வெள்ளி, 16 நவம்பர், 2018

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் ஓராண்டு பட்டயப் படிப்பு விண்ணப்பிக்கலாம்


சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வு ஆகியவற்றில் (2019-2020) ஓராண்டு கால பட்டயப் படிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும்.
இந்தப் பட்டயப்படிப்பு சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் ஓராண்டு காலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பட்டய படிப்புக்கான விண்ணப்பத்தினை ulakaththamizh.org என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.2,500. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அருகில், தரமணி, சென்னை என்ற முகவரிக்கு டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது குறித்து மேலும் தகவல் பெற 044-22542992, 95000 12272 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


IIT Madras Recruitment 2018 Notification Highlights – Apply Online


IIT Madras Recruitment 2018 2019 | IIT Madras invites Online Application for the post of Senior Research Fellow (SRF), Project Associate, Project Technician Posts. IIT Madras SRF, Project Technician Jobs Notification 2018 Released. IIT Madras invites online applications for appointment in following SRF, Project Technician post in Indian Institute Of Technology Madras. Opening Date and time for Submission of Application is 09.11.2018 and end up by 24.11.2018. You can check here IIT Madras Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, IIT Madras Selection Process, How to apply, IIT Madras Syllabus, IIT Madras Question Paper, IIT Madras Admit Date Release Date, IIT Madras Exam Date, IIT Madras Result Release Date & other rules are given below.


IIT Madras Recruitment 2018 Notification Highlights – Apply Online
Organization Name: Indian Institute Of Technology Madras
No. of Posts: Vacancies
Name of the Posts: Senior Research Fellow (SRF), Project Associate, Project Technician Posts
Job Location: Chennai
Selection Procedure: Written Test, Skillt Test & Interview
Application Apply Mode: Online
Last Date: 24.11.2018
Name of the Post & No of Vacancies:
Senior Research Fellow
Senior Research Fellow
Project Associate
Project Technician
Security-cumFire Officer
Project Technician
Eligibility Criteria for IIT Madras SRF, Project Technician:
Senior Research Fellow – M.Tech / M.E in Computer Science/ Engineering from a reputed university with an average mark of 60% or 6.5 CGPA and above
Senior Research Fellow – M.Tech/ M.E in Civil Engineering from a reputed university with an average mark of 60% or 6.5 CGPA and above
Project Associate – B.Tech/ B.E in Civil/ Mechanical/ Electrical Engineering from a reputed university with an average mark of 60% or 6.5 CGPA and above.
Project Technician – Diploma in Civil/ Mechanical/ Electrical Engineering with an average mark of 60% and above.
Age Limit:
Go through IIT Madras official Notification 2018 for more reference
Salary Details:
Senior Research Fellow – Rs.30,000 per month
Project Associate – Rs.21500/-
Project Technician – Rs.16000/-
IIT Madras SRF, Project Technician Selection Procedure:
Written Test
Skill Test & Interview
How to apply IIT Madras SRF, Project Technician Vacancy?
Step 1: Log on to IIT Madras Careers Page at official website to https://icsris.iitm.ac.in/recruitment/
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit”
Step 8: Take a print out of online application for future use.
Step 9: If there is an issue to submit the application please send E-mail to recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 09.11.2018
Last date for Submission of Application: 24.11.2018
IIT Madras Important Links:
IIT Madras Official Website Career Page: Click Here

IIT Madras Official Notification PDF: Click Here

IIT Madras Online Application Form: Click Here

Apply Mode: Online

குருப்-2 தேர்வுக்கான கீ-ஆன்சர் வெளியீடு~புதிய முறை அமல்~ டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...

2021ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவோம்~ இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி ...

பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு 7 வார சம்பளத்தை அரசே வழங்கும்: பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு







புதுடெல்லி : பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு கர்ப்பிணிகள் வேலைக்கு வராத 7 வாரங்களுக்கான சம்பளத்தை அரசே வழங்கும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பை கடந்த ஆண்டு 26 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. விடுமுறை நீட்டிப்பை பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்க மறுப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. 

இதையடுத்து 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பெண் தொழிலாளர்கள் பிரசவ விடுப்பு எடுக்கும் 26 வார காலத்தில் 7 வாரங்களுக்கான சம்பளத்தை வேலைவழங்கும் நிறுவனங்களுக்கு அரசே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது: மாநில அரசுகளிடம் பணியாளர் நலவரி குறைவாக இருப்பதால் அதை மத்திய தொழிலாளர் அமைச்சகமே இந்த தொகையை பிரசவ விடுமுறை அளிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கும். கூடுதலாக பிரசவ விடுமுறை அறிவிக்கப்பட்ட 14 மாதங்களில் பாதி காலத்திற்கான தொகையை அரசு ஏற்கும். அதன்படி மாதச்சம்பளம் ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகமாக பெறும் பெண் ஊழியர்களுக்கான 7 வார பிரசவ விடுப்புக்கான சம்பள தொகை சம்மந்தப்பட்ட வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதனால் கர்ப்பிணி ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



பாடப் புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம்: சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பாதிப்பு


பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கல்வித் துறை காலம் தாழ்த்தி வருவதால் சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்கள் புத்தகங்கள் இன்றி அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, உருது, கன்னடம் ஆகிய சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால், அவர்களது கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. கட்டாய தமிழ் வழிக்கல்வி சட்டத்தை தொடர்ந்து, கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தமிழ் அல்லாத சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்கள், தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
அனைவருக்கும் ஒரே விதமான சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக அரசு, மாணவர்களுக்கு புத்தக சுமையைக் குறைக்கும் நோக்கில் பாடப் புத்தகங்களை பருவ முறையைப் பின்பற்றி மூன்று பருவங்களாகப் பிரித்து வழங்கி வருகின்றது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்கள் அனைவருக்கும் பாடப் புத்தகங்கள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து 5 மாதங்கள் கடந்த நிலையிலும், பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையாம். தற்போது இரண்டாம் பருவ பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு முதல் பருவ பாட நூல்கள் கிடைக்காததால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக் குறியாகி உள்ளது.

தமிழ்ப் பாட நூல்களை வைத்து சிறுபான்மை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து நோட்டுப் புத்தகங்களில் மாணவர்கள் எழுதிக்கொண்டு படிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தெலுங்கு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில், கற்றல் திறன் குறைந்து வருகிறது. தமிழக அரசு பாட நூல்கள் குறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே பெற்றோர்கள் அடுத்த கட்டமாக தங்கள் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்று முடிவை செய்ய முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாட நூல்களை மொழிமாற்றம் செய்யும் பணிகளில் தெலுங்கு மற்றும் சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மொழிப் பெயர்ப்பு பணிகள் வேகமாக நடைபெற்று 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. தற்போது புத்தகங்கள் அச்சிடும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. விரைவில் தெலுங்கு மற்றும் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பாட நூல்கள் வழங்கப்படும் என்றார்.





வியாழன், 15 நவம்பர், 2018

புயல் எங்குள்ளது? மழை எங்கு பெய்யும்? ~ Live link...

Click here to see...

ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்








மாணவர் குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்



மாணவர்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை மாணவர் குழுக்கள் மூலம் கண்டறியும் திட்டம் விரைவில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது.

அனிமீயா குறைபாடு மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. இந்த திட்டமானது சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாராத் துறை, காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்தபட்டு வருகிறது. 
இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 13 துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உள்ள ஊட்டச் சத்து குறைபாட்டை கண்டறிய மாணவர் குழுக்களை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 280 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் பெரிய ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும். இதற்காக பல மாதங்கள் ஆகலாம்.

எனவேதான் மாணவர்களிடம் உள்ள ஊட்டச் சத்து குறைப்பாட்டை மாணவர்களை வைத்தே கண்டறியும் முறையானது பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 8 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். 
ஆசிரியர்கள் இந்த குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இதனைத் ெதாடர்ந்து அந்த மாணவர்களின் பள்ளிகளில் உள்ள சக மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது என்பதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். 
மாணவர்களின் அளிக்கும் தகவல்களை பொறுத்து ஆசிரியர்கள் அது எந்த மாதிரியான பிரச்னை எண்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி


பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி: பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர் களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக, நவம்பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் எஸ்.ஆர்.அரங்க நாதன் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள எம்சிசி பள்ளி யில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்புரையாற்றினார். பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பங்கேற்று போட்டி களில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு களையும், சிறந்த நூலகர் களுக்கு விருதுகளையும் வழங் கினார்.