வியாழன், 12 டிசம்பர், 2019
டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.
ராஜா செல்லையா எனப் பரவலாக
அறியப்படும் ராஜா ஜேசுதாஸ் செல்லையா அவர்களின் பிறந்த தினம் இன்று.
ராஜா செல்லையா(12 டிசம்பர் 1922 - 7 ஏப்ரல்
2009) ராஜா செல்லையா ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்.
இந்திய
பொருளாதாரத்தில் வரி சீர்திருத்தத் துறையில்
முன்னோடியாக விளங்கியவர். இவரது தலைமையில் வரி
சீர்திருத்த குழுவை இந்திய அரசு அமைத்தது.
ஸ்பிக்
ஆதரவுடன் சென்னையில் நிறுவப்பட்ட
மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்
நிறுவனத்தின் முதல் தலைவராவார்.
வரலாற்றில் இன்று.
ராஜா செல்லையா எனப் பரவலாக
அறியப்படும் ராஜா ஜேசுதாஸ் செல்லையா அவர்களின் பிறந்த தினம் இன்று.
ராஜா செல்லையா(12 டிசம்பர் 1922 - 7 ஏப்ரல்
2009) ராஜா செல்லையா ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்.
இந்திய
பொருளாதாரத்தில் வரி சீர்திருத்தத் துறையில்
முன்னோடியாக விளங்கியவர். இவரது தலைமையில் வரி
சீர்திருத்த குழுவை இந்திய அரசு அமைத்தது.
ஸ்பிக்
ஆதரவுடன் சென்னையில் நிறுவப்பட்ட
மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்
நிறுவனத்தின் முதல் தலைவராவார்.
டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.
👉 சர்வதேச கன உலோக தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி உலகளவில் உள்ள கன உலோக ரசிகர்கள் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
👉 இத்தினத்தில் சிறந்த மற்றும் மிக பெரிய கன உலோகங்களினால் வாசிக்கப்பட்ட ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது. வீடுகள், வேலை செய்யும் இடம், கார் ஆகியவற்றிலும் இச்சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
வரலாற்றில் இன்று.
👉 சர்வதேச கன உலோக தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி உலகளவில் உள்ள கன உலோக ரசிகர்கள் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
👉 இத்தினத்தில் சிறந்த மற்றும் மிக பெரிய கன உலோகங்களினால் வாசிக்கப்பட்ட ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது. வீடுகள், வேலை செய்யும் இடம், கார் ஆகியவற்றிலும் இச்சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.
இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட தினம் இன்று(1911).
1911ஆம் ஆண்டு டிசம்பர் 12இல்
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.
18,19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது.
1911ஆம் ஆண்டு இதே நாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.
1920களில் பழைய டெல்லி நகருக்குத் தெற்கே புதுடெல்லி என பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது.
1947இல் இந்திய விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.
On Dec 12, 1911, Delhi replaced Calcutta as the capital of India
வரலாற்றில் இன்று.
இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட தினம் இன்று(1911).
1911ஆம் ஆண்டு டிசம்பர் 12இல்
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.
18,19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது.
1911ஆம் ஆண்டு இதே நாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.
1920களில் பழைய டெல்லி நகருக்குத் தெற்கே புதுடெல்லி என பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது.
1947இல் இந்திய விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.
On Dec 12, 1911, Delhi replaced Calcutta as the capital of India
- டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.
முதன்முதலில் கம்பியில்லாச் செய்தி அனுப்பப்பட்ட தினம் இன்று (1901).
இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோனி அட்லாண்டிக் கடல் பரப்பில், இன்றைய கனடாவின் நியூ
ஃபவுண்ட்லேண்டுக்கும்,இங்கிலாந்தின் கான்வெல்லுக்கும் இடையில் 1901 டிசம்பர் 12இல் கம்பியில்லாச் செய்தியை அனுப்பி, தொலைத் தொடர்புத் துறையில் இமாலயச் சாதனை செய்தார். இன்றைக்குள்ள எல்லாத் தொலைதொடர்புக்கும் இந்தக் கண்டுபிடிப்பு முன்னோடியானது.
அறிவியலின் மகத்தான இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்கான மூலவர், ஒரு இந்தியர். இன்னும் சொன்னால், அவர் மார்க்கோனிக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு உரித்தானவரும்கூட. அவர்தான் சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.
தாவரவியல், இயற்பியல் ஆகிய இரு துறைகளிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தவர். முதன் முதலில் கம்பியில்லாத் தொலைத்தொடர்பைக் கண்டுபிடித்தவர் இவர்தான். அதற்கு ஐந்தாண்டுளுக்குப் பிறகுதான் மார்க்கோனி தனது கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவிக்கிறார். ஜெகதீஸ் சந்திர போஸின் கண்டுபிடிப்பு அப்போதிருந்த ஆங்கிலேய அரசால் பரிந்துரை செய்யப்பட வில்லை
புதன், 11 டிசம்பர், 2019
ஆசிரியர் இனக்காவலரே!பாவலரே! நாயகரே! தங்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வணங்குகின்றது; மகிழ்கின்றது~மெ.சங்கர்
அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளும் சான்றுகளும் அவரின் வாழ்க்கை வரலாறு குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் இனக்காவலரே!பாவலரே! நாயகரே! தங்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வணங்குகின்றது; மகிழ்கின்றது.
_மெ.சங்கர்
டிசம்பர் 11,
வரலாற்றில் இன்று.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் பிறந்த தினம் இன்று.
பிரணாப் முகர்ஜி - ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரவாதி! அவரை இந்தியாவின் மாக்கியவல்லி, அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் சொல்லலாம்.(சாணக்கியரும் மாக்கியவல்லியும் நல்லவர்களா? என்று கேட்காதீர்).
டிசம்பர் 11, 1935 அன்று பிறந்த பிரணாப் முகர்ஜி 1969 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அதுதொடங்கி இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகள் பலவற்றையும் வகித்த அவர் 2004 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார். அதாவது ஒருமுறை கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே அதிகாரத்தின் உச்சத்தில் நீண்ட நாள் இருந்தவர் அவர்.
இப்படி 35 ஆண்டுகள் தேர்தலை சந்திக்காமலேயே நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல உயர்ந்த பதவிகளிலும் இருந்த அவர் 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக மேற்கு வங்கத்தின் சாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிகாரத்தின் உச்சத்தில் நீண்டநாட்கள் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியின் நீண்டநாள் கனவென்பது பிரதமர் பதவிதான்.
என்றாவது ஒருநாள் பிரதமர் இருக்கையில் அமரலாம் என்று காத்திருந்தவருக்கு ஜனாதிபதி பதவியை அளித்ததன் மூலம் நிரந்தரமாக வழியை அடைத்துவிட்டனர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.
அதுமட்டுமல்லாமல் காங்கிரசு கட்சியிலும், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும்
பிரணாப் முகர்ஜியின் ஆதிக்கம்தான் நீடித்தது. இன்னும் சொல்லப்போனால், சோனியா காந்தி,
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூன்று பேரும் யாராவது ஒருவரைக் கண்டு கொஞ்சமாவது பயந்தார்கள் என்றால் அது பிரணாப் மட்டும்தான். இப்போது காங்கிரசு கட்சி, அமைச்சரவை, நாடாளுமன்றம் என்கிற மூன்று இடங்களிலிருந்தும் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.
அதுமட்டுமல்ல, கட்சிப்பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இனி ஒருபோதும் அவரால் வரவே முடியாது. ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆனால் அப்புறம் வேறு பதவிக்கு போவது மரபல்ல. அப்புறம் இனி எங்கே பிரதமர் ஆவது?
வரலாற்றில் இன்று.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் பிறந்த தினம் இன்று.
பிரணாப் முகர்ஜி - ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரவாதி! அவரை இந்தியாவின் மாக்கியவல்லி, அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் சொல்லலாம்.(சாணக்கியரும் மாக்கியவல்லியும் நல்லவர்களா? என்று கேட்காதீர்).
டிசம்பர் 11, 1935 அன்று பிறந்த பிரணாப் முகர்ஜி 1969 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அதுதொடங்கி இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகள் பலவற்றையும் வகித்த அவர் 2004 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார். அதாவது ஒருமுறை கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே அதிகாரத்தின் உச்சத்தில் நீண்ட நாள் இருந்தவர் அவர்.
இப்படி 35 ஆண்டுகள் தேர்தலை சந்திக்காமலேயே நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல உயர்ந்த பதவிகளிலும் இருந்த அவர் 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக மேற்கு வங்கத்தின் சாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிகாரத்தின் உச்சத்தில் நீண்டநாட்கள் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியின் நீண்டநாள் கனவென்பது பிரதமர் பதவிதான்.
என்றாவது ஒருநாள் பிரதமர் இருக்கையில் அமரலாம் என்று காத்திருந்தவருக்கு ஜனாதிபதி பதவியை அளித்ததன் மூலம் நிரந்தரமாக வழியை அடைத்துவிட்டனர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.
அதுமட்டுமல்லாமல் காங்கிரசு கட்சியிலும், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும்
பிரணாப் முகர்ஜியின் ஆதிக்கம்தான் நீடித்தது. இன்னும் சொல்லப்போனால், சோனியா காந்தி,
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூன்று பேரும் யாராவது ஒருவரைக் கண்டு கொஞ்சமாவது பயந்தார்கள் என்றால் அது பிரணாப் மட்டும்தான். இப்போது காங்கிரசு கட்சி, அமைச்சரவை, நாடாளுமன்றம் என்கிற மூன்று இடங்களிலிருந்தும் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.
அதுமட்டுமல்ல, கட்சிப்பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இனி ஒருபோதும் அவரால் வரவே முடியாது. ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆனால் அப்புறம் வேறு பதவிக்கு போவது மரபல்ல. அப்புறம் இனி எங்கே பிரதமர் ஆவது?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















