வியாழன், 28 மே, 2020

மே 28, வரலாற்றில் இன்று: இந்திய மருத்துவ அறிஞர் "உலிமிரி இராமலிங்கசுவாமி" நினைவு தினம்.

மே 28, வரலாற்றில் இன்று.

இந்திய மருத்துவ அறிஞர்
"உலிமிரி இராமலிங்கசுவாமி" நினைவு தினம் இன்று.


1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.

இவர் புதுடெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (1969), பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.

ஊட்டச்சத்து இயலில் ஆராய்ச்சி செய்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்த இவர் தனது 79வது வயதில் (2001) மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக