திங்கள், 25 மே, 2020

மே 25, வரலாற்றில் இன்று.

பார்வையற்ற எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தினம் இன்று.

17,000 அடி உயரமுடைய பனி மலை, 3,000 அடி பனி நீர் வீழ்ச்சிகள்,  நிறைந்த எவரெஸ்ட் சிகரத்தை கடந்து சாதனை படைத்தவர்கள் பலர்... ஆனால் தனது 13வது வயதில் நடந்த விபத்தொன்றில் இரண்டு கண்களையும் இழந்தபோதும் ஒருவர் இந்த சிகரம் தொடும் சாதனையை செய்வதென்ப
து அசாதாரணமான விசயம்.

ஆனால் தன்னம்பிக்கையை துணையாக்கி தனது நீண்ட நாள் கனவான சிகரம் தொடும் முயற்சியை எட்டியிருக்கிறார் எரிக் வைஹன்மாயர். இவர் இந்தச் சாதனையை எட்டியபோது வயது 32. இந்த எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுத் திரும்பிய முதல் 100 நபர்களுக்கு உள்ளாகவே இவரும் ஒருவர் என்பது மேலும் சிறப்பு.

மேலும் பல உலகின் உயரமான சிகரங்களையும் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சிறந்த பேச்சாளரும்கூட, பார்வையற்றவர்கள் கல்வியான ப்ரெய்லி முறைக் கல்வியைக்கூட இவர் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. தன்னை எப்போதுமே ஒரு பார்வைற்றவராக நினைத்ததே இல்லை எனும் இவருடைய பேச்சு, அனைத்து சாதனையாளருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
எரிக் வைஹன்மாயர் தனது 32வது வயதில் உலகின் முதல் பார்வையற்றவராக எவரெஸ்ட் சிகரத்தை எட்டி சாதனை படைத்தார்.