புதன், 22 ஜூலை, 2020

ஜூலை 22, வரலாற்றில் இன்று. இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்! இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்!டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினம் இன்று.

ஜூலை 22,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்!

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்!

முதல் பெண் சட்டசபை துணைத்தலைவர்!

இந்தியாவின் முதல் மகளிர் சங்கதலைவி!

இந்தியாவுக்கே முன்மாதிரி

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
நினைவு தினம் இன்று.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
அவர்கள் புதுக்கோட்டையில்
1886ஆம் ஜூலை 30ஆம் நாள் பிறந்தார்.
நன்றாக கல்வி பயின்றார்.

முதல் பெண் மருத்துவர்
என்ற பெருமையை பெற்ற
டாக்டர். முத்துலட்சுமி அவர்கள்
1912 ஆம் ஆண்டு
Madras Medical College ல்
மருத்துவ படிப்பை முடித்து
Gold medal பெறுகிறார்.

1927  ஆம் ஆண்டு
சென்னை மாகாணத்தின்
சட்டமன்ற உறுப்பினராக
இந்தியாவிலேயே
முதல் பெண் உறுப்பினராக
தேர்வு செய்யப்படுகிறார்.

1956 ஆம் ஆண்டு
மத்திய அரசு
பத்மபூஷன் விருது
வழங்கியது.

இந்தியாவில்
பெண்களுக்கு எதிரான
"தேவதாசி" முறையை
ஒழிக்க காரணமாக விளங்கியவர்.

புற்றுநோய்
மருத்துவத்துறையில்
ஏராளமான நோயாளர்களுக்கு
சிகிச்சை வழங்கினார்.

1952 ஆம் ஆண்டு
சக்தி ஹரிஹரன்
அவர்களுடன் இணைந்து
அடையார் புற்றுநோய்
மருத்துவமனை தொடங்கினார்.

இன்று
உலக அளவிலான
புற்றுநோய்
மருத்துவமனையாக
சிறந்து விளங்குகிறது.

உலகம் முழுவதுமுள்ள
புற்றுநோய் பாதித்த
ஏராளமான நோயாளர்களுக்கு
புற்றுநோய் சிகிச்சை பெறும்
வாய்ப்பை ஏற்படுத்திய
பெருமைக்குரிய மருத்துவர்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி.

ஏழை எளிய பெண்களின்
நலனில் அக்கறை கொண்டவர்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

ஏழை எளிய பெண்களின்
மகப்பேறு காலத்தில்
இலவசமாக
பிரசவம் பார்த்தார்...!
மகப்பேறு காலத்தில்
தேவையான மருந்துகளை
இலவசமாக வழங்கினார் ...!!

தன் வாழ்நாள்
முழுவதும்
பெண்களின்
முன்னேற்றத்திற்கு
பாடுபட்டவர்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்கள்

இன்று
தமிழக அரசு
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
அவர்களது நினைவாக
கர்ப்பிணி பெண்களுக்கு
உதவும் நோக்கத்தில் மகப்பேறு
உதவித் தொகை
ரூபாய் 18,000/-
மூன்று தவணைகளாக
வழங்கி வருகிறது
தமிழக அரசு....

80 ஆண்டுகளுக்கு முன்னால் இதே வயதுள்ள, ஆதரவற்ற ஏழைப் பெண் குழந்தைகள் உயிருடன் இருக்கும் வாய்ப்பு 60% கூட இருக்காது. உயிர் மிஞ்சியிருந்தால் நிச்சயம் திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்திருக்கும். அந்தக் காலகட்டத்தின் முக்கியமான தலைவர்கள் பெண்ணடிமைத்
தனத்துக்கு எதிராகக் குரல்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு அடிமைத்தனத்தில் ஆணிவேர் என்ன என்பதுபற்றிய புரிதல் கிடையாது. இந்தப் புரிதல் இருந்த மிகச் சிலரில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் ஒருவர். இன்று தமிழகத்தின் பெண்கள் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு அடி கோலியவர் முத்துலட்சுமி ரெட்டி என்று கூறலாம்.

முத்துலட்சுமி ரெட்டி மிகச் சிறந்த மருத்துவர். ஆனால், மிகச் சிறந்த எழுத் தாளர் அல்ல. அவரது வாழ்க்கை வரலாற்றை இலக்கியத் தரத்துக்கு உதாரணமாகக் கொள்ள முடியாது. ஆனால், நூல் முழுவதும் ததும்பி வழியும் உண்மையும் நேர்மையும் அதை முக்கியமான படைப்பாக ஆக்குகிறது.

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தில் பெண்களின் நிலை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் பெண்களின் நிலை, எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய முக்கியமான
தடைகளைத் தாண்டி…
முத்துலட்சுமி ரெட்டி என்றால், தேவதாசி முறைக்கு எதிராகக் குரல்கொடுத்தவர் என்றுதான் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், அந்தக் குரல் மக்களிடையே ஒலிக்க, அவர் மிகப் பெரிய தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது.

பெரியவளானதும் பள்ளி செல்ல இயலாததால், தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி வெற்றி பெற்ற முத்து லட்சுமி, புதுக்கோட்டையில் மிகவும் பாடுபட்டு கல்லூரியில் சேர்ந்தார். இண்டர் வகுப்பு முடிந்தபின், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அவர் உடல்நலம் சீராக இல்லாத போதிலும், மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

மருத்துவராகத் தொழில்புரிந்து பல வெற்றிகளைப் பெற்றாலும், நமது நாட்டின் அடித்தள மக்களின் தேவைகளைப் பற்றி அவர் மறக்கவேயில்லை. அவர் கூறுகிறார்:

இந்தியாவின் பெரிய நகரங்களில் 1,000 பிறப்புக்கு இறப்பு (ஒரு வயதுக்குள்) 350-லிருந்து 400 வரை. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகள்தான். அறியாமை, வறுமை, சுத்தமின்மை, குறைந்த கல்வியறிவு, சுகாதாரக் கட்டுப்பாடுகள்பற்றிய அறியாமை ஆகியவையே இந்த அவல நிலைக்குக் காரணம் என்று கொள்ள வேண்டும். எனவே, இலவசக் கட்டாய ஆரம்பக் கல்வி, இந்தியாவின் எல்லா இடங்களிலும் அவசரத் தேவையாக இருக்கிறது.

சிசுக்களுக்குப் பால் வேண்டும். உழைக்கும் பெண்களின் குழந்தைகளுக்குக் காப்பகங்கள் வேண்டும், ஏழைகளுக்கு இலவச மருத்துவமனைகள் வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர் முத்துலட்சுமி.

மகாத்மா காந்தியிடம் மிகுந்த பற்றுக்கொண்டிருந்த அவர், பெண்ணின் திருமண வயதை 16 வயது வரை உயர்த்தத் தனது உறுதியான ஒப்புதலை காந்தி அளித்ததையும், தேவதாசி முறையை அவர் கடுமையாக எதிர்த்ததையும் நன்றியோடு நினைவுபடுத்துகிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக