வியாழன், 17 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 17,வரலாற்றில் இன்று. திரு.வி.க என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரம் அவர்களின் நினைவு தினம் இன்று.

செப்டெம்பர் 17,
வரலாற்றில் இன்று.

 திரு.வி.க என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரம் அவர்களின் நினைவு தினம் இன்று.

1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று விருத்தாசலம் முதலியாருக்கும், சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாக பிறந்தார்.

1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார்.  

1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.  சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது.  

இதனால் கல்வி தடைப்பட்டது.  நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச் 
செல்லவில்லை.

மீண்டும் 1898 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் வரை பயின்றார்.  

ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால், இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து நின்றார்.  

1901 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயின்று தேர்ந்தார்.   

1907 இல் கதிரைவேலர் மறைவு நிகழ்ந்தது.  விபின் சந்திர பால் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது அதுமுதல் தேசியத்தின் பொருட்டுப் போராடத் துணிந்தார்.  

1907 முதல் 1908 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஸ்பென்சர் கம்பெனியில் பணி செய்தார்.  

அங்கே இந்திய உரிமைகளைப் பற்றி சக ஊழியர்களிடம் படித்துக்காட்டுவார்.  இதனால் அக்கம்பெனியின் மேலாளர் திரு.வி.க வை எச்சரிக்க நேர்ந்தது.  

இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத திரு.வி.க அப்பணியைத் துறந்தார்.  1908 ஆம் ஆண்டு ஜஸ்டின் சதாசிவ ஐயருடன் தொடர்பு ஏற்பட்டது.  

1910 ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் அம்மையாரைச் சந்தித்தார்.  அம்மா என்று தான் திரு.வி.க பெசண்டை அழைத்து மகிழ்வார்.  

1910 முதல் 1916 வரை வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1912 ஆம் ஆண்டு கமலாம்பிகை என்னும் அம்மையாரை மணந்தார்.  மணவாழ்க்கை அவருக்கு இனிப்பூட்டுவதாய் இருந்தது.  

தன்னிடமிருந்த மிருகப் போக்கை மாற்றியது மணவாழ்க்கை தான் என்று தன்னுடைய குறிப்பில் திரு.வி.க குறிப்பிட்டுள்ளார். 

1914 ஆம் ஆண்டு சுப்புராய காமத், எஸ்.சீனிவாச ஐயங்கார் தொடர்பு ஏற்பட்டது.  

1916 ஆம் ஆண்டு வெஸ்லி கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  

1917 ஆம் ஆண்டு பி.பி. வாடியா உடன் தொடர்பு ஏற்பட்டது.  பின்னாளில் திரு.வி.க தொழிற்சங்கம் தொடங்குவதற்கு வாடியாவின் தொடர்பு தான் காரணமாக இருந்தது.

1917 ஆம் ஆண்டு தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டி பணியை விடுத்தார்.  

டிசம்பர் 7ஆம் நாள் தேசபக்தன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.  

தேசபக்தனில் இரண்டரை அண்டுகள் பணியாற்றினார் அதன் பின்னர் அவ்விதழின் செயலாளருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக இதழ்ப்பணியை விடுத்தார்.  

பின்னர் நவசக்தி என்னும் இதழை நண்பர்களின் துணையுடன் தொடங்கி நடத்தி வந்தார்.

1918 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் தொடங்கினார்.  சென்னைத் தொழிலாளர் சங்கம் என அதற்குப் பெயரிட்டார்.  

இச்சங்கத்திற்கு திரு.வி.க துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.  

இதே ஆண்டில் தான் அவரின் துணைவியார் இயற்கை எய்தினார். 

1919 ஆம் ஆண்டு முதன் முதலாகக் காந்தியடிகளைச் சந்தித்தார்.  இவ்வாண்டில் தான் பெரியாரின் நட்பும் திரு.வி.கவுக்குக் கிடைக்கப்பெற்றது.  திலகரை வ.உ.சி உடன் சென்று சந்தித்தார்.  

1920 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் சங்கம் தோற்றம் பெற்றது.  இவ்வாண்டு அக்டோபர் திங்களில் நவசக்தி என்னும் இதழைத் தொடங்கினார்.

1921 ஆம் ஆண்டு ஆளுநர் வெலிங்டன் பிரபு இவரை அழைத்து நாடுகடத்தி  விடுவதாக மிரட்டினார்.  
ஆனால் அதற்கு திரு.வி.க அஞ்சவில்லை.  

சர். தியாகராய செட்டியாரின் உதவியால் நாடு கடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டது. 

1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது.  

தலைவர் திரு.வி.க வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா மாநாட்டிலிருந்து வெளியேறினார்.  இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

1944 ஆம் ஆண்டு திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்தது.  1947 ஆம் ஆண்டு டிசம்பர் 7 வரை காங்கிரஸ் ஆட்சியில் திரு.வி.க வுக்கு வீட்டுச் சிறைவாசம் விதிக்கப்பட்டது.  

1949 இல் தன்னுடைய ஒரு கண் பார்வையை இழந்தார், பின் இரு கண்களுமே இழக்க நேரிட்டது.  

1953 செப்டெம்பர் 17 அன்று காலமானார்.

செப்டெம்பர் 17, வரலாற்றில் இன்று.பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம் இன்று.

செப்டெம்பர் 17, வரலாற்றில் இன்று.

பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம் இன்று.
செப்டெம்பர் 17, வரலாற்றில் இன்று.

பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம் இன்று.

யார் இந்த பெரியார்? ஏன் அவரைப் பற்றி இன்றும் பேசுகிறோம்?

பெரியாரை இன்றைய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ள உதவும். 

படியுங்கள்.

"ஏனெனில்_அவர்_பெரியார்"
-----------------------------------
பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது,....
செருப்பால் அடிக்கப்படுகிறது,....
இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார். 
அவரே சொன்னார்... 
'பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’

கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார் பெரியார். நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். ராத்திரி நேரத்தில் பயணம் செய்யும்போது சும்மா இருப்பார்களா? திடீரென, கயிறுபோல ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்தது. அது... பச்சைப் பாம்பு. எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, வண்டியை வேகமாகச் செலுத்தச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனதும், வண்டியைத் திருப்பச் சொல்லி வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார். வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், 'அதுதானே பார்த்தேன்! நான் போகும்போது என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்’ எனச் சொன்னார். அவர் மீது செருப்பு வீசப்பட்டதே மற்றவர்களுக்கு அப்போதுதான் தெரியும்.

30 ஆண்டுகள் கழிந்தது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 'செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்’ என கவிஞர் கருணானந்தம் எழுதினார். பெரியாரின் 'ராசி’ இறப்புக்குப் பிறகும் செருப்பு மாலைகள்!

ஈரோட்டில் மளிகைக்கடை மண்டிவைத்து வெறும் ராமசாமி நாயக்கராக செல்வத்தில் புரண்டு கிடக்காமல், அவர் தலையெழுத்து... தமிழர்களுக்காக இரவும் பகலும் வெயிலிலும் மழையிலும் அலைந்து, குடல் இறக்கம் காரணமாக மாட்டு வயிறுபோல தொங்கிய தன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு திரிந்து, சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலும் மூத்திரச் சட்டியுடன் மேடையில் அமர்ந்து, சிறுநீர் பிரியும்போதெல்லாம் 'அம்மா... அம்மா...’ என மரண அவஸ்தைப்பட்டு, அந்தக் கிழவன் பாடுபட்டதன் வினை என்ன தெரியுமா? அவரது படத்துக்கு ஓர் இளைஞர் செய்கிறார் சிறுநீர் அபிஷேகம்!

'உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான்’ எனச் சொன்னவர் பெரியார். சாதியை எதுவெல்லாம் காப்பாற்றியதோ அதையெல்லாம் எதிர்த்து பிரசாரம் செய்தார். மதம், சாஸ்திரம், கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் அதிகம் பேசியது அதனால்தான். 'எனக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இழிதன்மைகள்தான். அவர்களைச் சுதந்திரம் அடையச் செய்வதே என் கண் நோய்க்கான தீர்வு’ என்பதைத் தெளிவாகச் சொன்னவர் அவர். அந்த லட்சியத்துக்காகப் பேசியவர்; போராடியவர். அதில் சிறுபகுதிதான் கடவுள் மறுப்பு. 'சாதியை மதம் காப்பாற்றுகிறது. மதத்தைக் கடவுள் படைத்தார் என்றால், அப்படிப்பட்ட கடவுளும் மதமும் தேவையா?’ என்றே அவர் கேட்டார்.

கடவுள் மறுப்பு வாசகங்களை, தன் சிலைக்குக் கீழே செதுக்கிவைத்திருக்கச் சொன்னதே, அவரது கிண்டலான எதிர்வினைதான். 'சும்மா சிலையை மட்டும் வைத்தால் சில ஆண்டுகளுக்குப் பின், இவர் ஏதோ சாமியார்போல என நினைத்து மாலை போட்டுக் கும்பிட ஆரம்பிச்சுருவான். அப்படி ஆகிவிட கூடாதுனுதான் இப்படி எழுதச் சொன்னேன்’ என்றார்.

கடவுள் இல்லை என நா தழும்பேறி நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்க வேண்டியது.

தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி’ எனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா?

'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு’ என்பதுதான் பெரியாரின் நடத்தை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர்.

சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்’ இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார். ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்’ எனத் தலைப்பிட்டு பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக நிபந்தனை இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ எனப் பகிரங்கமாகப் பணிந்தார்.

சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர்.

 அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும்,மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள். 'சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.

கடவுளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பெரியாரைச் சந்திக்க நினைக்கிறார் குன்றக்குடி அடிகளார். ஈரோடு வந்த அடிகளார், பெரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். 'நீங்கள் மகா சந்நிதானம். என்னைத் தேடிவரக் கூடாது. நானே வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு பெரியார் சென்றார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார் அடிகளார். 'மகா சந்நிதானம் எழுந்து நிற்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரப் போகிறார். 'இந்த இருக்கையில் இரண்டு பேர் உட்காரலாம். என் அருகில் உட்காருங்கள்’ என அடிகளார் சொல்ல, 'சந்நிதானத்துக்குச் சமமாக நான் உட்காரக் கூடாது’ என மறுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 'சாதியை உங்கள் கடவுளும் மதமும் ஒழிக்கவில்லையே’ என பெரியார் சொல்ல, 'சாதியை கடவுள் உருவாக்கவில்லை’ என அடிகளார் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதைத் தட்டிக் கேட்கவில்லையே’ என பெரியார் சொல்ல... அந்தச் சந்திப்புதான் இருவரையும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் கரம் கோக்கவைத்தது.

அப்போது பெரியார் சொல்லி அடிகளார் குலுங்கிச் சிரித்த ஜோக்: 'எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’

அடிகளாரைப் பார்க்க, அவரது குன்றக்குடி மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீகமாக பூரணக் கும்ப மரியாதை தரப்பட்டது. அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை. சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, 'விபூதியை நான் எடுத்துப் பூசிக்கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார். அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவரின் படத்தை இன்று சிறுநீரால் அவமதிக்கிறார்கள்.

பிராமண துவேஷி என அவர் தூற்றப்படுகிறார். உண்மையில், அவர் சாதி துவேஷிதானே தவிர,  குறிப்பிட்ட ஒரு சாதியின் துவேஷி அல்ல. எல்லா சாதிகளையும் அதன் ஆணவத்தையும் கண்டித்தவர். சிலர் 'தங்களை ஆண்ட பரம்பரை’ எனச் சொன்னபோது, 'பட்டாளத்தில் இருந்த எல்லாரும் ஆண்ட பரம்பரைதான்’ என நெத்தியடி அடித்தவர். 'பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது’ என்றவர்.

அனைத்துக்கும் மேலாக தான் சார்ந்த சமூகத்தையே விமர்சிக்கத் தயங்காதவர். ஒருவன் தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த சாதியை விமர்சிப்பதற்குத்தான் வீரம் வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு கிராமத்தில் மரியாதைக் குறைவாக நடத்தியபோது, 'இரண்டு பேருக்கும் என்ன வித்திசாயம்?’ எனக் கேட்டவர். 'இந்து’ கஸ்தூரி சீனிவாசன், நியூஸ் ஏஜென்சியை ஆரம்பித்தபோது பணம் முதலீடு செய்தார். சிம்சன் அனந்த ராமகிருஷ்ணன் இயந்திரக் கலப்பையை உற்பத்தி செய்தபோது பார்க்கப் போனார்.

மகா பெரியவர் காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள் மயிலாப்பூருக்கு வந்தபோது, திராவிடர் கழகத்தினர் அங்கு குழும, ரசபாச சூழல் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த பெரியார், 'பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது உங்கள் வேலை’ என தி.க-வினருக்கு அறிவுறுத்தினார்.

கவியோகி சுத்தானந்த பாரதி தனது வீட்டுக்கு வந்தபோது, பூட்டப்பட்டுக் கிடந்த பூஜை அறையைத் திறந்துவிட்டு, தட்டில் பூ கொண்டுவைத்தவர் பெரியார். வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர்.

அவரது படத்துக்கா இன்று சிறுநீர் கழிப்புகள்?

அந்தக் காலத்தில் மாலி என்பவர் 'கடவுள் எங்கே?’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தினார். பெரியாரைக் கடுமையாகத் திட்டிய நாடகம் அது. ம.பொ.சி-யின் நண்பர் அவர். பெரியாரைச் சந்திக்கப் போன ம.பொ.சி., தன்னோடு மாலியையும் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். ' 'கடவுள் எங்கே?’ நாடகம் போட்ட பையனா நீ?’ எனக் கேட்டார். 'உங்களை எதிர்த்து அதில் நிறைய வசனங்கள் வருது’ என்றார் மாலி. 'அதனால் என்ன... உன் கருத்தை நீ சொல்ற... என் கருத்தை நான் சொல்றேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லை. மக்கள் முடிவு பண்ணிப்பாங்க’ என இந்தச் சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுத்தாரோ அது அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. அதைப் பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல.

 'மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை’ எனச் சொன்ன அவர், 'எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றும் சொன்னார்.  

ஏனெனில் அவர் தான் பெரியார்.

புதன், 16 செப்டம்பர், 2020

*🌟மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் சார்பான மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நாமக்கல் அவர்களின் சுற்றறிக்கை.*

*🌟மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவிகளுக்கு  பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் சார்பான மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நாமக்கல் அவர்களின் சுற்றறிக்கை.*

*🌟பள்ளிக்கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பாடநூல்கள், விலையில்லா பொருட்கள் வழங்குதல் - மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - தனிநபர் இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள் கடைபிடித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 16.09.2020.*

*🌟பள்ளிக்கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பாடநூல்கள், விலையில்லா பொருட்கள் வழங்குதல் - மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - தனிநபர் இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள் கடைபிடித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 16.09.2020.*

*அரசு ஊழியர்/ஆசிரியர்களின் பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, தகுதிகாண் பருவம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது போதுமானது. ஆணைகள் தேவையில்லை – முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.!!!*

*அரசு ஊழியர்/ஆசிரியர்களின் பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, தகுதிகாண் பருவம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது போதுமானது. ஆணைகள் தேவையில்லை – முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.!!!*

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

*💊குடற்புழு நீக்கும் நாள் 2020-செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 28 முடிய மூன்று நிலைகள் -ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*💊குடற்புழு நீக்கும் நாள் 2020-செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 28 முடிய மூன்று நிலைகள் -ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*வேறு பள்ளியில் படித்து நமது பள்ளிக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வரும் மாணவர்களின் ஏற்கனவே படித்த பள்ளியின் U DISE NUMBER ஐ தெரிந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் DISE NUMBER*

வேறு பள்ளியில் படித்து நமது பள்ளிக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வரும் மாணவர்களின் ஏற்கனவே படித்த பள்ளியின் U DISE NUMBER ஐ தெரிந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் DISE NUMBER
ஐ பார்க்க கீழே கிளிக் செய்க.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று. பொறியாளர் தினம் இன்று.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.

 பொறியாளர் தினம் இன்று.

விஸ்வேஸ்வரய்யா புகழ் பெற்ற இந்திய பொறியியல் வல்லுனர். 

இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1955ஆம் ஆண்டு பெற்றவர். 

இவர் பிறந்த செப்டம்பர் 15 ஆம் நாள் இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

இவர் 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள மைசூர் அரசுக்கு உட்பட்ட முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். 

இவர் தந்தை சீனிவாச சாஸ்திரி, தாயார் வெங்கசம்மாள். 

இவர் தந்தை இந்து சமய நூல்களில் புலமையும், சமஸ்கிருதத்தில் பண்டிதராகவும் இருந்தார். ஆயுர்வேத மருத்துவமும் செய்து வந்தார்.

விஸ்வேஸ்வரய்யாவின் முன்னோர்கள் ஆந்திர பிரதேசத்திலிருந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே மைசூருக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

இவர் பிறந்த நாளான செப்டம்பர் 15 கர்நாடகாவில் பொது விடுமுறை நாளாகும். 

இவர் 15ஆவது வயதில் தந்தையை இழந்தார். பிறகு விஸ்வேஸ்வரய்யா தனது பள்ளிப்படிப்பை சிக்கபல்லபுராவிலும், பெங்களூரிலும் படித்தார். 

பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். 

பின்பு புனே அறிவியல் கல்லூரியில் கட்டிட பொறியியல் படிப்பு முடித்ததும் விசுவேசுவரய்யா மும்பாய் பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். 

பின் இவர் இந்திய பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டார். இவர் கடுஞ்சிக்கலான பாசன அமைப்பை தக்காண பகுதியில் செயல்படுத்தினார். 

பின் இவர் தானாக இயங்கும் மதகை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 

1903 ஆம் ஆண்டு புனேக்கு அருகில் கடக்வசல (Khadakvasla) நீர்த்தேக்கத்தில் இவரது தானியங்கி மதகு முதலில் நிறுவப்பட்டது. 

இந்த மதகுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளால் இவ்வமைப்பு குவாலியருக்கு அருகில் உள்ள டைக்ரா அணையிலும், மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நிறுவப்பட்டது.

ஐதராபாத் நகரை பாதுகாக்க இவர் வடிவமைத்த வெள்ள தடுப்பு முறை அனைவரிடமும் பெரும்புகழை பெற்று தந்தது. 

மேலும் விசாகப்பட்டிணம் துறை முகத்தை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் அமைப்பை உருவாக்கவும் இவர் காரணமாகயிருந்தார். 

விஸ்வேஸ்வரய்யா காவிரியின் குறுக்கே கிருஷ் ணராஜ சாகர் அணை கட்டுமானத்தை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை மேற்பார்வையிட்டார். 

அப்போது இந்த நீர்த்தேக்கம் ஆசியாவிலேயே மிகப் பெரியதாக இருந்தது. 

1894 ஆம் ஆண்டு மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் ஆசியாவிலேயே முதல் நீர் மின் உற்பத்தி ஆலையை அமைக்க காரண மானார். 

திருப்பதியிலிருந்து திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு காரணமாக இருந்தார். 

அதனால் இவர் நவீன மைசூர் அரசின் தந்தை என அழைக்கப்படுகிறார். 

1908 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற பின் விஸ்வேஸ்வரய்யா மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். 

மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராசரின் ஆதரவுடன் பல சிறப்பான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார். 

கிருஷ்ணராஜ சாகர் அணை, சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி திட்டம், பத்ராவதி எஃகு ஆலை, பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாம ராஜேந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகா டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல ஆலைகள் உருவாக இவர் காரணமாக இருந்தார். 

1917 ஆம் ஆண்டு பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார். 

பின்பு இது விஸ்வேஸ்வரய்யா பொறியியல் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

இப் பொறியியல் கல்லூரி பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

மைசூர் திவானாக இருந்த போது ஆற்றிய பொதுச் சேவையை பாராட்டி இந்தியப்பேரரசின் நைட் கமாண்டர் (Knight Commander) என்ற பட்டம் இவருக்கு பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது. 

1955 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பின்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

இவர் லண்டனை மையமாக கொண்ட பன்னாட்டு கட்டுமான கழகத்தின் மதிக்கத்தக்க உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார். 

இந்திய அறிவியல் நிறுவனத்தின் fellowship இவருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டங்கள் வழங்கின. 

1920இல் இந்தியாவின் மீள்கட்டமைப்பு, 1934இல் திட்ட மிட்ட இந்தியப் பொருளாதாரம் என்ற நூல்களை எழுதினார். 

கிராமங்களைத் தொழில் மயமாக்குதல் பற்றியும், இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சிப் பற்றியும், வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் சில நூல்கள் எழுதியுள்ளார்.

இவர் பெயரில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. 

விஸ்வேஸ்வரய்யா தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகம், பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் நுட்பப் பல்கலைகழகம், மஹாராஷ்டிராவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில் நுட்பக் கழகம், பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு எக்கு தொழிற்சாலை ஆகியவை. 

இவர் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் காலமானார்.

பாரத ரத்னா பட்டம் வாங்கிய விஸ்வேஸ்வரய்யா 102 ஆண்டு வரை வாழ்ந்தவர். நோய் நொடி அவரை அணுகியதில்லை. பத்திரிக்கையாளர்கள் அவரிடம் உங்களுடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன என்று கேட்ட போது அவர் தன்னுடைய பத்து விரல்களை காட்டி விட்டு ஒவ்வொன்றாய் மடக்கிக் கொண்டே சொன்னாராம்.

1. பாதி வயிறு உணவு சாப்பிட்டு, கால்வயிறு தண்ணீர் குடித்து, மீதி கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். 

2. உதட்டில் எப்போதும் புன்னகை இருக்க வேண்டும்.

3. எட்டு மணிநேர தூக்கம் கட்டாயம் வேண்டும்.

4. மனசாட்சியின் குரலுக்கு மதிப்பு தர வேண்டும்.

5. பிறரை சந்தோசப் படுத்தி நீயும் சந்தோசப் பட வேண்டும்.

6. சம்பாதிக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்த பழகிக் கொள்ள வேண்டும்.

7. முதுமைப் பருவம் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால் தங்களின் பெயரில் சிறிது சேமிப்பு இருக்க வேண்டும்.

8. மனைவியிடம் பிணக்கு இல்லாமல் இணக்கமாய் இருப்பது ரொம்ப முக்கியம். 

9. பேரன், பேத்திகள் இருந்தால் அவர்களின் மனநிலைக்கு ஏற்ற மாதரி விளையாட வேண்டும்.

10. எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை குறிக்கோளாய் வைத்துக் கொண்டு முழு மனதாய் உழைக்க வேண்டும். 

இந்த பத்தையும் பொன் மொழிகளாய் பாவித்து அதன் படி நடந்தால் 100 வயது நிச்சயம். இதில் ஒன்று குறைந்தாலும் நம் ஆயுளில் பத்து ஆண்டுகள் குறைந்து விடும்.

செப்டெம்பர் 15 , வரலாற்றில் இன்று.இந்திய அரசு தொலைகாட்சி நிறுவனமான தூர்தர்ஷன் துவக்கப்பட்ட தினம் இன்று (1959).

செப்டெம்பர் 15 , வரலாற்றில் இன்று.

இந்திய அரசு தொலைகாட்சி நிறுவனமான தூர்தர்ஷன் துவக்கப்பட்ட தினம் இன்று (1959).

தூர்தர்ஷன் தொலை-காட்சி  என்பது இந்தியாவின் பொதுத் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் என்பதோடு இந்திய அரசாங்கத்தின் ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பாரதியின் ஒரு பிரிவாகும். பதிவகம் (studio) மற்றும் அலைபரப்பிகள் (transmitters) ஆகிய உள்கட்டுமான வகையில் இது உலகிலுள்ள மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். அண்மையில் இது எண்ணிம நிலப்பரப்பு அலைபரப்பிகள் (Digital Terrestrial Transmitters) வழி ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கையும் ஆதிக்கமும் அதிகரித்துள்ள காலகட்டத்தில் தூர்தர்ஷனுக்கான மக்கள் வரவேற்பு மிகவும் குறைந்துவிட்டது..

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.சர்வதேச மக்களாட்சி தினம் இன்று.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.

சர்வதேச மக்களாட்சி தினம் இன்று.

சனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தைக் கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது. அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என ஐ.நா. கூறுகிறது.