சனி, 30 நவம்பர், 2019

நவம்பர் 30,
வரலாற்றில் இன்று.

கம்ப்யூட்டர் பாதுகாப்பு தினம் இன்று.

ஆண்டு தோறும் நவம்பர் 30 ஆம் தேதி,  கம்ப்யூட்டர் பாதுகாப்பு தினம்(COMPUTER SECURITY DAY, November 30) ஆக அனுசரிக்கப்படுகிறது

இந்தத் தினம் கொண்டாடுவது முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் தினத்தில் கம்ப்யூட்டர் தொடர்பான விழிப்புணர்வு பொது மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் பாதுகாப்பு மற்றும் அதிலுள்ள தகவலுக்கான பாதிப்பு குறித்து இந்தத் தினத்தில் அலசி ஆராயப்படுகிறது.

உலகம் முழுக்க சுமார் 1500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் சாஃப்வேர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தத் தினத்தை கொண்டாடுகின்றன. இந்தத் தினம் சனி அல்லது ஞாயிறு அல்லது விடுமுறை தினத்தில் வந்தால் அது அதற்கு அடுத்த பணி நாளில் கொண்டாவது வழக்கமாக இருக்கிறது.


 அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றுவது, கம்ப்யூட்டரை தூசி படியாமல், சூடாகாமல் பாதுகாப்பது, வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாப்பது, தேவையில்லாத ஃபைல்களை நீக்குவது, கம்ப்யூட்டர் அருகில் மது மற்றும் புகை பிடிப்பதை தவிர்ப்பது, இவையே இத்தினத்தில் நாம் செய்ய வேண்டியது.