திங்கள், 2 டிசம்பர், 2019

டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று.


தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் இன்று.
(National Pollution Control Day)

போபால் விஷவாயு கசிவு டிசம்பர்
2ஆம் நாள் இரவு , 1984 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது . இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இடம் பெற்ற நச்சு வாயுக்கசிவில் (Bhopal gas tragedy)
3800 பொதுமக்கள் உடனடியாக இறந்தனர் . 1,50,000 முதல் 6,00,000 பேர் வரையில் காயமடைந்தனர் . இது உலகின் மிக மோசமான விசவாயு கசிவாகக் கருதப்படுகிறது .
இதனால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இன்றைக்கும் பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர் . பிறக்கும் குழந்தைகள் உடல் ஊனத்துடன் பிறக்கின்றனர் . இந்த போபால் விஷவாயு பேரிடரால் தங்கள் உயிரை இழந்த ஆயிரக்கணக்கான மனிதர்களின் இழப்பை நினைவு கூறும்பொருட்டு, மரியாதை செலுத்தும் வகையில் டிசம்பர் 2ஆம் தேதி தேசிய மாசுக்கட்டுப்பாடு தினம் அனுசரிக்கப்படுகிறது .