ஞாயிறு, 4 அக்டோபர், 2020

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.

திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று.

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். 

இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 


1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன். 

குமரன் மண்டை உடைந்து உயிரிழந்த நிலையிலும் தேசியக் கொடியை கீழே விழாமல் பாதுகாத்தார்.
இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக