ஞாயிறு, 10 மே, 2020

மே 10, வரலாற்றில் இன்று.

நெல்சன் மண்டேலா வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்காவின் முதலாவது ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற தினம் இன்று (1994).

 மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கானநோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. 2008 ஜூன் மாதம் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.