புதன், 27 மே, 2020

மே 27, வரலாற்றில் இன்று.

பிரபல வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா பிறந்த தினம் இன்று.

இந்தியாவின் பிரபல வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா 1928இல் ஹிமாசல பிரதேச மாநிலத்தில் பிறந்தார். அவர் படிப்படியாக உயர்ந்து இந்திய வரலாற்றின் முக்கிய பதிவாளராக மாறினார்.

 India since independence, India for freedom strufggle, History of modern India, In the name of Democracy, Essays on Colonialism போன்ற முக்கிய வரலாற்று நூல்களின் ஆசிரியர்.

 இவரின் புத்தகங்கள் இந்தியாவின் பல பல்கலைகழகங்களில்  பாடமாக வைக்கப்பட்டுள்ளன. டெல்லி ஜவகர்லால்  நேரு பல்கலைகழகத்தில் நவீன வரலாற்று பேராசிரியராக பல காலம் பணிபுரிந்தார். இந்தியாவின் பிரபல வரலாற்றாசிரியர்களான இர்பான் ஹபீப், ரொமிலா தாப்பர், சதீஷ் சந்திரா, ஆர்.எஸ். சர்மா, அர்ஜுன் தேவ் போன்றவர்களின் வரிசையில் வரக்கூடியவர் பிபின் சந்திரா. மத்திய அரசின் உயர்ந்த விருதான பத்மபூஷன் விருதை பெற்றிருக்கிறார். சுதந்திர போராட்ட வீரரும் கூட. இவரின் நூல்கள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுஇருக்கின்றன. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30இல் காலமானார் பிபின் சந்திரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக