திங்கள், 1 மே, 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பரமத்தியில் மே தின கொடியேற்று விழா

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பரமத்தியில் மே தின கொடியேற்று விழா 01.05.2023 காலை 10 மணிக்கு பரமத்தி வட்டாரக்கல்வி கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.



இந்நிகழ்விற்கு ஒன்றிய தலைவர்.நா.ரங்கசாமி தலைமை தாங்கினார். 

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.ப.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                             

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமதி.கு.பத்மாவதி ஆசிரியர் மன்றக் கொடி ஏற்றினார்.  


                                 

மாவட்டத் தலைவர் அ.ஜெயக்குமார்,மாவட்ட துணைத் தலைவர் இரா.ரவிக்குமார்,மாவட்ட துணைச் செயலாளர்கள் வெ.வடிவேல்,சி.ஜெயவேல்,தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் த.தண்டபாணி,கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் திரு.இர.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.                       

மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.



மாநிலப் பொருளாளர் திரு.முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மே தினத்தின் முக்கியத்துவம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயல்பாடுகள், மே தின வரலாறு குறித்து விளக்கம் அளித்து பேசினார். 




இந்நிகழ்வில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மு.ரகுபதி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் லூ.சூசை அந்தோணி,ஜெ.கலைவாணி,மகளிரணி அமைப்பாளர் வீ.மாலதி,துணை அமைப்பாளர் நா.வளர்மதி,இலக்கிய அணி அமைப்பாளர் பொ.அன்பரசி,இளைஞரணி அமைப்பாளர் திரு.துரைமுருகன்,செயற்குழு உறுப்பினர்கள் அ.வளர்மதி,த.மாலதி பெ.குப்புலட்சுமி,மு.லதா,இரா.கனிமொழி,சு.அபிராமசுந்தரி,சு.ப.உமையாள் ஆகியோர் பங்கேற்று கொடிவணக்கம் செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக