வியாழன், 23 ஜூலை, 2020

பருவத்தேர்வுகள் இரத்தாகிறது!*இறுதியாண்டு இல்லாத மாணவர்களுக்கான செமச்டர்கள் ரத்து

*பருவத்தேர்வுகள் இரத்தாகிறது!*

*இறுதியாண்டு இல்லாத மாணவர்களுக்கான செமச்டர்கள்  ரத்து.*

*கல்லூரிகளில் நடப்பு பருவதேர்வுக்கு மட்டும் விலக்களிக்க அனுமதி.*

*யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் - முதலமைச்சர்.*

*இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நடப்பு பருவத்தேர்விலிருந்து விலக்கு.*

*முதுகலைப் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்தப் பருவத்திற்கு தேர்வில் இருந்து விலக்கு.*

*இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.*

*முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.*

*எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.*

ஜூலை 23, வரலாற்றில் இன்று.மறைக்கப்பட்ட ஆளுமை, டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு அவர்களின் நினைவு தினம் இன்று.

ஜூலை 23, வரலாற்றில் இன்று.

மறைக்கப்பட்ட ஆளுமை, டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு அவர்களின் நினைவு தினம் இன்று.


டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு
(பிறப்பு: 1887, ஜூன் 4- மறைவு: 1957 ஜூலை 23)

தென்னாட்டுத் திலகராகப் புகழ்பூத்த வ.உ.சி, 1934இல் ‘தேசிய சங்கநாதம்’ எனும் தலைப்பில் 32 பக்கங்களில் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இந்தச் சிறுவெளியீட்டில் டாக்டர் நாயுடுவின் தேசியத் தொண்டுகள் 1933 வரையில் நிகழ்ந்தவை மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

‘டாக்டர்’ எனும் பட்டப் பெயர், அவர் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில் பெரும்புகழ் பெற்றதால் அமைந்தது.

சேலம் மாவட்டம், ராசிபுரத்தில் 1887-ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி வரதராஜுலு நாயுடு பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள் உயர் நிலைக் கல்வி கற்கும்பொழுதே நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. இளைஞரான வரதராஜுலு ‘முற்போக்காளர் சங்கம்’ எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.

அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய லட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டதைப் பற்றி பிற்காலத்தில் 1936 செப்டம்பர் 26-ஆம் தேதியிட்ட தமது ‘தமிழ்நாடு’ இதழின் தலையங்கத்தில் பின் வருமாறு கூறியுள்ளார்:
“1906ஆம் ஆண்டில் எனது 19 வயதில் இந்திய தேசிய இயக்கத்தில் நான் ஈடுபட்டேன். 1908ஆம் வருஷம் புதுச்சேரிக்குச் சென்று, சுப்பிரமணிய பாரதியாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.

“1916இல் தேசிய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றேன். இந்த வரலாற்றுச் சிறப்பை, ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்புகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-
”பால்- பால்-லால் என்று பாரதநாடு முழங்கிய காலமுண்டு. நாயக்கர், நாயுடு, முதலியார் என்று தமிழ்நாடு முழங்கிய காலமுண்டுமேலே,
‘பால்’ என்பது பாலகங்காதர திலகரையும்
‘பால்’ என்பது விபின் சந்திர பாலையும்
‘லால்’ என்பது லாலா லஜபதிராயையும்
குறிப்பிடுவனவாகும்.
இவ்வாறே,
நாயக்கர் என்பது, ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும்
நாயுடு என்பது டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவையும்
முதலியார் என்பது திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரையும்
குறிப்பிடுவனவாகும்”.

இவரது முதல் சிறைவாசம், 1918-இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக விதிக்கப்பட்டது. சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையில், நாயுடுவின் சார்பில் சேலம் சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) வாதாடினார்.
இவருக்குத் துணையாக, சேலம் ஆதி நாராயண செட்டியார்,
மதுரை ஜார்ஜ் ஜோசப், எம்.கே.சுந்தரராஜ ஐயங்கார்,
ஆர்.எஸ். வரதராஜுலு நாயுடு
ஆகிய வழக்கறிஞர்கள் உதவினர்.

உயர் நீதிமன்ற மேல் முறையீட்டில் ராஜாஜி எழுப்பிய சட்ட நுணுக்க வாதத்தால், நாயுடு விடுதலை பெற்றார்.
அவர் சேலத்தில் வாரப் பதிப்பாக 1919-ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த ‘தமிழ் நாடு’ இதழில் அவர் எழுதிய இரு கட்டுரைகள், ராஜதுரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் சிறை வாசத்தை ஏற்றார்.

1923-இல் பெரியகுளம் தாலுகா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இது மூன்றாவது சிறைத்தண்டனையாகும்.

24-ஆம் வயதில் அவர் ருக்மணி எனும் பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். 1920 ஆகஸ்டில் காந்தியடிகள் திருப்பூர் வந்தபொழுது, டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். 1921-இல் மீண்டும் சேலம் வந்தபொழுது டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி, தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும், காந்தியடிகளிடம் கொடுத்துவிட்டார்.
1922-இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்டபொழுது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க புதுமையைக் கையாண்டார், டாக்டர் நாயுடு.

அரசாங்கத்துக்குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு தான் வரிகட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.
வரி மறுப்பைக் குறிப்பிட்டு டாக்டர் நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம், காந்தியடிகளின் ‘யங் இந்தியா’வில் வெளிவந்தது. 1925-இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராகவும் பணியாற்றினார். 1929-இல் காங்கிரஸோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரஸை விட்டு வெளியேறினார். பின்னர் ஆர்ய சமாஜத்தில் இணைந்தார்.

‘ஜஸ்டிஸ்’ கட்சியை எதிர்த்ததில் டாக்டர் நாயுடுவின் பங்களிப்பைப் பின்வருமாறு திரு.வி.க. பாராட்டியுள்ளார்:
“ஜஸ்டிஸ் கட்சி முளைவிட்டபோது, அதைக் கிள்ளியெறிவதற்கென்று புறப்பட்டவர் டாக்டர் வரதராஜுலு. வரதராஜுலுவின் பிரசாரம் தமிழ்நாட்டில் நாலா பக்கமும் பரவாவிடின், ‘ஜஸ்டிஸ்’ கொடி நாடு முழுவதும் பரவி, காங்கிரஸ் உணர்ச்சிக்கேடு சூழ்ந்திருக்கும். தென்னாட்டில் காங்கிரஸ் பக்தியை வளர்த்த பெருமை நாயுடுவுக்கு உண்டு”
-என்று திரு.வி.க. எழுதியுள்ளார்.

ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு.வி.க.வைத் தொடர்ந்து, தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் டாக்டர் நாயுடு.
இவருடைய இதழியல் பணி, ‘பிரபஞ்ச மித்திரன்’ எனும் வார இதழ் மூலம் தொடங்கியது. மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும், சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப்பட்ட ‘பிரபஞ்சமித்திரன்’ மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்தபொழுது, டாக்டர் நாயுடு 1916-இல் அந்த இதழை வாங்கினார். அவர் ஆசிரியரானார். இது இரண்டாண்டுகள் வெளிவந்தது. 1918ஆம் ஆண்டு டாக்டர் நாயுடு சிறைப்பட்டபொழுது, ஆயிரம் ரூபாய் ஈடுகாணம் அரசால் கேட்கப்பட்டு, பத்திரிகை முடக்கப்பட்டது.

பிரபஞ்சமித்திரனுக்குப் பிறகு தமிழ்நாடு இதழைத் தொடங்கி ஆசிரியராக இருந்து ஆற்றிய நாயுடுவின் பணி ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

அவருக்கு இவ்வகையில் பெரிதும் துணை நின்றவர் ‘பேனா மன்னன்’ என்று பிற்காலத்தில் புகழப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார்.
1919-இன் இறுதியில் சேலத்தில் வாரப் பதிப்பாக வெளிவரத் தொடங்கிய தமிழ்நாடு இதழில், 21 வயதான இளைஞர் டி.எஸ்.சொக்கலிங்கம் 1923-இல் துணை ஆசிரியரானார்.1926 ஏப்ரல் 14-இல் வாரப் பதிப்புடன் நாளிதழையும் தொடங்கினார். பாரதியார் பாடல்களைச் சித்திர விளக்கங்களாக வெளியிட்ட முதல் இதழ் தமிழ்நாடு எனும் பெருமை பெற்றது.

“காலஞ்சென்ற ஜி.சுப்பிரமணிய ஐயரைப் போல டாக்டர் நாயுடுவும் பத்திரிகை உலகில் ஒரு தனிச் சுடராக விளங்கினார். தேசிய ஆதர்சங்களுடன் வெற்றிகரமாக ஒரு தேச பாஷை பத்திரிகை நடத்திய வீரர்களில் டாக்டர் நாயுடுவைக் காலஞ்சென்ற ஜி.சுப்பிரமணிய ஐயருக்கு இணையாகச் சொல்லலாம்” -என்று வ.உ.சி. ‘தேசிய சங்க நாதம்’ எனும் வெளியீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழும் டாக்டர் நாயுடுவின் முயற்சியே. 1916-லேயே ஆங்கில இதழ் ஒன்றைத் தொடங்க வேண்டும் என விரும்பிய டாக்டர் நாயுடு, 1932-இல் தமிழ்நாடு நாளிதழுக்கு சகோதரப் பத்திரிகையாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ எனும் பெயரில் ஓர் ஆங்கில நாளேட்டைத் தொடங்கினார். ஆனாலும், சில மாதங்களிலேயே ‘ப்ரீ பிரஸ் ஆப் இந்தியன்’ எனும் சுதேச செய்தி நிறுவனத்தை நிறுவிய தேசிய வீரர் எஸ்.சதானந்தம் வசமாயிற்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’.
1930-32களில் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும், சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் டாக்டர் நாயுடு எதிர்த்தது இவருடைய அரசியல் வீழ்ச்சிக்கும், தமிழ்நாடு இதழின் நலிவிற்கும் காரணமாயிற்று.

விடுதலை பெற்ற இந்தியாவில் டாக்டர் நாயுடு 1951-இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.

சிற்சில சந்தர்ப்பங்களில் பெரியாருக்கும், காமராசருக்கும் இடையே பாலமாகவும் திகழ்ந்தார். 23.7.1957-இல் அவர் இறந்தபொழுது அவருடைய இறுதிச் சடங்குகள் ஆரிய சமாஜ சடங்குகள் வழியே எரியூட்டப்பட்டது. இவரைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறு வெளிவருதல் இன்றியமையாததாகும்.

ஜூலை 23,வரலாற்றில் இன்று.விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிபோட்ட சுப்பிரமணிய சிவா நினைவு இன்று.

ஜூலை 23,
வரலாற்றில் இன்று.

 விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிபோட்ட சுப்பிரமணிய சிவா நினைவு  இன்று.

சிறுவனாக இருக்கும் பொழுதே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆப்பிரிக்காவில் போராடி வந்த போயர்களுக்கு ஆதரவாக கவிதைகள் எழுதினார்.

 அரசு வேலையை தூக்கி எறிந்து விட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விடுதலைக் கனலை மூட்டினார். வங்கப்பிரிவினை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை கொண்டுவரும் போக்கில் நிறைவேற்றப்பட, அதை எதிர்த்து சுதேசி இயக்கம் நாடு முழுக்க பரவியது.

தமிழகத்துக்கு பிபின் சந்திர பால் வந்து உரையாற்றி எழுச்சி ஏற்படுத்திவிட்டு போயிருந்தார். பாரதியார் எழுச்சி கீதங்கள் பாடினார். சுதேசி கம்பெனி,கப்பல்கள் என்று வ.உ.சி அவர்கள் இயங்கிக்கொண்டே இருந்தார். சுப்ரமணிய சிவா தூத்துக்குடியில் வ.உ.சி அவர்களை சந்தித்தார். கோரல் மில் போராட்டத்தில் அவருடன் இணைந்து பங்கு கொண்டார். எழுச்சி மிகு உரைகளால் இருவரும் மக்களை கிளர்ந்து எழ செய்தார்கள்.

காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பல்லுக்கு பல் என ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு வெள்ளையருக்கு ஓயாமல் தொல்லைகள் கொடுத்துக்கொண்டு இருந்த இவர்களை, வழக்குகள் போட்டு ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசால் சென்னை மாகாணத்தில் சிறையில் அரசியல் கைதியாக முதன்முதலில் அடைக்கப்பட்டவர் இவரே. நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தொழுநோய் தாக்கி சிறையை விட்டு வெளியேறி வந்தார்.

தொழுநோய் தொற்று நோய் என அரசு கருதியதால் தொடர்வண்டிகளில் தொழுநோயாளிகள் பயணிக்க கூடாது என அரசு தடை விதித்த பொழுது ."பாரத மாதா என் அக்ரதேவதை; இந்த நாடே நான் ஆராதிக்கும் புண்ணிய பூமி !"என நெகிழ்ந்து சொல்லி சாக்கு மூட்டையில் தன்னை கட்டிவைக்க சொல்லி ஊர் ஊராக தொலைவண்டியில் பயணம் சென்று அன்னை தேசத்துக்கு போராட இளைஞர்களை திரட்டினார்.

புண்களில் ரத்தம் வடிய நடந்தே சுதந்திர கனலை தமிழகமெங்கும் பரப்பிய அவர் சென்னை மைலாப்பூரில் வசித்த காலத்தில் மாலை நேரத்தில் ஒரு மேஜை,ஒரு நாற்காலி,ஒரு இரவு விளக்கு ஆகியன மட்டும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு போவார். அங்கே மேசையின் மீது ஏறி நின்று வந்தே மாதரம் என்று முழங்கிவிட்டு விடுதலை தாகம் பொங்கும் உரைகளை நிகழ்த்துவார்.

ஞானபானு இதழை நடத்திய அவர் அதில் வ.உ.சி மற்றும் பாரதி ஆகியோரை எழுத வைத்தார். மீண்டும் தொழுநோயோடு இரண்டு முறை சிறை தண்டனை பெற்றாலும் அவர் விடுதலைப்போரால் தன்னால் ஆன பங்களிப்பை தந்துகொண்டே இருந்தார். பாரத மாதாவிற்கு பாப்பாரப்பட்டியில் கோயில் கட்ட வேண்டும் என்று சித்தரஞ்சன் தாஸ் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டி நிதி திரட்டிய அவர் அந்த ஆலயத்தில் பூசாரிகள் கிடையாது என்றும், எளிய மக்களே வழிபடுவார்கள் என்றும் உறுதி கூறினார். அந்த கனவு நிறைவேறும் முன்னரே காலமானார்.

ஜூலை 23, வரலாற்றில் இன்று.பால கங்காதர திலகர் பிறந்த தினம் இன்று

ஜூலை 23,
வரலாற்றில் இன்று.

பால கங்காதர திலகர் பிறந்த தினம் இன்று

👓 இந்தியத் தேசியவாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரருமான பால கங்காதர திலகர் 1856 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே ஆவார். முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். இவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.

👓 திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர்.
இதனால், 1906 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற திலகர், சிறையில் 'கீதா ரகசியம்" என்ற நூலை எழுதினார்.

இந்தியா விடுதலை பெற வேண்டும் என போராடிய பால கங்காதர திலகர் அவர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதி 1920 ஆம் ஆண்டு தன்னுடைய 64ஆவது வயதில் காலமானார்.

புதன், 22 ஜூலை, 2020

*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண் 379 நாள் :22.07.2020 அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் சார்பான அரசாணை வெளியீடு*

*🟡பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம்: அரசுத்தேர்வுகள் இயக்ககம்.*

*🌟12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 24 - 30 வரையிலான நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.*

*🌟பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம்*

*🌟மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்*

*🌟தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்*

*🌟மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும்.*

*🌟விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்.*

*🌟மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும்.*

*🌟'பள்ளி வளாகத்திற்குள் ஒன்று கூடுதலை தவிர்க்க வேண்டும்'.*

*🌟மாணவர்கள் முகக்கவசமும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள்  கையுறையும் அணிந்திருக்க வேண்டும்.*

*🌟தனி மனித இடைவெளி, கை கழுவ வசதி உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிப்பு*

*🌟கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் பள்ளிகளில் சென்று சான்றிதழ்களை  பெறலாம்.*

*🌟சான்றிதழ் வழங்குவதற்கு முன்பாக பள்ளிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.*




TNEB Traiff Calculater....

Click here...

ஜூலை 22, வரலாற்றில் இன்று. இந்தியவின் தேசியக்கொடி உறுதி செய்யப்பட்ட தினம் இன்று(1947).

ஜூலை 22, வரலாற்றில் இன்று.

இந்தியவின் தேசியக்கொடி உறுதி செய்யப்பட்ட தினம் இன்று(1947).

நம் நாட்டு தேசியக்கொடி ஒரே நாளில் உருவாக்கப்பட்டதல்ல. அது பலரது உழைப்பாலும், போராட்டத்தாலும் இன்றைய நாளில் நாம் வணங்கும் மூவர்ணக் கொடியாக உருப்பெற்றது. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை நிலைப்படுத்தவும், இந்தியர்களின் அடையாளத்திற்காக
வும் கொடியை உருவாக்கினர்.

மகாத்மா காந்தி, நேதாஜி, அன்னிபெசன்ட், பைக்கஜி காமா ஆகியோரின் முயற்சியால் பல சின்னங்களை கொண்ட பல கொடிகள் உருவாகின. இறுதியாக இன்று இருக்கும் தேசியக் கொடியை பிங்கலி வெங்கையா வடிவமைத்தார். இந்த கொடி, 1947ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் எழுச்சியையும், விடுதலையையும் குறிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி முதன் முதலாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் ஏற்றப்பட்டது.

ஜூலை 22, வரலாற்றில் இன்று. தமிழறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் பிறந்த தினம் இன்று(1904).

ஜூலை 22, வரலாற்றில் இன்று.

தமிழறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் பிறந்த தினம் இன்று(1904).

இவர்
 திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் தொ. மு. சிதம்பர ரகுநாதன்.

பாஸ்கரத் தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். கல்லூரி நாட்களில் ரா. பி. சேதுப்பிள்ளையின் தூண்டுதலால் ஆனந்த போதினி இதழில் கம்ப இராமாயணம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரின் ”வட்டத் தொட்டி” என்றழைக்கப்பட்ட இலக்கிய வட்டத்தில் ஒருவரானார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு இந்திய ஆட்சிப் பணி அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழகமெங்கும் பயணம் செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்து கல்கி இதழில் "வேங்கடம் முதல் குமரி வரை" என்ற தலைப்பில் அவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினார்.

2009-10 இல் தமிழக அரசு தொண்டைமானது நூல்களை நாட்டுடைமையாக்கியது

அவரது படைப்புகள் சில

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
ஆறுமுகமான பொருள்
இந்தியக் கலைச்செல்வம்
இரசிகமணி டி.கே.சி
கம்பன் சுய சரிதம்
கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம்
சீதா கல்யாணம்
பட்டி மண்டபம்
பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
வேங்கடத்துக்கு அப்பால் (வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு)
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) முதல்பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) இரண்டாம் பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) மூன்றாம் பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) நான்காம் பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) ஐந்தாம் பாகம்

ஜூலை 22, வரலாற்றில் இன்று. தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும், பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் (Vanidasan) பிறந்த தினம் இன்று.

ஜூலை 22, வரலாற்றில் இன்று.

தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும், பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் (Vanidasan) பிறந்த தினம் இன்று.

புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூரில் (1915) பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கசாமி. 7 வயதில் தாய் மறைந்தார். தந்தை மற்றும் சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். 2 ஆண்டுகள் திண்ணைக் கல்வி கற்றார்.

பின்னர் வில்லியனூர் பள்ளியில் பயின்றார். அங்கு பாரதிதாசன், எல்லப்ப வாத்தியார், முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோர் ஆசிரியராக இருந்தனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழும் பிரெஞ்சும் கற்றார். பள்ளி இறுதித் தேர்வில் புதுவையில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

 1937 முதல் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். தமிழார்வத்தால் கவிதை எழுதத் தொடங்கினார். பாரதியின் நினைவு நாளையொட்டி இவர் இயற்றிய ‘பாரதி நாள் இன்றடா’ என்ற இவரது முதல் கவிதை, ‘தமிழன்’ நாளிதழில் வெளிவந்தது.

இவரது கவிதைகளை வெளியிட்டுவந்த ‘தமிழன்’ இதழாசிரியர் இவருக்கு ‘வாணிதாசன்’ என்று பெயர் சூட்டினார். பாரதிதாசனோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1945-ல் சென்னையில் வித்வான் பட்டம் பெற்றார். புதுச்சேரி திரும்பிய இவர், அங்கு கல்வே கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

பொன்னி, காதல், முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார். பிரான்ஸ் நாடு இவருக்கு ‘செவாலியர்’ விருது வழங்கியது.

இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. தனிப்பாடல்கள் எழுதுவதோடு இல்லாமல் குறுங்காப்பியங்களையும் படைக்கத் தொடங்கினார். ‘தமிழச்சி கொடிமுல்லை’, ‘தொடுவானம்’ ஆகிய குறுங்காப்பிய நூல்கள் வெளிவந்தன. இசைப்பாடல்களின் தொகுப்பான ‘தொடுவான’த்தில் தனது இசைஞானத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

திரு.வி.க. இந்நூலுக்கு முன்னுரை எழுதினார். 1956-ல் வெளிவந்த இவரது 88 பாடல்கள் அடங்கிய ‘வாணிதாசன் கவிதைகள்’ இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன. இந்நூல் இயற்கை, இன்பம், மக்கள், புரட்சி, தமிழ், பூக்காடு, இசைக்குரியார் உள்ளிட்ட 7 தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு ‘பொங்கல் பரிசு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ‘தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி’, ‘தீர்த்த யாத்திரை’, ‘இன்ப இலக்கியம்’, ‘எழிலோவியம்’, ‘குழந்தை இலக்கியம்’, ‘பெரிய இடத்துச் செய்தி’, ‘சிரித்த நுணா’, ‘இரவு வரவில்லை’ என ஏராளமான நூல்கள் எழுதினார்.

ஏராளமான பாட்டு அரங்கங்களில் இவர் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘பாட்டரங்கப் பாடல்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இயற்கை குறித்தும் நிறைய எழுதினார். இதனால் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி, புதுமைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.

இவரது கவிதைகள் உருது, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. புதுவை அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டியுள்ளது. இறுதிவரை இலக்கியத் தொண்டாற்றி வந்த வாணிதாசன் 1974ஆம் ஆண்டு தமது 59ஆவது வயதில் காலமானார்-

ஜூலை 22, வரலாற்றில் இன்று. இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்! இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்!டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினம் இன்று.

ஜூலை 22,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்!

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்!

முதல் பெண் சட்டசபை துணைத்தலைவர்!

இந்தியாவின் முதல் மகளிர் சங்கதலைவி!

இந்தியாவுக்கே முன்மாதிரி

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
நினைவு தினம் இன்று.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
அவர்கள் புதுக்கோட்டையில்
1886ஆம் ஜூலை 30ஆம் நாள் பிறந்தார்.
நன்றாக கல்வி பயின்றார்.

முதல் பெண் மருத்துவர்
என்ற பெருமையை பெற்ற
டாக்டர். முத்துலட்சுமி அவர்கள்
1912 ஆம் ஆண்டு
Madras Medical College ல்
மருத்துவ படிப்பை முடித்து
Gold medal பெறுகிறார்.

1927  ஆம் ஆண்டு
சென்னை மாகாணத்தின்
சட்டமன்ற உறுப்பினராக
இந்தியாவிலேயே
முதல் பெண் உறுப்பினராக
தேர்வு செய்யப்படுகிறார்.

1956 ஆம் ஆண்டு
மத்திய அரசு
பத்மபூஷன் விருது
வழங்கியது.

இந்தியாவில்
பெண்களுக்கு எதிரான
"தேவதாசி" முறையை
ஒழிக்க காரணமாக விளங்கியவர்.

புற்றுநோய்
மருத்துவத்துறையில்
ஏராளமான நோயாளர்களுக்கு
சிகிச்சை வழங்கினார்.

1952 ஆம் ஆண்டு
சக்தி ஹரிஹரன்
அவர்களுடன் இணைந்து
அடையார் புற்றுநோய்
மருத்துவமனை தொடங்கினார்.

இன்று
உலக அளவிலான
புற்றுநோய்
மருத்துவமனையாக
சிறந்து விளங்குகிறது.

உலகம் முழுவதுமுள்ள
புற்றுநோய் பாதித்த
ஏராளமான நோயாளர்களுக்கு
புற்றுநோய் சிகிச்சை பெறும்
வாய்ப்பை ஏற்படுத்திய
பெருமைக்குரிய மருத்துவர்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி.

ஏழை எளிய பெண்களின்
நலனில் அக்கறை கொண்டவர்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

ஏழை எளிய பெண்களின்
மகப்பேறு காலத்தில்
இலவசமாக
பிரசவம் பார்த்தார்...!
மகப்பேறு காலத்தில்
தேவையான மருந்துகளை
இலவசமாக வழங்கினார் ...!!

தன் வாழ்நாள்
முழுவதும்
பெண்களின்
முன்னேற்றத்திற்கு
பாடுபட்டவர்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்கள்

இன்று
தமிழக அரசு
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
அவர்களது நினைவாக
கர்ப்பிணி பெண்களுக்கு
உதவும் நோக்கத்தில் மகப்பேறு
உதவித் தொகை
ரூபாய் 18,000/-
மூன்று தவணைகளாக
வழங்கி வருகிறது
தமிழக அரசு....

80 ஆண்டுகளுக்கு முன்னால் இதே வயதுள்ள, ஆதரவற்ற ஏழைப் பெண் குழந்தைகள் உயிருடன் இருக்கும் வாய்ப்பு 60% கூட இருக்காது. உயிர் மிஞ்சியிருந்தால் நிச்சயம் திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்திருக்கும். அந்தக் காலகட்டத்தின் முக்கியமான தலைவர்கள் பெண்ணடிமைத்
தனத்துக்கு எதிராகக் குரல்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு அடிமைத்தனத்தில் ஆணிவேர் என்ன என்பதுபற்றிய புரிதல் கிடையாது. இந்தப் புரிதல் இருந்த மிகச் சிலரில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் ஒருவர். இன்று தமிழகத்தின் பெண்கள் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு அடி கோலியவர் முத்துலட்சுமி ரெட்டி என்று கூறலாம்.

முத்துலட்சுமி ரெட்டி மிகச் சிறந்த மருத்துவர். ஆனால், மிகச் சிறந்த எழுத் தாளர் அல்ல. அவரது வாழ்க்கை வரலாற்றை இலக்கியத் தரத்துக்கு உதாரணமாகக் கொள்ள முடியாது. ஆனால், நூல் முழுவதும் ததும்பி வழியும் உண்மையும் நேர்மையும் அதை முக்கியமான படைப்பாக ஆக்குகிறது.

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தில் பெண்களின் நிலை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் பெண்களின் நிலை, எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய முக்கியமான
தடைகளைத் தாண்டி…
முத்துலட்சுமி ரெட்டி என்றால், தேவதாசி முறைக்கு எதிராகக் குரல்கொடுத்தவர் என்றுதான் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், அந்தக் குரல் மக்களிடையே ஒலிக்க, அவர் மிகப் பெரிய தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது.

பெரியவளானதும் பள்ளி செல்ல இயலாததால், தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி வெற்றி பெற்ற முத்து லட்சுமி, புதுக்கோட்டையில் மிகவும் பாடுபட்டு கல்லூரியில் சேர்ந்தார். இண்டர் வகுப்பு முடிந்தபின், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அவர் உடல்நலம் சீராக இல்லாத போதிலும், மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

மருத்துவராகத் தொழில்புரிந்து பல வெற்றிகளைப் பெற்றாலும், நமது நாட்டின் அடித்தள மக்களின் தேவைகளைப் பற்றி அவர் மறக்கவேயில்லை. அவர் கூறுகிறார்:

இந்தியாவின் பெரிய நகரங்களில் 1,000 பிறப்புக்கு இறப்பு (ஒரு வயதுக்குள்) 350-லிருந்து 400 வரை. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகள்தான். அறியாமை, வறுமை, சுத்தமின்மை, குறைந்த கல்வியறிவு, சுகாதாரக் கட்டுப்பாடுகள்பற்றிய அறியாமை ஆகியவையே இந்த அவல நிலைக்குக் காரணம் என்று கொள்ள வேண்டும். எனவே, இலவசக் கட்டாய ஆரம்பக் கல்வி, இந்தியாவின் எல்லா இடங்களிலும் அவசரத் தேவையாக இருக்கிறது.

சிசுக்களுக்குப் பால் வேண்டும். உழைக்கும் பெண்களின் குழந்தைகளுக்குக் காப்பகங்கள் வேண்டும், ஏழைகளுக்கு இலவச மருத்துவமனைகள் வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர் முத்துலட்சுமி.

மகாத்மா காந்தியிடம் மிகுந்த பற்றுக்கொண்டிருந்த அவர், பெண்ணின் திருமண வயதை 16 வயது வரை உயர்த்தத் தனது உறுதியான ஒப்புதலை காந்தி அளித்ததையும், தேவதாசி முறையை அவர் கடுமையாக எதிர்த்ததையும் நன்றியோடு நினைவுபடுத்துகிறோம்!