ஞாயிறு, 10 மே, 2020

மே 10,
வரலாற்றில் இன்று.

சிப்பாய் கலகம் தொடங்கிய தினம் இன்று (1857).

பிரிட்டிஷாரின் படைகளில் பணியாற்றி வந்த இந்தியர்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் தொடர்பாக எழுந்த அதிருப்தி போராட்டமாக வெடித்தது. குண்டுகளை மூடியிருந்த உறையானது விலங்கினங்களின் கொழுப்புகளால் ஆனது என்ற தகவல் அறிந்த இந்தியர்கள் தங்கள் மத உணர்வுகளுக்கு எதிராக செயல்பட இயலாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 1857ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் மீரட் நகரில் தொடங்கிய கிளர்ச்சியானது, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, குர்கான் ஆகிய இடங்களுக்கும் பரவியது. ஆனாலு‌ம் இப்புரட்சி ஆங்கிலேயருக்கு எதிராக வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. இருப்பினும் இந்தியாவில் சுதந்திரத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்‌ட முதல் அடியாக இது கருதப்பட்டது.