புதன், 22 ஜூலை, 2020

*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண் 379 நாள் :22.07.2020 அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் சார்பான அரசாணை வெளியீடு*

*🟡பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம்: அரசுத்தேர்வுகள் இயக்ககம்.*

*🌟12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 24 - 30 வரையிலான நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.*

*🌟பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம்*

*🌟மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்*

*🌟தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்*

*🌟மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும்.*

*🌟விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்.*

*🌟மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும்.*

*🌟'பள்ளி வளாகத்திற்குள் ஒன்று கூடுதலை தவிர்க்க வேண்டும்'.*

*🌟மாணவர்கள் முகக்கவசமும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள்  கையுறையும் அணிந்திருக்க வேண்டும்.*

*🌟தனி மனித இடைவெளி, கை கழுவ வசதி உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிப்பு*

*🌟கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் பள்ளிகளில் சென்று சான்றிதழ்களை  பெறலாம்.*

*🌟சான்றிதழ் வழங்குவதற்கு முன்பாக பள்ளிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.*




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக