திங்கள், 1 மே, 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நாமக்கல்லில் மே தின கொடியேற்று விழா

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நாமக்கல்லில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.


நாமக்கல் பிரதான சாலை பலபட்டறை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயலாளர் திரு.செந்தில்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமதிகோ.கு. ராஜேஸ்வரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கொடியினை ஏற்றி வைத்தார். ஒன்றிய தலைவர் திரு தா. பெ. கண்ணன் முன்னிலை வகித்தார். 



மாநிலப் பொருளாளர் திரு.முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மே தினத்தின் முக்கியத்துவம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயல்பாடுகள், மே தின வரலாறு குறித்து விளக்கம் அளித்து பேசினார். 

முன்னதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட தலைவர் திரு அ. ஜெயக்குமார் தொடக்க உரையாற்றி பேசினார். 

மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு.தண்டபாணி, மகளிர் அணி அமைப்பாளர் திருமதி கௌரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர். 

அப்போது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில், மே தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்புகள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.செல்வராணி, திருமதி.வெண்ணிலா, திருமதி.கிருத்திகா உள்பட பலரும் கலந்துகொண்டனர். 


நிறைவாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமதி.ஜீவா ஜாய் நன்றி தெரிவித்தார். 

----------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக