புதன், 9 டிசம்பர், 2020

பொது முடக்க காலத்திலும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளருக்கு போக்குவரத்து படி 2,500 ரூபாய் வழங்கலாம்- கருவூல கணக்கு ஆணையர் உத்தரவு

 பொது முடக்க காலத்தில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் போக்குவரத்து படியான ரூ.2500 பெரும்பாலான மாவட்டங்களில் வழங்கப்படவில்லை .மே மாதம் வழங்கப்பட்ட சில மாவட்டங்களில் மீண்டும் கருவூலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என சார் நிலை கருவூல அலுவலர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.இதனை எதிர்த்து மணப்பாறையை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கருவூல கணக்கு ஆணையரிடம் புகார் அளித்திருந்தார் .இந்தப் புகாரின் பேரில் அரசிடம் விளக்கம் பெற்று பொது முடக்க காலம் என்பது மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட காலம் .எனவே காலத்தை அவர்கள் பணிக்கு வந்ததாகவே கருதி போக்குவரத்து படி 2,500 ரூபாய் வழங்க அனைத்து மாவட்டங்களுக்கும் கருவூல ஆணையர் உத்தரவு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக