வெள்ளி, 29 நவம்பர், 2019

நவம்பர் 29,
வரலாற்றில் இன்று.


இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (1993).

ஒரு மனிதனின் கனவுகள் ஒரு தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஜே.ஆர்.டி.டாடா.

இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார்.


இந்தியாவில் அரை நூற்றாண்டு காலத்தில் பல தொழில்களை உருவாக்கி அரசங்கத்திற்கு அடுத்தபடியாக வேலை வாய்பை உருவாக்கி தந்தவர். இந்தியர்கள் அனைவரும் டாடா என்ற நிறுவனத்தின் பெயரை கூற வைத்தவர். தொழில் துறையில் ஜே.ஆர்.டி.டாடா என்ற பெயரை கூறினால் அனைவரும் எழுந்து நிற்பர்.
அத்தகைய மரியாதை தொழில் துறையில் அவர் பெற்றிருந்தார்.


1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. தான்.


பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் சொன்ன வரிகள் - ”இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக வேண்டாம் ;இந்த நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு, தன்னிறைவோடு வாழ்கிற தேசமாக இந்த பூமி ஆனால் போதும் !”