புதன், 16 செப்டம்பர், 2020

*🌟மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் சார்பான மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நாமக்கல் அவர்களின் சுற்றறிக்கை.*

*🌟மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவிகளுக்கு  பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் சார்பான மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நாமக்கல் அவர்களின் சுற்றறிக்கை.*

*🌟பள்ளிக்கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பாடநூல்கள், விலையில்லா பொருட்கள் வழங்குதல் - மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - தனிநபர் இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள் கடைபிடித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 16.09.2020.*

*🌟பள்ளிக்கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பாடநூல்கள், விலையில்லா பொருட்கள் வழங்குதல் - மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - தனிநபர் இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள் கடைபிடித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 16.09.2020.*

*அரசு ஊழியர்/ஆசிரியர்களின் பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, தகுதிகாண் பருவம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது போதுமானது. ஆணைகள் தேவையில்லை – முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.!!!*

*அரசு ஊழியர்/ஆசிரியர்களின் பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, தகுதிகாண் பருவம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது போதுமானது. ஆணைகள் தேவையில்லை – முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.!!!*

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

*💊குடற்புழு நீக்கும் நாள் 2020-செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 28 முடிய மூன்று நிலைகள் -ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*💊குடற்புழு நீக்கும் நாள் 2020-செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 28 முடிய மூன்று நிலைகள் -ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*வேறு பள்ளியில் படித்து நமது பள்ளிக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வரும் மாணவர்களின் ஏற்கனவே படித்த பள்ளியின் U DISE NUMBER ஐ தெரிந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் DISE NUMBER*

வேறு பள்ளியில் படித்து நமது பள்ளிக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வரும் மாணவர்களின் ஏற்கனவே படித்த பள்ளியின் U DISE NUMBER ஐ தெரிந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் DISE NUMBER
ஐ பார்க்க கீழே கிளிக் செய்க.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று. பொறியாளர் தினம் இன்று.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.

 பொறியாளர் தினம் இன்று.

விஸ்வேஸ்வரய்யா புகழ் பெற்ற இந்திய பொறியியல் வல்லுனர். 

இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1955ஆம் ஆண்டு பெற்றவர். 

இவர் பிறந்த செப்டம்பர் 15 ஆம் நாள் இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

இவர் 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள மைசூர் அரசுக்கு உட்பட்ட முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். 

இவர் தந்தை சீனிவாச சாஸ்திரி, தாயார் வெங்கசம்மாள். 

இவர் தந்தை இந்து சமய நூல்களில் புலமையும், சமஸ்கிருதத்தில் பண்டிதராகவும் இருந்தார். ஆயுர்வேத மருத்துவமும் செய்து வந்தார்.

விஸ்வேஸ்வரய்யாவின் முன்னோர்கள் ஆந்திர பிரதேசத்திலிருந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே மைசூருக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

இவர் பிறந்த நாளான செப்டம்பர் 15 கர்நாடகாவில் பொது விடுமுறை நாளாகும். 

இவர் 15ஆவது வயதில் தந்தையை இழந்தார். பிறகு விஸ்வேஸ்வரய்யா தனது பள்ளிப்படிப்பை சிக்கபல்லபுராவிலும், பெங்களூரிலும் படித்தார். 

பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். 

பின்பு புனே அறிவியல் கல்லூரியில் கட்டிட பொறியியல் படிப்பு முடித்ததும் விசுவேசுவரய்யா மும்பாய் பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். 

பின் இவர் இந்திய பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டார். இவர் கடுஞ்சிக்கலான பாசன அமைப்பை தக்காண பகுதியில் செயல்படுத்தினார். 

பின் இவர் தானாக இயங்கும் மதகை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 

1903 ஆம் ஆண்டு புனேக்கு அருகில் கடக்வசல (Khadakvasla) நீர்த்தேக்கத்தில் இவரது தானியங்கி மதகு முதலில் நிறுவப்பட்டது. 

இந்த மதகுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளால் இவ்வமைப்பு குவாலியருக்கு அருகில் உள்ள டைக்ரா அணையிலும், மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நிறுவப்பட்டது.

ஐதராபாத் நகரை பாதுகாக்க இவர் வடிவமைத்த வெள்ள தடுப்பு முறை அனைவரிடமும் பெரும்புகழை பெற்று தந்தது. 

மேலும் விசாகப்பட்டிணம் துறை முகத்தை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் அமைப்பை உருவாக்கவும் இவர் காரணமாகயிருந்தார். 

விஸ்வேஸ்வரய்யா காவிரியின் குறுக்கே கிருஷ் ணராஜ சாகர் அணை கட்டுமானத்தை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை மேற்பார்வையிட்டார். 

அப்போது இந்த நீர்த்தேக்கம் ஆசியாவிலேயே மிகப் பெரியதாக இருந்தது. 

1894 ஆம் ஆண்டு மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் ஆசியாவிலேயே முதல் நீர் மின் உற்பத்தி ஆலையை அமைக்க காரண மானார். 

திருப்பதியிலிருந்து திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு காரணமாக இருந்தார். 

அதனால் இவர் நவீன மைசூர் அரசின் தந்தை என அழைக்கப்படுகிறார். 

1908 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற பின் விஸ்வேஸ்வரய்யா மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். 

மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராசரின் ஆதரவுடன் பல சிறப்பான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார். 

கிருஷ்ணராஜ சாகர் அணை, சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி திட்டம், பத்ராவதி எஃகு ஆலை, பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாம ராஜேந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகா டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல ஆலைகள் உருவாக இவர் காரணமாக இருந்தார். 

1917 ஆம் ஆண்டு பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார். 

பின்பு இது விஸ்வேஸ்வரய்யா பொறியியல் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

இப் பொறியியல் கல்லூரி பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

மைசூர் திவானாக இருந்த போது ஆற்றிய பொதுச் சேவையை பாராட்டி இந்தியப்பேரரசின் நைட் கமாண்டர் (Knight Commander) என்ற பட்டம் இவருக்கு பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது. 

1955 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பின்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

இவர் லண்டனை மையமாக கொண்ட பன்னாட்டு கட்டுமான கழகத்தின் மதிக்கத்தக்க உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார். 

இந்திய அறிவியல் நிறுவனத்தின் fellowship இவருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டங்கள் வழங்கின. 

1920இல் இந்தியாவின் மீள்கட்டமைப்பு, 1934இல் திட்ட மிட்ட இந்தியப் பொருளாதாரம் என்ற நூல்களை எழுதினார். 

கிராமங்களைத் தொழில் மயமாக்குதல் பற்றியும், இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சிப் பற்றியும், வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் சில நூல்கள் எழுதியுள்ளார்.

இவர் பெயரில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. 

விஸ்வேஸ்வரய்யா தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகம், பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் நுட்பப் பல்கலைகழகம், மஹாராஷ்டிராவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில் நுட்பக் கழகம், பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு எக்கு தொழிற்சாலை ஆகியவை. 

இவர் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் காலமானார்.

பாரத ரத்னா பட்டம் வாங்கிய விஸ்வேஸ்வரய்யா 102 ஆண்டு வரை வாழ்ந்தவர். நோய் நொடி அவரை அணுகியதில்லை. பத்திரிக்கையாளர்கள் அவரிடம் உங்களுடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன என்று கேட்ட போது அவர் தன்னுடைய பத்து விரல்களை காட்டி விட்டு ஒவ்வொன்றாய் மடக்கிக் கொண்டே சொன்னாராம்.

1. பாதி வயிறு உணவு சாப்பிட்டு, கால்வயிறு தண்ணீர் குடித்து, மீதி கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். 

2. உதட்டில் எப்போதும் புன்னகை இருக்க வேண்டும்.

3. எட்டு மணிநேர தூக்கம் கட்டாயம் வேண்டும்.

4. மனசாட்சியின் குரலுக்கு மதிப்பு தர வேண்டும்.

5. பிறரை சந்தோசப் படுத்தி நீயும் சந்தோசப் பட வேண்டும்.

6. சம்பாதிக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்த பழகிக் கொள்ள வேண்டும்.

7. முதுமைப் பருவம் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால் தங்களின் பெயரில் சிறிது சேமிப்பு இருக்க வேண்டும்.

8. மனைவியிடம் பிணக்கு இல்லாமல் இணக்கமாய் இருப்பது ரொம்ப முக்கியம். 

9. பேரன், பேத்திகள் இருந்தால் அவர்களின் மனநிலைக்கு ஏற்ற மாதரி விளையாட வேண்டும்.

10. எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை குறிக்கோளாய் வைத்துக் கொண்டு முழு மனதாய் உழைக்க வேண்டும். 

இந்த பத்தையும் பொன் மொழிகளாய் பாவித்து அதன் படி நடந்தால் 100 வயது நிச்சயம். இதில் ஒன்று குறைந்தாலும் நம் ஆயுளில் பத்து ஆண்டுகள் குறைந்து விடும்.

செப்டெம்பர் 15 , வரலாற்றில் இன்று.இந்திய அரசு தொலைகாட்சி நிறுவனமான தூர்தர்ஷன் துவக்கப்பட்ட தினம் இன்று (1959).

செப்டெம்பர் 15 , வரலாற்றில் இன்று.

இந்திய அரசு தொலைகாட்சி நிறுவனமான தூர்தர்ஷன் துவக்கப்பட்ட தினம் இன்று (1959).

தூர்தர்ஷன் தொலை-காட்சி  என்பது இந்தியாவின் பொதுத் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் என்பதோடு இந்திய அரசாங்கத்தின் ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பாரதியின் ஒரு பிரிவாகும். பதிவகம் (studio) மற்றும் அலைபரப்பிகள் (transmitters) ஆகிய உள்கட்டுமான வகையில் இது உலகிலுள்ள மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். அண்மையில் இது எண்ணிம நிலப்பரப்பு அலைபரப்பிகள் (Digital Terrestrial Transmitters) வழி ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கையும் ஆதிக்கமும் அதிகரித்துள்ள காலகட்டத்தில் தூர்தர்ஷனுக்கான மக்கள் வரவேற்பு மிகவும் குறைந்துவிட்டது..

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.சர்வதேச மக்களாட்சி தினம் இன்று.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.

சர்வதேச மக்களாட்சி தினம் இன்று.

சனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தைக் கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது. அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என ஐ.நா. கூறுகிறது.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.

'Anna the life and times of C.N.Annadurai' நூலில் இருந்து. 

முதலமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள்
யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்

பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்கு கண்டன கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா என சொல்லி அதை 'கண்ணீர் துளிகள்' என்று மாற்றினார் 

முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார்.

திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை. பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தை சுமப்பது வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் . கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION. பத்திரிக்கைகள் DMK என குறிப்பிட அப்படியே ஆகிப்போனது 

”கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல்
இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது” என்றார்.

அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து,  பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்று ஒப்புக்கொண்டார். NUISANCE என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்; நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம் .

உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார்; பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு முறை கூட விமர்சித்து கடுஞ்சொல் சொன்னதில்லை. இவர்களின் விரல்களை வெட்டுவேன் என சொன்ன காமராஜரை குணாளா குலக்கொழுந்தே என்று அழைத்திருக்கிறார்.
பிரிந்து போன சம்பத் தோழர் அண்ணாதுரை என பெயர் சொல்லி விளித்த பொழுது வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன் என்கிறார் 

சிவாஜி கட்சியை விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,”அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?”என கேட்டாராம்

அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார்.  பெரியார் தவிர தலைவர் இல்லை என சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ; பொது செயலாளர் பதவியை தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு கொடுத்திருக்கிறார் . அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி தேர்தலில் போட்டியிட்டவர் அவர். 

சட்டமன்றம் முதல் முறை போனதும் நீங்கள் போகும் ரயில் வண்டி. புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள் என கேட்டார் அண்ணா. 

காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் என கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார் 

பொடி போடுவதை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். அமெரிக்காவில் காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ். 

அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது .தலைப்பில்லை என தலைப்பு தந்தாலும் பேசினார் ; இவர் பல்கலைகழகத்துக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு. 
எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் என கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி என கேட்டாராம். 

சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரை தமிழர்கள் கொண்டாடினார்கள்; மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் . அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற அளவுக்கு கூட்டம் அவர் மீது அன்பு காட்டியது 

தேர்தலில் வென்று விட்டோம் என சொல்கிறார்கள் , காமாரஜரை தோற்கடித்து விட்டார்களே என வருத்தப்படுகிறார் ; சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது மத்தியில் ஒருவர் மந்திரி ஆவது போனதே என வருந்துகிறார் . அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதல்வர் என்ற பொழுது ,”வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் “என்று அப்பாவியாக சொன்னார் 

”எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது” என இமேஜ் பார்க்காமல் சொன்னவர் 

சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்; சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர்  மாற்றம் பண்ணினார் ; கல்விக்கு காங்கிரசை விட ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் .

சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம். இதை படித்துவிட்டு செத்துப்போகலாம் என்றாராம் உச்சபட்சமாக.  அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் கூடி இருந்தனர் ; அது கின்னஸ் சாதனை.

போர்ச்சுகல் நாட்டிடம் இருந்து கோவாவை விடுவிக்கும் போராட்டத்தில் ரானடே ஈடுபட்டு போர்ச்சுகல் சிறையில் இருந்தார். போப்பை கண்ட அண்ணா ரானடேவை விடுவிக்க வேண்டுகோள் விடுத்தார். விடுதலையான ரானடே அண்ணாவிற்கு நன்றி சொல்ல ஓடோடி வந்தார். அண்ணாவின் இறுதி ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை அண்ணாவுடையது.

ஆசிரிய நண்பர்களே, நீங்கள் தயார் செய்து மாணவர்களுக்கு அனுப்பும் Video File Size அதிகமாக உள்ளதா...

👉 ஆசிரிய நண்பர்களே, நீங்கள் தயார் செய்து மாணவர்களுக்கு அனுப்பும் video File size  அதிகமாக உள்ளதா...

அதற்கு தீர்வு இதோ...

👉 1GB Video File Size ஐ,  20/30  MB க்கு, ஒரு நிமிடத்தில் Quality குறையாமல் மாற்றலாம்.

👉 300MB,500 MB அளவு உள்ள video Files ஐ, 10 MB க்கு மாற்ற முடியும்.

👉 உங்களது Video File Size எவ்வளவு அதிகமாக இருந்தாலும், Quality குறையாமல் நீங்கள் விரும்பும் File Size க்கு, மாற்ற முடியும்.

👉 உங்கள் மொபைலில் ஒரு நிமிடத்தில் Video File Size ஐ, குறைக்கலாம்.

By,
G.Anandhakannan,
Dream Teacher Awardee,
Kallakurichi.