சனி, 24 நவம்பர், 2018

அனைத்து பள்ளிகளிலும் கடைசி வெள்ளி SMC / SMDC Meeting நடத்த நிதி வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு



Inspire award தேர்வான மாணவர்கள் list 2018

கல்வித்துறையில் நேர்மையான அதிகாரிகளை காண்பதே கடவுளைக் காண்பது போல ஆகி விட்டது~ பள்ளி ஆசிரியர்கள் குமுறல்…

அரசு வழங்கும் வழக்கமான பணப் பலன்கள் பெற கல்வி அலுவலகங்களில் கட்டாய கட்டணம் வசூலிப்பதாக உதவி பெறும் பள்ளி/அரசுப்பள்ளி  ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் ஒரு  சி.இ.ஓ., மூன்றுக்கும்,
நான்குக்கும் மேலான டி.இ.ஓ.,க்கள்,10 க்கும் அதிகமான பி.இ.ஓ.,க்கள் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஆசிரியர்களின் தேர்வுநிலை, சிறப்பு நிலை, உயர் கல்வி ஊக்க ஊதியம் உள்பட பல்வேறு பணப் பலன்கள் தொடர்பான ஆவணங்கள் எழுதப்படுகிறது.
பணப்பலன்கள் அனுமதிக்கப்படுகிறது.
.
இதற்காக அரசு/அரசு  உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் நடத்தப்படுகிறது.

 பணம் வழங்காவிட்டால் பைல்கள் கிடப்பில் போடப்படுகின்றன. நொண்டிச்சாக்குகள் சொல்லி திருப்பப்படுகின்றன.
ஆசிரியர்கள் அவமானப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது: 

கல்வித்துறை  அலுவலகங்களில் கட்டாய வசூல் வேட்டை குதுகலாமாக நடக்கிறது.
உயர்அலுவலர்களுக்கும் இதில் பங்கு தர வேண்டுமென கூறியும் கேட்கப்படுகிறது.
இதனால் யாரிடமும்  இந்த வசூல்பற்றி சொல்வதற்கு  ரொம்பவே பயமாக உள்ளது.

 உயர்கல்வி ஊக்க தொகைக்கு 10 ஆயிரம், சரண்டருக்கு 2 ஆயிரம், 
தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற 10 ஆயிரம் ரூபாய் என விலைப் பட்டியல் வைக்காத குறையாக வசூலிக்கின்றனர்.

சில ஊழிய
ர் மட்டுமே நேர்மையாக உள்ளனர். 
கல்வித்துறையில் நேர்மையானவர்களை காண்பதே கடவுளைக் காண்பது போன்று அரிதாகி வருகிறது.

அரசு உதவிபெறும்பள்ளி ஆசிரியர்களிடம் மட்டுமல்ல,ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி, அரசுப் பள்ளி ஆசிரியரகளிடமும் இவ்வாறான கட்டாயவசூல் வேட்டை தொய்வின்றி,
மிகச்சிறப்பாக,
அமோகமாக நடைபெறுகிறது .

இந்த கட்டாய வசூலுக்கென்றே ஆசிரியரகள் சிலரையே புரோக்கர்களாக்கி அலுவலகத்தின் வாசற் படியிலேயே உட்கார வைத்துக்கொண்டு உள்ளனர். இந்த அவலம்  எப்போது ,எப்படி
சரி செய்யப் படும் என்பதே ஆசிரியர்களின் ஏக்கமாக உள்ளது.குமுறலாக உள்ளது.

காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை நடத்தினால் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி



சென்னையில் சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து கடத்தப்பட்டன. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில், எக்ஸ்னோரா நிர்மல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக அரசுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை மட்டும் விசாரிக்க மாவட்டந்தோறும் தனிப்படை அமைக்க வேண்டும். கடத்தப்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், பெற்றோருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. மேலும், தமிழகத்தில் குழந்தைகள் காப்பகங்கள் குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வக்கீல் சி.அய்யப்பராஜ் ஆஜராகி, குழந்தைகள் காப்பகம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகத்தில் 1,274 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 44 காப்பகங்களை அரசு நடத்துகிறது. மீதமுள்ள காப்பகங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் நடத்துகின்றன. 

இந்த காப்பகங்களில் 52 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட காப்பகங்களை மூடிவிட்டாலும், இன்னும் 3 காப்பகங்கள் உள்ளன’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘குழந்தைகளை கடத்தும் கும்பல்கள் தமிழகத்தில் உள்ளதா?. இந்த கும்பலை போலீசார் அடையாளம் கண்டுள்ளனரா?. அவர்கள் குறித்து ஏதாவது தகவல் உள்ளதா?. காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்து, அவற்றின் விவரங்களை பாதுகாத்து வந்தால், எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை வரும்போது அவை உதவும். எனவே, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்தால் என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அப்போது ‘மாற்றம் இந்தியா’ என்ற அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் ஆஜராகி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு மனுதாரராக சேர்த்தனர். பின்னர், ‘காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை நடத்துவது குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசின் அடுத்த அடி 'வாகன மதிப்பிழப்பு'... ஒரு அதிர்ச்சி தரும் சர்வே முடிவுகள் ....


இந்தியர்கள் மத்தியில் சொந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று வாகனம் இல்லாத வீடுகளே இந்தியாவில் மிக குறைவுதான். 


குறைந்த பட்சம் ஒரு வாகனமாவது ஒரு வீட்டில் இருக்கிறது. சிலர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு வாகனம் என்று பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் பொது போக்குவரத்தின் பற்றாகுறையும், அதற்கான பயண செலவுமே ஆகும். பெரு நகரங்களில் செயல்படும் பெரும்பாலான பேருந்துகள் அதிக கூட்டத்துடன் செல்கிறது. இதனால் மக்கள் அதில் பயணிக்க விரும்பவில்லை.

மேலும் இந்தியா முழுவதும் தற்போது பேருந்துகளில் பயணிக்க டிக்கெட்டிற்கு கொடுக்கும் பணம் என்பது சொந்த வாகனம் வாங்கி அதற்கான எரிபொருளுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட சமமாகிறது. அதனால் பெரும்பாலும் சொந்த வாகன பயன்பாட்டை விரும்புகின்றனர்.
போதாக்குறைக்கு இந்தியாவில் மக்கள் தொகை வேறு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வேண்டும். தற்போது ஆட்டோமொபைல் மார்கெட்டும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. விரைவில் இந்திய மக்கள் தொகையை தாண்டி இந்தியாவில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிலைமை இப்படி இருக்கையில் இந்தியாவில் எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் சந்தைக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு விட்டது. எதிர்காலத்தில் இந்தியா போன்று அதிக மனித வளம் கொண்ட நாட்டில் ஆட்டோமொபைலுக்கு பெரிய மார்கெட் இல்லை என்றால் அவர்களது வருமானத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
இதனால் எதிர்கால இந்தியாவிலும் தொடர்ந்து ஆட்டோமொபைலுக்கான மார்கெட்டை நிலை நாட்ட தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுடன் சேர்ந்து சில திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஆயுள் காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதாவது நீங்கள் புதிதாக ஒரு வாகனம் வாங்கினால் அந்த வாகனத்தை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்ற வகையில் சட்டம் இயற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டில்லியில் இது போன்ற சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. பெட்ரோல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகளும், டீசல் வாகனங்களுக்கு 10 ஆண்டுகளும் ஆயுள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுளை தாண்டி வாகனங்களை இயக்க கூடாது என்ற உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த உத்தரவு கொண்டு வரப்படுவதற்கு முக்கிய காரணம் டில்லியில் ஏற்பட்ட காற்று மாசுதான். சுமார் 10-15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் எல்லாம் அதிக அளவு மாசுகளை வெளியேற்றும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த அரசு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே முறையாக இதை செய்யாமல் முதலில் மெதுவாக பெரு நகரங்களில் இதை நடைமுறைப்படுத்தி விட்டு மெது மெதுவாக இதை சிறிய நகரங்கள் என இந்தியா முழுவதிலும் இதை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதிஅயோக் அமைப்பின் மூத்த ஆலோசகர் சுஜீத் கூறுகையில் : "தற்போது ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்து துறையின் கிராப்களை கணக்கிடுகையில் எதிர்காலத்தில் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்பு என்பது மிக குறைவானதாகி விடும். இதற்கு எல்லாம் தீர்வு குறிப்பிட்ட வயதை தாண்டிய வாகனங்களுக்கு தடை விதிப்பதுதான்.
ஆனால் அவ்வாறு செய்தால் இந்தியாவில் சுமார் 3 கோடி வாகனங்கள் செயல்பட முடியாத நிலைக்கு சென்று விடும். அந்த வாகனங்களை மக்களால் பயன்படுத்தவும் முடியாது. வேறு எதுவும் செய்ய முடியாது வாகனங்களை அழிக்க மட்டுமே முடியும்" என கூறினார்.
மேலும் வாகனங்களை அழிக்கவும் இந்தியாவில் குறைந்தது 500 அல்லது 600 கார் ரீ சைக்கிள் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான சாத்திக்கூறுகள் மிக குறைவு.
இதற்கிடையில் வாகனங்களை அழிப்பதற்கு முன் அதை எவ்வாறு அழிக்க வேண்டும்? அதன் கழிவுகளை எப்படி ரீ சைக்கிள் செய்ய வேண்டும்? என்ற சரியான திறனை நாம் வளர்க்கவேண்டும். அதற்கு முன்னர் இவ்வாறான முடிவுகளை எடுப்பது நிச்சயம் தவறு எனவும் அவர் குறிப்பிட்டார்.
By
Drive spark news

தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ்ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது...


தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ்ஊதிய உயர்வு 
வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.  

அதுபோல ஓய்வு பெறுகின்ற(மூன்று மாதங்கள்)  ஊதிய உயர்வு வழங்கலாம்.

பள்ளி மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல் சார்பான நாமக்கல் CEO செயல்முறைகள்...

வெள்ளி, 23 நவம்பர், 2018

60 ஆயிரம் ஆண்டு பழமையான நார்த் சென்டினல் தீவில் யார் வசிக்கிறார்கள்? அங்குச் செல்ல ஏன் அஞ்சுகிறார்கள்? தடை ஏன்?-

60 ஆயிரம் ஆண்டு பழமையான நார்த் சென்டினல் தீவில் யார் வசிக்கிறார்கள்? அங்குச் செல்ல ஏன் அஞ்சுகிறார்கள்? தடை ஏன்?- ஓர் அலசல்

அந்தமானுக்கு அருகே இருக்கும் நார்த் சென்டினல் தீவு
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள மர்மமான நார்த் சென்டினல் தீவுக்கு பூர்வீக பழங்குடிகளான சென்டினல் மக்களைச் சந்திக்கச் சென்ற 26 வயது அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடி மக்களால் கொல்லப்பட்ட சம்பவம்தான் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.


உலகின் சத்தம் அறியாத, நாகரீகத்தின் தடம் அறியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேற்றுநாகரீக மனிதர்களுடன் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வருபவர்கள்தான் சென்டினல் பழங்குடியின மக்கள.
அந்தமான் தீவில் உள்ள இந்த சென்டினல் தீவு இந்திய அரசின் ஆவணங்களின்படி, ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகள் பழையானது. அங்குள்ள சென்டினல் பழங்குடியின மக்களின் பூர்வீகம் ஏறக்குறைய 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று மத்திய அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் ஆழமாகப் பார்த்தால், ஆப்பிரிக்காவில் உருவான முதல் மனித இனம், ஆசியாவுக்குள் வரும்போது, இந்த சென்டினல் மக்கள் வந்துள்ளார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எத்தனைத் தீவுகள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகச்சிறிய தீவான அந்தமானில், கிழக்கு தீவு, வடக்கு அந்தமான் தீவு, ஸ்மித் தீவு, கர்பியூ தீவு, ஸ்டீவர்ட் தீவு, லாண்ட்பால் தீவு, ஆவ்ஸ் தீவு, மிடில் அந்தமான், லாங் தீவு, ஸ்ட்ரய்ட் தீவு, நார்த் பாசேஜ், பாராட்டாங், சவுத் அந்தமான், ஹேவ்லாக், நிலத்தீவு, பிளாட் பே, லிட்டில் அந்தமான், சவுரா, டில்லாங் சாங் தீவு, தெரஸா, கட்சல், நான்கவுரி, கமோர்டா, புளோமில், கிரேட் நிகோபர், லிட்டில் நிகோபர், நார்கான்டம் தீவு, இன்டர்வியூ தீவு ஆகிய மிகச்சிறிய தீவுகள் உள்ளன.
தடைசெய்யப்பட்ட தீவு
அதிலும் அந்தமானில் உள்ள நார்த் சென்டினல் தீவு மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட, மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவாகும். கடந்த 2017-ம் ஆண்டு மாநிலங்கள் அவையில் உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் இந்தத் தீவு குறித்துக் கூறுகையில், ஒட்டுமொத்த நார்த் சென்டினல் தீவு 59.67 சதுர கி.மீ. கடற்கரை 5 கி.மீ தொலைவு கொண்டது. இந்த தீவில் பூர்வீக பழங்குடிகளான சென்டினல் மக்கள் வசிப்பதால், அந்தமான் நிகோபர் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தடையை மீறிச் செல்வோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
யார் இந்த சென்டினல் மக்கள்?
அந்தமானில் உள்ள நார்த் சென்டினல் தீவில் வசிக்கும் நெக்ரிட்டோ வகை பழங்குடி மக்களே நார்த் சென்டினல் மக்கள். இவர்கள் இதுவரை உலகில் மற்ற மனிதர்களோடு தொடர்பு இல்லாமல், வாழ்பவர்கள். கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தபோது, கற்களை ஆயுதமாகவும், இலை, மரப்பட்டைகளையும் ஆடைகளாகவும் அணிந்தார்கள். அந்த வாழ்க்கை முறையை இன்னும் கடைப்பிடித்து வருபவர்கள். அந்தமானில் உள்ள ஜார்வா எனும் பழங்கு மக்களின் அடிப்படை உடற்கூறுகள் இந்த நார்த் சென்டினல் மக்களுக்கு உண்டு.
அந்தமானில் உள்ள இந்திய மானுடவியல் துறையின் கணக்கின்படி ஏறக்குறைய இந்த சென்டினல் மக்களின் பூர்வீகம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ஆண்டுகளாகும். இந்தத் தீவில் ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எப்படி பாதுகாப்பட்டுள்ளனர் ?
அந்தமான் நிகோபர் தீவுகளை கடந்த 1956-ம் ஆண்டு பழங்குடி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. அந்தமானைச் சுற்றியுள்ள தீவுகளுக்குள்,குறிப்பாகப் பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்குள் மத்தியஅரசின் அனுமதியின்றி யாரும் செல்லக்கூடாது. அவர்களைப் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல், உணவுப்பொருட்கள், உடைகள், உள்ளிட்டவை கொடுக்க முயற்சித்தல் குற்றமாகும், அபராதமும் விதிக்கப்படும்.
சென்டினல் பழங்குடிகள் எப்படிப்பட்டவர்கள்?
அந்தமான் தீவுகளில் அந்தமான் பழங்குடி மக்கள், கிரேட் அந்தமானிஸ், ஓங்காஸ், ஜார்வாக்கள், சென்டினல்கள் எனப் பலவகை பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் சென்டினல்கள் பழங்குடி மக்கள் உலகின் பிற மனிதர்களின் தொடர்பின்றியும், நாகரீகத்தை அறியாமலும் வாழ்ந்து வருகிறார்கள்.
இதுவரை கடந்த 1991-ம் ஆண்டு இந்திய மானுவியல் துறை சார்பில் சென்ற குழுவை மட்டும் சென்டினல்கள் தாக்காமல் சந்தித்துள்ளனர். அவர்கள் அளித்த தேங்காய்களை மட்டும் பெற்றுக்கொண்டனர்.
மக்கள் தொகை எவ்வளவு?
கடந்த 1901 முதல் 1921-ம் ஆண்டுவரை ஆங்கிலேயர்கள் கணக்கின்படி,117 பேர் வரை வாழ்ந்துள்ளனர். அதன்பின் 1931-ம்ஆண்டு, அந்த எண்ணிக்கை 50 ஆகவும்,பின் 1991-ம் ஆண்டு 23 பேராகவும் சென்டினல் மக்கள் எண்ணிக்கை குறைந்தது. கடைசியாக 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கில் 39 பேர் வாழ்ந்து வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், மானுவியலாளர்கள் அங்கு 400 பேர் வரை வசிக்கக்கூடும் எனத் தெரிவிக்கிறார்கள்.
இதற்குமுன் வேறுமனிதர்களை சென்டினல்கள் தாக்கியுள்ளார்களா?
கடந்த 2006-ம் ஆண்டு அந்தமானைச் சேர்ந்த மீனவர்கள் சுந்தர் ராஜ்(48), பண்டிட் திவாரி(52) ஆகியோர் தங்கள் படகை சென்டினல் தீவில் நிறுத்தி சிறிதுநேரம் ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது திடீரென சென்டினல் பழங்குடி மக்கள் அந்த இரு மீனவர்கள் மீதும் கூர்மையான அம்புகளை எய்தி தாக்குதல் நடத்தியதில் இருவரும் கொல்லப்பட்டனர்.
அதன்பின் இரு மீனவர்களும் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இந்திய கடற்படையினர் இரு மீனவர்களையும் உடல்களையும் மீட்கச் சென்றபோது அவர்கள் மீதும் சென்டினல் பழங்குடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் இரு மீனவர்கள் உடலை மீட்க முயன்றபோது, ஹெலிகாப்டர் மீது அம்பு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே கடைசியாக சென்டினல்களை எடுத்த படமாகும்.
உணவுகள், ஆயுதங்கள்
சென்டினல் மக்கள் இன்னும் வில் அம்புகளையும், கற்களால் ஆன ஆயுதங்களையும் தங்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் தாக்குதல் துல்லியம் 350 அடியாகும். அதாவது 350 அடியில் உள்ள பொருட்களையும் மிகத் துல்லியமாக தாக்கும் திறமை இவர்களிடம் இருக்கிறது. அதனால்தான் சென்டினல் பழங்குடி மக்களை நெருங்க மீனவர்கள், கடலோர படையினர் அஞ்சுகிறார்கள். சென்டினல் தீவில் இருக்கும் காட்டுப்பன்றி, தேன், பழங்கள், இலைகள், மீன், தேங்காய் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உண்டு வாழ்கின்றனர்.

மத்திய அரசிடம் பதிவு செய்யாவிட்டல் வெளிநாட்டு வேலைக்கு போக முடியாது ~ ஜனவரியில் இருந்து கட்டாய நடைமுறை…

ஐடிஐ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வாய்ப்பு~ தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு…