புதன், 22 ஜூலை, 2020

ஜூலை 22, வரலாற்றில் இன்று. இந்தியவின் தேசியக்கொடி உறுதி செய்யப்பட்ட தினம் இன்று(1947).

ஜூலை 22, வரலாற்றில் இன்று.

இந்தியவின் தேசியக்கொடி உறுதி செய்யப்பட்ட தினம் இன்று(1947).

நம் நாட்டு தேசியக்கொடி ஒரே நாளில் உருவாக்கப்பட்டதல்ல. அது பலரது உழைப்பாலும், போராட்டத்தாலும் இன்றைய நாளில் நாம் வணங்கும் மூவர்ணக் கொடியாக உருப்பெற்றது. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை நிலைப்படுத்தவும், இந்தியர்களின் அடையாளத்திற்காக
வும் கொடியை உருவாக்கினர்.

மகாத்மா காந்தி, நேதாஜி, அன்னிபெசன்ட், பைக்கஜி காமா ஆகியோரின் முயற்சியால் பல சின்னங்களை கொண்ட பல கொடிகள் உருவாகின. இறுதியாக இன்று இருக்கும் தேசியக் கொடியை பிங்கலி வெங்கையா வடிவமைத்தார். இந்த கொடி, 1947ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் எழுச்சியையும், விடுதலையையும் குறிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி முதன் முதலாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் ஏற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக