திங்கள், 23 செப்டம்பர், 2019

"எமிசு" இணையதளத்தில் அதை ஏற்று, இதை ஏற்று என்று அவ்வப்போது கொடுக்கும் 'டார்ச்சர்ச்சு", நெருக்கடிகள் , இதனால் உருவாகும் மன அழுத்தங்கள், மன உளைச்சல்கள், மனக்கொந்தளிப்புகள் பதட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...

அன்பானவர்களே!வணக்கம்.
"எமிசு" இணையதளத்தில்  அதை ஏற்று,இதை ஏற்று என்று  அவ்வப்போது  கொடுக்கும் 'டார்ச்சர்ச்சு", நெருக்கடிகள் , இதனால் உருவாகும் மன அழுத்தங்கள், மன உளைச்சல்கள், மனக்கொந்தளிப்புகள்
பதட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...

கணினி இயக்குவதில் சிரமம் உள்ளோர்,
இணைய வசதி இணைப்புகள் இல்லாத சிக்கலில் உள்ளோர்  என பள்ளித்தலைமையாசிரியர்களின் நடைமுறை பிரச்னைகளை நன்கு அறிந்துள்ள கல்வித்துறை அலுவலர்கள் குறுவளமையத்திற்கு, 
வட்டார வளமையத்திற்கு ,வட்டாரக்கல்வி அலுவலகத்திற்கு அழைத்து அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள், அலுவல எழுத்தர்கள், கணினி இயக்குபவர்கள் ,
எமிசு பணிக்கு என்று பொறுப்பாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாசிரியர்கள்  ஆகியோரை இப்பணியில் தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஈடுபடுத்தி, அலுவலர்களின் மேற்பார்வையில்,வழிகாட்டுதலில்  இப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்திடுவதே சிறப்பானதாகும் .எமிசு பணியை இவ்வாறே நடைமுறைப்படுத்திட  வேண்டுமென்றே கல்வித்துறை அலுவலர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வேண்டுகிறது. வட்டாரக்கல்வி அலுவலரின் வாட்ச்அப் குழுக்களில் , வளமைய வாட்ச்அப் குழுக்களில், சிஆர்சி மைய வாட்ச்அப் குழுக்களில் மணிக்கொருமுறை ஒட்டுமொத்த மாவட்ட நிலவரங்களை வானிலை அறிவிப்புகள் , தேர்தல்கால வெளியீடுகள் போன்று மேலிருந்து வருவதை கடமையே என்று பார்வேர்ட்  தகவலைப் பதிவிட்டு  முன்னணி, பின்னணி நிலவரங்களை பரப்பி பீதி கிளப்புவதை கைவிடுவது அல்லது நிறுத்திக்கொள்வது கெளரவமானதாகும்;
நாகரீகமானதாகும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கருதுகிறது. 
ஒரு சிஆர்சியில் உள்ள ஒரு பத்து தலைமையாசிரியர்களை  அலைபேசியில் அழைத்து ஓரிடத்திற்கு வரவழைத்து அல்லது பள்ளிதோறும் கைத்தேர்ந்த நிபுணர்களை அனுப்பிவைத்து  இன்றைய,அன்றாடப்  பணிகளைக் கூறி, 
தகவல்கள் தந்து பதிவேற்றிட வேண்டிய விபரங்களைத் தெரிவித்து ,இதன் அவசிய,
அவசரங்களைத் விளக்கி,
பள்ளித்தலைமையாசிரியர்களின்  சிரமங்களைக் கேட்டறிந்து , அதற்கேற்றவாறு சமயோசிதமாக முடிவெடுத்து , ஆலோசனைகள் வழங்கி  எமிசு பணிகளை நிறைவாக்குவதற்கு, இணையதளப்பணிகளை நிறைவு செய்வதற்கு  முயற்சிக்காமல், யோசிக்காமல் மாவட்ட அளவிலான பள்ளிகளின் பெயர்ப்பட்டியலை மட்டும் மணிக்கொரு முறை பார்வேர்ட் செய்து கடமையை தட்டிக்கழிப்பது, தலைமையாசிரி்யர்களை மட்டும் பொறுப்பாக்குவது  சிறந்த செயலாகாது. தலைமையாசிரியர்களிடம் வேலை வாங்கி விட வேண்டும் என்று அதிகார மனநிலையில் , தலைமையாசிரியர்களை பதட்டத்தில் வைத்திருப்பதாக , அச்சமூட்டுவதாக கருதிக் கொண்டு கல்வித்துறை அலுவலர்கள் வெறும் பார்வேர்ட மெசேசு மட்டும் பகிர்ந்து கொண்டிருத்தால் ,ஒரு காலத்தில்  இவர்களையும் மேற்சொன்ன இந்த தொற்றுகள் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள ளது; ஆபத்துள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 
நாமக்கல் மாவட்ட அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.
கல்வித்துறையின் நிர்வாக அலுவலர்கள், ஆய்வு அலுவலர்கள், பார்வை அலுவலர்கள் பதட்டத்தில் இருப்பது துறைக்கு நல்லதல்ல. காலமறித்து கூவும் சேவலைப் போன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கூறுகிறது. எல்லோரும் இணைந்து  பணியாற்றுவதே ,கடமையாற்றுவதே கல்வித்துறைக்கு நல்லதாகும். இதைச்செய்தாது பதட்டச்சூழ்நிலையை உருவாக் குவது,  
மன அமைதியை சீரழிப்பது பொருத்தமான செயலாகாது என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்,நாமக்கல் மாவட்ட அமைப்பு தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக