திங்கள், 23 டிசம்பர், 2019

டிசம்பர் 23, வரலாற்றில் இன்று.

விவசாயிகள் தினம் இன்று.


இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே,
விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

சரண் சிங் இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 28, 1979 முதல் ஜனவரி 14, 1980 வரை பணியாற்றினார்.

கூட்டுறவு பண்ணைகள் இந்தியாவில் வெற்றி பெறும் என்று சரண் சிங் கருத்து தெரிவித்தார். விவசாயிகள் அனைவரின் உரிமையும் மிக முக்கியம் என்றார்.

சரண் சிங் ஜமின்தாரி ஒழிப்பு முறைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். நிலம் வைத்துள்ள ஜமின்தார்கள் வட்டிக்கு பணம் தருவதை கடுமையாக எதிர்த்தார்.இவரின் ஆட்சியில் வேளான் விளைப்பொருள்களின்  சந்தை மசோதாவைக் கொண்டு வந்தார்.

இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த போது நில கையிருப்பு சட்டம் கொணடு வர முக்கிய காரணமாக இருந்தார்.இந்த சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நில கையிருப்பின் உச்ச அளவைக் குறைக்கும்  முயற்சியாக இந்த சட்டம் இருந்தது.

தம் வாழ்நாள் முழுவதும் விவசாகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்துவந்தார்.

ஜமின்தாரி முறை ஒழிப்பு,கூட்டுறவு பண்ணை முறை,இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்,வேலை செய்பவர்களுக்கு நிலம் போன்ற நூல்களை எழுதி உள்ளார்.

தில்லியில் உள்ள இவரது நினைவிடத்திற்கு கிசான் காட் பெயரிடப்பட்டுள்ளது. ( ஹிந்தியில் கிசான் என்பது விவசாயியைக் குறிப்பிடும் வார்த்தை).


2001 ஆம் ஆண்டிலிருந்து  இந்தியா விவசாயிகளின் சார்பாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

விவசாயிகளை ‘தேசத்தின் முதுகெலும்பு’ என்றார் மகாத்மா காந்தி.

இந்தியா ஒரு விவசாய நாடு விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு.

இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் உலகத்துக்கே உணவளித்தது இந்தியா.இன்றைக்கு மற்ற நாடுகளை நம்பி வாழும் நிலையில் உள்ளது.

விவசாயிகளுக்கு அவர்களின் நிலம்தான் தாய்.அதில் விளையும் பயிர்கள்தான் அவனின்குழந்தைகள் என்றால் மிகையாகது.நிலம் மற்றும் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மனதளவில், பொருளாதார ரீதியில் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

விவசாயம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடை வளர்ப்பையும் குறிக்கும்.விவசாயம் ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும்.

உணவுப் பொருட்களின் விலை உச்சத்துக்கு உயர்ந்தும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை.

இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டால் அவன் முன்னை விட அதிகமாக துடிப்பாக விவசாயம் செய்து முடியும்.

விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது.விவசாய நிலங்களை இன்று தொழிற்சாலைகள் ஆக்கிரமித்து வருகிறது.

நீர் ஆதாரங்கள் குறைந்து கொண்டே வருகிறது. நீர் நிலைகளை நிலங்கள் இன்று ஆக்கிரமிப்புகள் செய்துள்ளன.
நதிகள் தொழிற்சாலை கழிவுகளை சுமக்கும் நதிகளாக மாறி இருக்கிறது. ஆறுகள், மணற்கொள்ளை நடக்கும் இடமாக இருக்கிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்னும் குறளின் படி விவசாயிகளை முன்னிலைப்படுத்தாவிடில் வருங்காலத்தில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.