திங்கள், 5 அக்டோபர், 2020

🌟அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்கலாம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

🌟அக்டோபர் 15 முதல் பள்ளிகளை  திறக்கலாம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.


தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.


 அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. தனிமனித இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


பெற்றோரின் ஒப்புதல் கடிதம் கொண்டு வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம்.


 மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட ஆன்லைன் வகுப்புகளை தேர்வு செய்யலாம்.

 
ஆன்லைன் கற்றலை ஊக்குவிக்கலாம்.

மேலும் மாநிலங்கள் தங்களுடைய சொந்த நடைமுறைகளை வகுத்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாகக் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வைக் கடந்த செப்.30-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதில் அக்.15 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியப் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை வெளியிட்டுள்ளது. இதை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

*🌟அதில் கூறப்பட்டுள்ளதாவது:*

பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிகளுக்கு மாணவர்கள் வரமுடியும்.

மாணவர் வருகைப் பதிவேட்டில் நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

பாடம் கற்க ஆன்லைன் வகுப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பள்ளிகள் தங்களின் வகுப்பறைகள், கழிப்பறைகள், பிற அறைகள், வளாகம் மற்றும் உபகரணங்களை முறையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

எல்லா நேரங்களிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தனிமனித இடைவெளி, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பலகைகள், பேனர்களை வாய்ப்புள்ள இடங்களில் வைக்க வேண்டும்.

என்சிஇஆர்டி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும் விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்குவது அவசியம்.

அவசரகால உதவிக் குழு, பொதுப் பாதுகாப்புக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு உள்ளிட்ட செயல்பாட்டுக் குழுக்கள் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும்.

வீட்டுப் பள்ளியில் இருந்து முறையான பள்ளிப் படிப்புக்கு மாணவர்களை மென்மையான முறையில் மாற்றிக் கொண்டுவருவதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சொந்தமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.

பள்ளியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.

அக்டோபர் 5,வரலாற்றில் இன்று.சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 5,
வரலாற்றில் இன்று.

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பிறந்த தினம் இன்று.


சிதம்பரம் அடுத்த மருதூரில் (1823) பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். குழந்தைகளுடன் தாய் சென்னை அடுத்த பொன்னேரியில் குடியேறினார். பின்னர் சென்னை ஏழுகிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.

 தமிழ் அறிஞரான அண்ணனிடமே கல்வியைத் தொடங்கினார். பின்னர், தக்க ஆசிரியர்களிடம் பயின்று, தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான அண்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லை. முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.

ஒருமுறை கோயிலில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பியவர், அண்ணியை எழுப்ப மனமின்றி வீட்டு திண்ணையில் பசியோடு படுத்துவிட்டார். அவருக்கு அம்பிகையே நேரில் வந்து அறுசுவை உணவு பரிமாறியதாக நம்பப்படுகிறது.

சைவம், வேதாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், தமிழ் இலக்கிய நூல்களை ஆராய்ந்தறிந்தார். பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்’ என எடுத்துக் கூறினார்.

 ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். பிறகு இதை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்று மாற்றினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். ‘கடவுள் ஒருவரே. உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்’ என உபதேசித்தார்.

பெண் கல்வியைப் போற்றினார். யோக சாதனப் பயிற்சி பெண்களுக்கும் அவசியம் என்றார். அனைவரும் தமிழ், ஆங்கிலம், வடமொழி கற்க வலியுறுத்தினார். திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.

சிறு வயதிலேயே சிறப்பாக கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். முருகனை வாழ்த்தி ‘தெய்வமணி மாலை’ என்ற பாமாலையை இயற்றினார். இவர் பாடிய ‘திருவருட்பா’ 6 திருமுறைப் பகுதிகளாக 399 பதிகங்கள், 5,818 பாடல்களைக் கொண்டது. ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள்.

தண்ணீரில் விளக்கை எரியச் செய்தது உட்பட பல அற்புதங்களை இவர் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. 1,596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை ஒரே இரவில் பாடி முடித்தார். சஞ்சீவி மூலிகைகள் குறித்து பல குறிப்புகளை எழுதியுள்ளார்.

வடலூரை சேர்ந்த விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அங்கு 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலையை அமைத்தார். அங்கு ஏழைகளின் பசியாற்றினார். அதனால் ‘வள்ளலார்’ எனப் போற்றப்பட்டார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மிக்கவர். ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்று இறைவனை ஜோதி வடிவில் கண்ட ராமலிங்க சுவாமிகள் 51ஆவது வயதில் (1874) இறை ஜோதியில் ஐக்கியமானார்.

அக்டோபர் 5, வரலாற்றில் இன்று.சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.

அக்டோபர் 5, வரலாற்றில் இன்று.

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோ
அமைப்பால் 1994ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து  அக்டோபர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.

ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்
படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.

ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.

அக்டோபர் 5,வரலாற்றில் இன்று.உலக குடியிருப்பு தினம் இன்று

அக்டோபர் 5,
வரலாற்றில் இன்று.

உலக குடியிருப்பு தினம் இன்று.

'வீடமைப்புக் கொள்கை, தாங்கக்கூடிய வீடு' என்றும் தொனிப்பொருளில் 'உலக குடியிருப்பு தினம்' இன்று கொண்டாடப்
படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை 1985ம் ஆண்டு பிரகடனப்படுத்திய உலக குடியிருப்பு தினம் 1986ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதலாவது திங்கட்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

🌄தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வணக்கத்திற்குரிய, முனைவர் , மன்றம் நா. சண்முகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தேனி மாவட்ட ஆய்வுக்கூட்டம் மற்றும் மாற்று இயக்கத்தினர் மன்றத்தில் இணையும் விழா நிகழ்வுகள்.

🌄தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வணக்கத்திற்குரிய, முனைவர் , மன்றம் *நா. சண்முகநாதன்* அவர்களின் தலைமையிலும்
🔥மாநில அமைப்பு செயலாளர் *திரு கோ.சிவக்குமார்* ,
🔥மாநில பொதுக்குழு உறுப்பினர் **திரு ந. ரவிச்சந்திரன்* 
🔥விழுப்புரம் மாவட்டச் *செயலாளர் **சீனி. சின்னசாமி* 
🔥புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் *திரு க.சு செல்வராசு* ஆகியோரின் முன்னிலையிலும் 03/10/2020 அன்று ஆசிரியர் மன்றம் *தேனி மாவட்டக் கிளையில் ஆய்வுக்கூட்டம்* நடைபெற்றது.                   🔥இக்கூட்டத்தில் தேனி மாவட்டம் ஆசிரியர் மன்றம் செயலாளர் திரு ந . ராஜவேல் அவர்களின் தலைமையிலான தேனி மாவட்ட மன்றம் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மாநில அமைப்பு மனமார வாழ்த்தி.... மேலும் பல உறுப்பினர்களை ஆசிரியர் மன்றத்தில் இணைத்து... தேனி மாவட்டத்தை மன்றம் கோட்டையாக மாற்ற வழிகாட்டுதலும் மாநில அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.
🔥இக்கூட்டத்தில் தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்         வட்டாரத்      தலைவர்        🌞 *திரு பா கோகுல பாண்டியன்* 🌞அவர்கள் தலைமையில் ஆசிரியர் மன்றத்தில் இணைந்தனர்.* அவர்களுக்கு ஆசிரியர் மன்றம் மாநிலத் தலைவர் பொன்னாடை போர்த்தி வரவேற்று... உறுப்பினர் அட்டை வழங்கினார்.
🌍 அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆசிரியர் மன்ற செயலாளர் *திரு ந. ராஜவேல்* அவர்களின் புதுமனை புகுவிழாவில் ஆசிரியர் மன்ற மாநில தலைவர் வணக்கத்திற்குரிய முனைவர் மன்றம் *நா சண்முகநாதன்* மற்றும் உடன் வந்த ஆசிரியர் மன்றம் போராளிகள் கலந்துகொண்டு சிறப்பு  செய்தனர்.
🌍நெல்லை, தென்காசி, தூத்துகுடி மாவட்டங்களில் உள்ள  *24 வட்டாரங்களைச் சார்ந்த  தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அக்கூட்டணியில் இருந்து விலகி  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தில் இணைந்தனர்.* இதற்கான முன் முயற்சி எடுத்து அரும்பாடுபட்ட மாநிலத் தலைவர் *வணக்கத்திற்குரிய முனைவர் மன்றம் நா. சண்முகநாதன்* அவர்களுக்கு தேனி மாவட்டம் கிளை மனமார வாழ்த்தி மேலும் பல மாற்று சங்கத்தினரை இணைக்க வேண்டும் அதற்கான *சக்தியை* மன்றம் தலைவர் பெறவேண்டும் என மேலும் வாழ்த்துகிறது..... தேனி மாவட்ட கிளை.
🌍தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பு செய்த மாநிலத் தலைவர் *வணக்கத்திற்குரிய முனைவர் மன்றம் நா சண்முகநாதன்* அவர்களுக்கு தேனி மாவட்ட கிளையின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அத்துணை மன்றம் போராளிகளுக்கு ஆசிரியர் மன்றம் தேனி மாவட்ட கிளை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று. விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிப்போட்ட சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.

 விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிப்போட்ட சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று. 

சிறுவனாக இருக்கும் பொழுதே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆப்பிரிக்காவில் போராடி வந்த போயர்களுக்கு ஆதரவாக கவிதைகள் எழுதினார்.

 அரசு வேலையை தூக்கி எறிந்து விட்டு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து விடுதலைக்கனலை மூட்டினார். வங்கப்பிரிவினை, இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை கொண்டுவரும் போக்கில் நிறைவேற்றப்பட,  அதை எதிர்த்து சுதேசி இயக்கம் நாடு முழுக்க பரவியது.

தமிழகத்துக்கு பிபின் சந்திர பால் வந்து உரையாற்றி எழுச்சி ஏற்படுத்திவிட்டு போயிருந்தார். பாரதியார் எழுச்சி கீதங்கள் பாடினார். சுதேசி கம்பெனி,கப்பல்கள் என்று வ.உ.சி அவர்கள் இயங்கிக்கொண்டே இருந்தார். சுப்ரமணிய சிவா தூத்துக்குடியில் வ.உ.சி அவர்களை சந்தித்தார். கோரல் மில் போராட்டத்தில் அவருடன் இணைந்து பங்கு கொண்டார். எழுச்சி மிகு உரைகளால் இருவரும் மக்களை கிளர்ந்து எழ செய்தார்கள்.

காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பல்லுக்கு பல் என ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர் இவர். திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு வெள்ளையருக்கு ஓயாமல் தொல்லைகள் கொடுத்துக்கொண்டு இருந்த இவர்களை வழக்குகள் போட்டு ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசால் சென்னை மாகாணத்தில் சிறையில் அரசியல் கைதியாக முதன்முதலில் அடைக்கப்பட்டவர் இவரே. நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தொழுநோய் தாக்கி சிறையை விட்டு வெளியேறி வந்தார்.

தொழுநோய் தொற்று நோய் என அரசு கருதியதால் தொடர்வண்டிகளில் தொழுநோயாளிகள் பயணிக்க கூடாது என அரசு தடை விதித்த பொழுது ."பாரத மாதா என் அக்ரதேவதை; இந்த நாடே நான் ஆராதிக்கும் புண்ணிய பூமி !"என நெகிழ்ந்து சொல்லி சாக்கு மூட்டையில் தன்னை கட்டிவைக்க சொல்லி ஊர் ஊராக தொலைவண்டியில் பயணம் சென்று அன்னை தேசத்துக்கு போராட இளைஞர்களை திரட்டினார்.

புண்களில் ரத்தம் வடிய நடந்தே சுதந்திர கனலை தமிழகமெங்கும் பரப்பிய அவர் சென்னை மைலாப்பூரில் வசித்த காலத்தில் மாலை நேரத்தில் ஒரு மேஜை,ஒரு நாற்காலி,ஒரு இரவு விளக்கு ஆகியன மட்டும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு போவார். அங்கே மேசையின் மீது ஏறி நின்று வந்தே மாதரம் என்று முழங்கிவிட்டு விடுதலை தாகம் பொங்கும் உரைகளை நிகழ்த்துவார்.

ஞானபானு இதழை நடத்திய அவர் அதில் வ.உ.சி மற்றும் பாரதி ஆகியோரை எழுத வைத்தார். மீண்டும் தொழுநோயோடு இரண்டு முறை சிறை தண்டனை பெற்றாலும் அவர் விடுதலைப்போரால் தன்னால் ஆன பங்களிப்பை தந்துகொண்டே இருந்தார். பாரத மாதாவிற்கு பாப்பாரப்பட்டியில் கோயில் கட்ட வேண்டும் என்று சித்தரஞ்சன் தாஸ் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டி நிதி திரட்டிய அவர் அந்த ஆலயத்தில் பூசாரிகள் கிடையாது என்றும், எளிய மக்களே வழிபடுவார்கள் என்றும் உறுதி கூறினார். அந்த கனவு நிறைவேறும் முன்னரே மரணமடைந்தார்.

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.

திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று.

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். 

இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 


1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன். 

குமரன் மண்டை உடைந்து உயிரிழந்த நிலையிலும் தேசியக் கொடியை கீழே விழாமல் பாதுகாத்தார்.
இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று. உலக விலங்குகள் தினம் இன்று

அக்டோபர் 4, 
வரலாற்றில் இன்று.

 உலக விலங்குகள் தினம் இன்று.


இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், விலங்குகள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டுவருகிறது. இறைத் தூதுவராக போற்றப்பட்ட அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள்மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார். அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தார்.

இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை தன்மையைப் பொறுத்தே, ஒவ்வோர் இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. விலங்குகள்தான் மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான், மனிதனின் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த முடியும். இப்போதைய காலகட்டத்தில், விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தங்களே பாதுகாத்துக்கொள்ளும்

சனி, 3 அக்டோபர், 2020

அக்டோபர் 3,வரலாற்றில் இன்று.சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 3,
வரலாற்றில் இன்று.


சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு தினம் இன்று.


ம..பொ. சிவஞானம் (ஜுன் 26, 1906- அக்டோபர் 3, 1995) இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார்.

 மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார்.

 
பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன், இரு மகள்கள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராத வயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வதைத்தது.

1946ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் 8, 1954ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார்.

திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர்மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர்மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

1950இல் சென்னை ராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சியின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைப்பெற்றது. ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க, டாக்டர் மு.வரதராசனார் தலைமை வகித்தார். பெருந்தைலவர் காமராஜர் உட்பட அனைத்து கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர். ம.பொ.சி எதிர்பார்த்ததை போல சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ் கலாச்சார விழாவாக மாறியது. அடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர். ம.பொ.சிக்குப் பின், அவர் மகள் ம.பொ.சி.மாதவி பாஸ்கர் தன் தந்தையின் பெயரில் தொடங்கிய அறக்கட்டளை சார்பாக சிலப்பதிகார விழாவை 2013ஆம் ஆண்டு முதல் கொண்டாடத் தொடங்கினார்.

வ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. 

வ.உ.சியின் வரலாற்றை பற்றி, ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். 

பி.ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலை தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.

 

ம.பொ.சி எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது. இந்நூலை தழுவி பி. ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். 

ம.பொ.சி 1995ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார்.

அக்டோபர் 3, வரலாற்றில் இன்று.சர்வதேச போராட்ட தினம் இன்று.

அக்டோபர் 3,
 வரலாற்றில் இன்று.

சர்வதேச போராட்ட தினம் இன்று.

உலக தொழிற்சங்க சம்மேளனம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 3 ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உலகில் உள்ள உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் அறை கூவல் விடுத்திருக்கிறது