செலவிடுபவர் வறுமைக்கோட்டிற்கு மேல்் உள்ளவர் என்னும் நிலையை  மாற்றியமைத்தது இவர் தலைமையிலான குழு.இதற்கு முன்னர் இருந்த டெண்டுல்கர் குழு கிராமப்புறத்திற்கு ரூ.33,நகர்ப்புறத்திற்கு ரூ 43 என நிர்ணயம் செய்திருந்தது.
நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சர் மன் மோகன்சிங் தலைமையிலான குழுவிலும்,மேலும் அவர் பிரதமராக இருந்தபோது அவர் தலைமையில் இருந்த பொருளாதார குழுக்களிலும் திறம்பட பணியாற்றியவர் திரு.ரங்கராஜன் ஆவார்.

நன்றி:தி இந்து நாளிதழ்