சனி, 30 மே, 2020

*🌐மே 30, வரலாற்றில் இன்று:இந்தியாவின் 25ஆவது மாநிலமாக கோவா உதயமான தினம் இன்று.*

மே 30, வரலாற்றில் இன்று.

இந்தியாவின் 25ஆவது மாநிலமாக கோவா உதயமான தினம் இன்று.

போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவா, டையு மற்றும் டாமன் பகுதிகள், இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1961-ஆம் ஆண்டு டிசம்பர்-12ல் ராணுவ நடவடிக்கை மூலமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின் கோவா, டையு மற்றும் டாமன் பகுதிகள் மத்திய ஆட்சிப் பகுதிகளாக விளங்கின. 1987-ஆம் ஆண்டு யூனியன் பிரதேச பகுதிகள் பிரிக்கப்பட்டு, இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவா மாநிலம் பனாஜியைத் தலைநகராகக் கொண்டு இதே நாளில்தான் உதயமானது.

 கோவாவில் ஆட்சி மொழியாக கொங்கணி மொழியும், அலுவல் மொழியாக ஆங்கிலம் மற்றும் மராத்தி உள்ளன. கோவா கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், இயற்கை துறைமுகமான மர்ம கோவா துறைமுகம், சுகாரி மற்றும் மண்டோவி ஆறுகள் ஆகியன கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும். கோவாவின் மிகப்பெரிய நகரமாக வாஸ் கோட காமா நகர் உள்ளது. கோடை மற்றும் குளிர் காலங்களுக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் கோவா, உலகின் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக