செவ்வாய், 14 ஜூலை, 2020

*🌐ஜூலை 14, வரலாற்றில் இன்று:கவிஞர் பழனி பாரதி பிறந்த தினம் இன்று.*

ஜூலை 14, வரலாற்றில் இன்று.

கவிஞர் பழனி பாரதி பிறந்த தினம் இன்று.

பழ.பாரதி என்று தொடக்கக்காலங்களில் அழைக்கப்பட்டவர் பின்னாளில் தன் தந்தை சாமி பழனியப்பன் பெயரோடு இணைந்து “பழனிபாரதி” என்று அழைக்கப்படுகிறார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவரான பழனிபாரதி அவர்களின் தந்தை திரு சாமி பழனியப்பன் அவர்கள், பாரதியின் மீதிருந்த அதீத அன்பின் காரணமாய் இவருக்கு பாரதி என்று பெயர் வைத்தார். தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்டவர். ஆரம்பக்கால கட்டங்களில் பத்திரிக்கை ஆசிரியராக பணிபுரிந்தார். எம்ஜிஆர் அவர்கள் நடத்திய, வலம்புரிஜான் அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய "தாய்" என்னும் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக தன் எழுத்துப்பணியை தொடங்கினார். பின்னாளில் சினிமாத்துறைக்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு பாடலாசிரியராக தன்னை வடிவமைத்துக்கொண்டார். இப்போதும் கூட "தை" மாத இதழ் ஆசிரியர்களுள் ஒருவராக இருக்கிறார். இவரை உவமைக் கவிஞர் சுரதா " பழநிபாரதி வருங்காலத்தில் ஒரு மகாகவியாக வருவான்" என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவிஞர். அப்துல் ரகுமான், கவிஞர்.வாலி மற்றும் கவிஞர்.அறிவுமதி ஆகியோரின் செல்லப்பிள்ளை கவிஞர் பழனிபாரதி. இளையராஜா . ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர் களுக்கு மட்டுமல்லாமல் சக கவிஞர்களுக்கும் பிடித்தவர்.

திரைப்படத் துறையின் இரும்புக்கதவை ஒரு சாமானியனும் திறமை இருந்தால் திறக்க முடியும் என எல்லோர்க்கும் முன்னுதாரணாக இருந்தவரும் இவரே...

கிட்டத்தட்ட 2000க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கும் இவரின் முதல் பாடல் பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் வரும் "இளம்பிறை விழிகளில் வளர்பிறை கனவுகள் பெளர்ணமி ஆகிறதே..! மரங்களின் கிளைகளில் குயில்களின் ஸ்வரங்களில் சூரியன் மலர்கிறதே..!" என்ற பாடல்.

"காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்!’ - காதலுக்கு அழகிய கௌரவம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பழநிபாரதி. மெலடிகளில் மனதை வருடிக்கொடுத்த இந்தக் கண்ணாடிக் கவிஞன், கோபத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவர் என்பது காற்றின் கையெழுத்து புத்தகத்தைப் படிக்கும்போதுதான் பலருக்கும் தெரியவரும். சமூகத்தின் பிரதிபலிப்பாக மிளிர்பவனே கலைஞன். இந்த வரையறையை உறுதி செய்கிறது பழநிபாரதியின் சமூகச் சாடல். மீசைக்கவிஞனின் பெயரைச் சுமப்பதாலோ என்னவோ... பன்னாட்டு ஊடுருவல் தொடங்கி பாலியல் மீறல்கள் வரை சாடித் தீர்க்கிறது பழநிபாரதியின் எழுத்து. ஒரு பாடலாசிரியராக வாழ்வியலின் மென்மையைப் பதிவு செய்யும் பழநிபாரதி தான் ஒரு பத்திரிகையாளர் என்பதை நிரூபிக்கவும் தவறவில்லை. இன்றைய வாழ்வின் இன்னல்களை, சமூக அவலங்களை, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் உருமாறிப்போகும் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை, கலாசார சீரழிவுகளைக் காற்றின் கையெழுத்தாக நம் நெஞ்சுக்குள் உள்வாங்கும் மூச்சுக்காற்றுபோல் உணர்த்துகிறார் பழநிபாரதி. சமூகத்தின் பன்முகத் தளங்களிலும் ஊடுருவி, வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் தொடங்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வரை பலருடைய பிரதிபலிப்புகளையும் இந்த நூல் பந்திவைக்கிறது. ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படும் இலையாக, இவரின் காற்றின் கையெழுத்து சகல திசைகளிலும் உங்களை இழுத்துச் செல்லும்!

"உங்கள் பெயரில் பாரதி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கீழ் வரும் பதிலை அளித்துள்ளார்.

"என்னுடைய அப்பா கவிஞர் சாமி பழனியப்பன், கவிஞர் பாராதிதாசனின் மாணவராகவும், உதவியாளராகவும் இருந்தார். பாரதியார் மீதும் அதிக பற்றுக்கொண்டிருந்தார். அதனாலேயே எனக்கு 'பாரதி' என பெயர் வைத்தார். தவிர எங்கள் வீட்டில் எல்லோருக்குமே தமிழ் பெயர்தான். பள்ளி பருவத்திலேயே அப்பாவின் பெயரின் சுருக்கமாக 'பழபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன். ஒருமுறை கவிஞர் அறிவுமதிதான், 'பழனிபாரதி' என உன் பெயரை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்குமே என சொல்ல, பின்னர் நானும் 8-ம் வகுப்பு படிக்கும்போது 'பழனிபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன்.

என்னுடைய சிறுவயதில் ஒருநாள் அப்பாவுடன் வெளியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 'கவிதை எப்படி எழுதணும்'னு அப்பாவிடம் கேட்டேன். சொல்கிறேன் எனச் சொன்னவர், வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் கவிதை நூல்களை எனக்குக் கொடுத்தார். படித்துப்பார்...புரியாதவைகளை மட்டும் கேள் எனச் சொன்னதோடு, இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொன்னார். அப்படி சிறுவயதிலேயே எனக்கும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. அதனுடன் அவர்களைப்போல தவறான பாதையில் செல்லாமல், மனநிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." என்று சொன்னார் பழனிபாரதி.

இவர் பெற்ற சில விருதுகள்
--------------------------------------------

சிறந்த பாடலாசிரியர் விருது(சினிமா எக்ஸ்பிரஸ் ) - 1996

சிறந்த பாடலாசிரியர் விருது(தமிழ்நாடு சினிமா விருதுகள்) - 1997

கலைமாமணி - 1998

கலைவித்தகர் - 1998

இளையராஜா இலக்கிய விருது - 2007

புரட்சிக்கவிஞர் விருது

பழனிபாரதி எழுதிய சில புத்தகங்கள்

நெருப்புப் பார்வைகள்

வெளிநடப்பு

காதலின் பின்கதவு

மழைப்பெண்

முத்தங்களின் பழக்கூடை

புறாக்கள் மறைந்த இரவு

தனிமையில் விளையாடும் பொம்மை

தண்ணீரில் விழுந்த வெயில்

வனரஞ்சனி

உன் மீதமர்ந்த பறவை

*🌐ஜூலை 14,* *வரலாற்றில் இன்று:கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான வா.செ.குழந்தைசாமி (V.C.Kulandaiswamy) பிறந்த தினம் இன்று*

ஜூலை 14,
வரலாற்றில் இன்று.

கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான வா.செ.குழந்தைசாமி (V.C.Kulandaiswamy) பிறந்த தினம் இன்று.


கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் (1929).

கரக்பூர் ஐஐடியில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனி, அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றார். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு ‘குழந்தைசாமி மாதிரியம்’ எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் இருந்தவர்.

சர்வதேச தொலைநிலைக் கல்விக் குழுவின் ஆசிய துணைத் தலைவராக, காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுத் தலைவராக பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர்.

நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர்.

சிறந்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தமிழில் 10 கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்களாக மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் 6 உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்து கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002-ல் வெளிவந்தது.

தனது சில கவிதைகள், நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவரது நூல்கள், கட்டுரைகள் பல பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்ம, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.

கலைச் சொல்லாக்கம், புதிய சொற்களை உருவாக்கும் உத்திகள் குறித்து பல நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பணியை லட்சியமாக கொண்டவர். வரிவடிவச் சீரமைப்புப் பணியை கடந்த 36 ஆண்டுகளாக ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார். 247 தமிழ் ஒலி எழுத்துகளைக் குறிப்பிட அதிகபட்சம் 39 குறியீடுகளுக்கு மேல் தேவை இல்லை என்பது இவரது உறுதியான கருத்து.

தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவர், தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழக சமூகத்தின் தலைவர், சென்னை தமிழ் அகாடமி தலைவர், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவர், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார்.

*🌐ஜூலை 14,* *வரலாற்றில் இன்று:கிருமி நாசியான மஞ்சள் தினம் இன்று.*

ஜூலை 14, வரலாற்றில் இன்று.

நம்முடைய கலாச்சாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.

மஞ்சளின் பெருமையைக் கொண்டு சேர்க்கும் வகையில் மஞ்சள் தினம்  ஜூலை 14ஆம் நாள்  கொண்டாடப்பட்டு வருகிறது.

மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை.

உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும்.

மஞ்சள் 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருளாக மஞ்சள் உள்ளது. இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக கருதுகின்றனர்.

மஞ்சளில் குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப்  பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.

மஞ்சளின் பயன்கள் :
உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். 

மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.

மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்சனையும் சரியாகும்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நன்று. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக உதவுகிறது.

மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி  தூளை  நீரில் இட்டு ஊற வைத்து  காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் மற்றும் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
முகத்தோல் பொழிவு  பெற  மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.

திங்கள், 13 ஜூலை, 2020

*✒பள்ளிக்கல்வி-தேசிய நல்லாசிரியர் விருது-விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 11.07.2020 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் நாள்:13.07.2020.*

*✒பள்ளிக்கல்வி-தேசிய நல்லாசிரியர் விருது-விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 11.07.2020 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் நாள்:13.07.2020.*

ஜூலை 31 ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூலை 31 ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

#Transport | #COVID19 | #CoronaLockdown |

*🌐ஜூலை 13,* *வரலாற்றில் இன்று:கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் பிறந்த தினம் இன்று (1944).*

ஜூலை 13,
வரலாற்றில் இன்று.

கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் பிறந்த தினம் இன்று (1944).

வ. ஐ. ச. ஜெயபாலன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார்.

வ. ஐ. ச. ஜெயபாலன்
இலங்கையில் யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தார். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார்.

12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

*🌐ஜூலை 13, வரலாற்றில் இன்று:லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபெற்ற தினம் இன்று (1908).*

ஜூலை 13, வரலாற்றில் இன்று.

லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபெற்ற தினம் இன்று (1908).

*🌐ஜூலை 13,* *வரலாற்றில் இன்று:கவிஞர் வைரமுத்து பிறந்த தினம் இன்று(1953).*

ஜூலை 13,
வரலாற்றில் இன்று.

கவிஞர் வைரமுத்து பிறந்த தினம் இன்று(1953).


தமிழ் சினிமா பாடல்கள் மூலமாக, காதலையும் அதன் சுகத்தையும் ரசிகர்களுக்குக் கொடுத்தவர் வைரமுத்து.

காதல் தோல்வி கண்டால் ஏற்படும் சோகத்தையும், தன் வரிகளில் வலியோடு தந்தவர்.

1980ம் ஆண்டு, ‘நிழல்கள்' திரைப்படத்தில் தொடங்கியது இவரது பயணம்.

இன்றைய தலைமுறையோடும் போட்டியிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது இந்தக் கவிதைக் குதிரை.

நினைத்த நேரத்தில், நினைத்த நிறத்தில், மையூற்றி தன் எழுதுகோலில் பாடல் படைக்கும் வித்தைக்காரர் இந்த வடுகப்பட்டியார்.

சிவப்பு மையை நிரப்பி, ‘காந்தி தேசமே காவல் இல்லையா ‘ என்பார். சட்டென நீல மையை மாற்றி,  ‘ரவிக்கை அடிக்கடி வெடிக்குது’ என்பார்.

இளையராஜாவுடன் இணைந்து இந்தக் கவிதை ராஜா கொடுத்ததெல்லாம், தமிழ் திரை வரலாற்றில் பொக்கிஷமாய் நிலைத்து நிற்பவை.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தனியார் பண்பலைக்கு வைரமுத்து பேட்டியளித்தார்.
அப்போது, நீங்கள் எழுதிய பாடலில்  ’உங்களுக்குப் பிடித்த பாடல் எது?’ என்ற கேள்விக்கு, ‘ நீங்கள் கேட்டவை’ படத்தில் வரும் ‘ கனவு காணும் வாழ்க்கை யாவும் கடந்து போகும் கோலங்கள்’ பாடல்
தான் என்று சொன்னார்.

‘நானோ, இளையராஜாவோ இறக்கும் தருவாயில் இந்தப் பாடலைத்தான் தங்களது இறுதி ஊர்வலத்தில் ஒலிபரப்ப வேண்டும்’ என்றார் வைரமுத்து.

கடந்த 39ஆண்டுகளில், சுமார் 7000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி பத்மபூஷன் விருது முதல் ஏகப்பட்ட விருதுகளை அலங்கரித்த அதிசய மனிதன்.

பொதுவாக, எழுதுபவர்  எல்லோருக்கும் பேச்சு பெரிதாய் கை கூடாது.

ஆனால் நம் கவிஞர் பேசத் தொடங்கினால், அரங்கில் ஆயிரம் பேர்  நிறைந்திருந்தாலும், சில்லறைக் காசின் சத்தம் கூட செவி நிறைக்கும்.

அந்த அளவுக்கு, தன் பேச்சால் எல்லோரையும் கட்டிப்போடும் வல்லமை கொண்டவர் வைரமுத்து.

‘ஆயிரம் தான் கவி சொன்னேன், அழகழகா பொய் சொன்னேன், பெத்தவளே ஓம்பெரும ஒத்தவரி சொல்லலியே' - வைரமுத்துவின் வார்த்தைகளாலேயே இந்தக் கவிதை முழுவதையும் கேட்டு முடித்தவுடன் அம்மாவை காணத் தோன்றும்.

‘ஏதோ பாட்டெழுதினோம், சம்பாதித்தோம், விருதுகளைக் கொண்டு வீடு நிறைத்தோம்’ என்று வாழும் கவிஞன் அல்ல அவர் என்பதை, அவரின் ‘மூன்றாம் உலகப்போர்' வாசித்தால் முழுமையாய் உணரலாம்.

உலக மயமாக்கலால் நம் சமூகம் சந்திக்கப் போகும் பேராபத்தை, ‘கருத்தமாயி' என்ற கதாபாத்திரம் மூலம் இன்றைய தலைமுறையின் தலையில் ஓங்கிக் குட்டியிருக்கிறார் வைரமுத்து.

*🌐ஜூலை 13, வரலாற்றில் இன்று:ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தினால் தமிழகத்தில் போராட்டங்கள் ஆரம்பித்த தினம் இன்று (1953).*

ஜூலை 13, வரலாற்றில் இன்று.

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தினால் தமிழகத்தில் போராட்டங்கள் ஆரம்பித்த தினம் இன்று (1953).

நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த ராஜாஜியின் ஆட்சிக்கு, அவர் கொண்டு வந்த "புதுக்கல்வித் திட்டம்" பெரும் சோதனையாக அமைந்தது. மாணவ மாணவிகளுக்கு தினம் அரை வேளைதான் படிப்பு. மீதி அரை நேரம், ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும்" என்பதே ராஜாஜி கொண்டு வந்த புதுக் கல்வித்திட்டம். இதன் மூலம் பள்ளிக்கூடங்களை 2 ஷிப்ட் நடத்தி, அதிகமான மாணவ்ர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார்.

"என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா?" என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர். "அப்பா செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்றுக்கொள்ளலாம்" என்று ராஜாஜி பதிலளித்தார்.
அவ்வளவுதான். ராஜாஜி கல்வித் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

"இந்த புதிய கல்வித் திட்டம், குலத்தொழிலை வளர்க்கத்தான் உதவும்;
உழவன் மகன் உழவுத்தொழில் செய்யவேண்டும்; வண்டி இழுப்பவர் மகன் வண்டி இழுக்க வேண்டும்; சவரத் தொழிலாளியின் மகன் சவரம் செய்யவேண்டும். இது நல்ல கல்வித் திட்டம் அல்ல; குலக்கல்வித் திட்டம்" என்று எதிர்க்கட்சியினர் கண்டனக்குரல் எழுப்பினர்.திராவிடர் கழகம், இந்தக் கல்வித்திட்டத்தை கடுமையாக எதிர்த்தது.

"மூன்று மாத காலத்துக்குள் இந்த கல்வித்திட்டத்தை கைவிடவேண்டும்.இல்லாவிட்டால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம்" என்று பெரியார் எச்சரித்தார்.இதையொட்டி தி.மு.கழக செயற்குழு, 1953 ஜுலை 13 ந்தேதி சென்னையில் கூடி "மும்முனைப் போராட்டம்" நடத்த முடிவு செய்தது.

அந்த போராட்டத் திட்டம் வருமாறு:-

1. முதல் அமைச்சர் ராஜாஜி கொண்டு வந்துள்ள அரை நேரப்படிப்பு என்பது குலக்கல்வித் திட்டமாகும். அதை எதிர்த்து ஜுலை 14 ந்தேதி ராஜாஜி வீட்டு முன் ஈ.வெ.கி. சம்பத் மறியல் செய்யவேண்டும்.

2. திருச்சி அருகே உள்ள கல்லக்குடியில், டால்மியா என்ற வடநாட்டுக்காரர் சிமெண்ட் தொழிற்சாலை அமைத்ததால், அங்குள்ள ரெயில் நிலையத்துக்கு "டால்மியாபுரம்" என்று பெயர் வைத்துள்ளனர். அதை "கல்லக்குடி" என்று மாற்றவேண்டும். இதற்கான போராட்டத்தை ஜுலை 15 ந்தேதி மு.கருணாநிதி தலைமை தாங்கி நடத்த வேண்டும்.

3. தி.மு.க.வின் போராட்டங்களைப் பிரதமர் நேரு "நான்சென்ஸ்" என்று கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜுலை 15ல் ரெயில் நிறுத்தப்போராட்டம் நடத்த வேண்டும்.

இந்தப் போராட்டம் பற்றிய தீர்மானங்களைச் செயற்குழு நிறைவேற்றிக்கொண்டிருந்தபோதே அங்கு துணை போலீஸ் கமிஷனர் எப்.வி.அருள், ஒரு போலீஸ் படையுடன் வந்தார்.

அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், மதியழகன், எஸ்.வி.நடராசன் ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்."நான்கு தம்பிமார்களுடன் நான் சிறை சென்றாலும், போராட்டத்தை நடத்த ஆயிரக்கணக்கான தம்பிமார்கள் இருக்கிறார்கள்" என்றார்,அண்ணா. ஜுலை 14 ந்தேதி, ராஜாஜி வீட்டு முன் மறியல் செய்ய இருந்த ஈ.வெ.கி.சம்பத் கைது செய்யப்பட்டு விட்டதால் அவருக்குப் பதிலாக சத்தியவாணிமுத்து மறியல் நடத்தச் சென்றார். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.

ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்தது. காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு பகுதியினர், இத் திட்டத்தை கைவிடும்படி ராஜாஜியிடம் வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், காமராஜரின் தீவிர ஆதரவாளருமான டாக்டர் வரதராஜீலு நாயுடு, "கல்வித் திட்டத்தை ராஜாஜி கைவிடவேண்டும். அல்லது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டும்" என்று வற்புறுத்தியார்.
ராஜாஜி மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர்.ஆந்திரா பிரிந்து சென்றபின் சென்னை சட்டசபையில் காங்கிரசுக்கு கணிசமான மெஜாரிட்டி பலம் இருந்தது.
எனினும், காங்கிரசில் ஒரு பகுதியினர் ராஜாஜியை எதிர்த்து ஓட்டளிக்கத் தயாராகி விட்டனர்.எனவே, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறக் கூடிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ராஜாஜிக்கு ஆதரவாக பிரதமர் நேரு ஒரு அறிக்கை வெளியிட்டார். முதல் மந்திரியாக ராஜாஜி நீடிக்கவேண்டும் என்ற தமது விருப்பத்தை அதில் தெரிவித்து இருந்தார்.இதைத்தொடர்ந்து, ராஜாஜி எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் ஒரு தூதுக்குழுவாக டெல்லிக்கு சென்று, நேருவை சந்தித்தனர். "ராஜாஜியின் கல்வித் திட்டத்துக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது எனவே, கல்வித் திட்டத்தை ராஜாஜி வாபஸ் பெற்றால், அவரை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம். பிடிவாதமாக கல்வித் திட்டத்தை திணித்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அழிந்துவிடும்" என்று கூறினார்கள்.

நிலைமையைப் புரிந்து கொண்ட நேரு, "உங்கள் விருப்பப்படி முடிவு செய்யலாம்" என்று கூறிவிட்டார்.இதன் காரணமாக, "பதவியா, கல்வித் திட்டமா?" என்ற கேள்வி ராஜாஜி முன் எழுந்தது. ராஜாஜிக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தனக்கு சரி என்று தோன்றும் கருத்தை எப்போதுமே மாற்றிக்கொள்ள மாட்டார். எனவே, 24.3.1954 அன்று சட்டசபைக்கு வந்த ராஜாஜி, "எனக்கு உடல் நலம் இல்லை. எனவே முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று அறிவித்தார்.

கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்தபோது, "ஒவ்வொரு மனிதனுக்கும், பதவியைவிட அவனது சுயமரியாதைதான் முக்கியமானதாகும்" என்று பதிலளித்தார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் அன்புத் தோழர் திரு.முருகசெல்வராசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் 💐💐💐

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர்
அன்புத் தோழர் திரு.முருகசெல்வராசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்
💐💐💐