ஞாயிறு, 17 மே, 2020

,மே 17, வரலாற்றில் இன்று.

உலக உயர் ரத்த அழுத்த தினம் இன்று.

ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதைவிட 140/90 அல்லது அதற்கும் மேலாக அளவு தொடர்ந்து இருந்தால், அதை உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக் கொதிப்பு என, அழைக்கப்படுகிறது.

இத்தகைய உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்கள், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, உயர் ரத்த அழுத்தம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உலகம் முழுவதும் மே 17ம் தேதி உயர் ரத்த அழுத்த தினமாக, அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் இறப்பு விகிதத்திற்கான முன்னணி காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. 85 தேசிய உயர் இரத்த அழுத்த சங்கங்கள் மற்றும் குழுக்களின் அம்ப்ரல்லா அமைப்பான தி வேர்ல்ட் ஹைபர்டென்ஷன் லீக் (டபிள்யூஹெச்எல்), உலகம் முழுவதிலுமுள்ள உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களின் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தெரிவிப்பதற்கு, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005 ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக (டபிள்யுஹெச்டி) அறிவித்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, அதிக தேசிய சமூகங்கள் உலக சுகாதார நிறுவனத்தில் ஈடுபட்டிருக்கின்றன என்பதுடன் பொதுமக்களிடத்தில் செய்தியைக் கொண்டு செல்ல தங்களது நடவடிக்கைகளில் படைப்பாக்கத்தோடு செயல்படுகின்றன.

2007 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனத்தின் 47 உறுப்பு நாடுகள் கலந்து கொண்ட சாதனை பங்கேற்பு நடைபெற்றது. உலக உயர் இரத்த அழுத்த தின வாரத்தின் போது, இந்த நாடுகள் அனைத்தும் – தங்களுடைய உள்ளூர் அரசாங்கங்கள், தொழில்முறை சமூகங்கள், அரசுசாராத அமைப்புக்கள் மற்றும் தனியார் தொழிற்துறைகளுடன் இணைந்து – சில ஊடகம் மற்றும் பொதுமக்கள் பேரணி மூலமாக உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தியிருக்கின்றன.

இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஜனரஞ்சக ஊடகத்தைப் பயன்படுத்துவதால் இந்தச் செய்தி 250 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களிடத்தில் சென்று சேர்கிறது. இந்த இயக்கம் வருடா வருடம் அதிகரிக்கையில், அதிகரித்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 1.5 பில்லியன் மக்களை சென்று சேரும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

1. உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளரும். ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?

நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் “இரத்தக் கொதிப்பு” என்று கூறுகிறோம்.

இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத் தடுக்கவில்லை என்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?
1. நாம் உண்ணும் உணவின் தன்மை.
2. மன அழுத்தம்.
3. எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
4. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்.
5. உடல் எடை அதிகரித்தல்.
6. ஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.
7. சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.
8. உடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.
9. சத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.
10. பரம்பரைத் தன்மை. (Genetic Predirposition)

இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை