சனி, 30 நவம்பர், 2019

நவம்பர் 30,
வரலாற்றில் இன்று.


முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் நினைவு தினம் இன்று.


இந்தியாவின் 15ஆவது பிரதமராக பதவி வகித்தவர் இந்தர் குமார் குஜ்ரால்.

 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மந்திரி சபையில் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

பின்னர் காங்கிரசில் இருந்து வெளியேறி 1980இல் ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். 1989ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட குஜ்ரால் 1989-90 மற்றும் 1996-98களில் வெளியுறவுத்துறை மந்திரியாகவும், இதே ஆண்டில் திட்டக் கமிஷன் தலைவராகவும் பதவி வகித்தார்.

21.4.1997 முதல் 19.3.1998 வரை இந்திய பிரதமராக பதவி வகித்தார்.