ஞாயிறு, 17 மே, 2020

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*
*நிறுவனர்; பாவலர். க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc*.

-------------------------
*செய்தி அறிக்கை:*
🟩🟩🟩🟩🟩🟩
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்*

*மாநிலத் தலைவர் முனைவர் மன்றம்*  *நா.சண்முகநாதன்,*

*துணைப்பொதுச் செயலாளர் இலா.தியோடர் ராபின்சன்,*

*மாநிலப் பொருளாளர் அம்பை .ஆ.கணேசன் ஆகியோர் விடுக்கும் கூட்டு செய்தி அறிக்கை:*
--------------------------------

*தமிழ்நாட்டு பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வினை எதிர் வரும் சூன் முதல் நாள் முதல் நடத்திடுவதற்கு முயற்சிப்பதை முற்றிலுமாக கைவிடுமாறு  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*கொரோனா தொற்று நோய்க்காலத்தில்* *பெற்றோர்களும்,மாணவர்களும்,ஆசிரியர்களும்,பொதுமக்களும்* *பேரச்சத்தின் பிடியில் சிக்கி உழன்றுவரும்  இக்காலத்தில்,*
*கல்வியாளர்கள்,சமூகஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என எவர் கருத்தையும் செவிகொடுத்து கேளாது*  *அதிவிரைவாக பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல் வித்துறை மேற்கொண்டிருப்பது கவலையளிக்கிறது.*

*தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள்  கொரோனோ நோய்த்தொற்று  பரவல்  அச்சத்தை - ஐயப்பாட்டினை  மேலும் அதிகரிக்கவே செய்யும் வாய்ப்பினை உருவாக்குகிறது.*

*இவைமட்டுமின்றி,வெளியூரில் தங்கி உள்ள ஆசிரியப்பெருமக்கள் 21.05.2020க்குள் பள்ளிப்பணிக்கு திரும்பிட வேண்டும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது* *ஆசிரியப்பெருமக்களை பெரிதும் மனக்கலக்கம் அடையச்செய்துள்ளது*.

*கொரோனா நோய் தொற்றுக்காலத்தில் ஆசிரியர்களும்,மாணவர்களும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதும்,இவ்வாறு நீண்டதூரம் பயணித்தவர்கள் பொதுத்தேர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் பொருத்தமான செயலாகாது;ஏற்புடைய செயலாகாது* .

*கொரோனா தொற்றுநோய் காலத்தில்,பொதுத்தேர்வுக்கு  மனரீதியாக மாணாக்கர்கள் தயாராகாத நிலையில், பேரச்சத்தின் பிடியில் சிக்கி உள்ள நிலையில் பொதுநலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அதிவிரைவு நடவடிக்கைகளை தமிழகரசு முற்றிலுமாக கைவிடுமாறு தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*இங்ஙனம்,*

*மாநிலத் தலைவர் முனைவர்.*
*மன்றம். நா.சண்முகநாதன்.*

*மாநில துணை பொதுச் செயலாளர்*
*இலா.தியோடர்  ராபின்சன்*

*பொருளாளர்*
*அம்பை ஆ கணேசன்*