புதன், 10 மார்ச், 2021

ஜூலை 2021 DA*மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

*ஜூலை 2021 DA*

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

*விளக்கம்*

*ஏற்கனவே வழங்கப்பட்டது*
ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.

*நமக்கு வழங்க வேண்டிய DA*
(தோராயமாக)
01.01.2020 -2%
01.07.2020 - 2%
01.01.2021 - 2%
என தோராயமாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த 6% DA கோவிட் காரணமாக பணப்பலன் நிறுத்திவைக்கப்பட்டது.

*இனிமேல்*
தற்போது 01.07 2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தோராயமாக 01.07 2021 அன்று 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.

*மொத்தம் 25% DA*
கோவிட் காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA
மற்றும் 
ஜூலை 2021 2% DA 
என 
மொத்தம் 8% உயர்த்தி ஜூலை 2021 முதல் 25% DA கணக்கிடப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக