திங்கள், 26 நவம்பர், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்ட மன்ற இணையக் குழுக் கூட்டம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்ட மன்ற இணையக்குழுக் கூட்டம் கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர் மன்ற அலுவலகத்தில் 25.11.18 (ஞாயிறு)பிற்பகல் 05.00 மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு 
மன்ற இணையக்குழு அமைப்பாளரும்,
மாவட்டத்துணைச்
செயலாளருமான மெ.சங்கர் தலைமை தாங்கினார். பரமத்தி ஒன்றியச் செயலாளர் க.சேகர் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன் நிறைவுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில்
பங்கேற்ற ஆசிரியர் மன்ற 
சமூகவலைதள
செயற்பாட்டாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிவியல் தொழில் நுட்பங்களைக் கையாண்டு ஆசிரியருக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது,தகவல்களை
பரிமாற்றம் செய்துகொள்வது  என்று முடிவாற்றப்பட்டது. மேலும்
அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு  
கல்வி சார்ந்த வகுப்பறைச் செயல்பாடுகள் மேற்கொள்வது என்றும் , ஆசிரியர்மன்றப் பணிகள் 
மேற்கொள்வது என்றும் முடிவாற்றப்பட்டது. கூட்ட முடிவில் சேந்தமங்கலம் ஒன்றியத்தலைவர் கா.செல்வம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக