திங்கள், 15 ஜூன், 2020

*🌐ஜூன் 15, வரலாற்றில் இன்று:சார்லஸ் குட் இயர், ரப்பரை பதப்படுத்தும் வல்கனைஷேசன் முறைக்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று.*

ஜூன் 15, வரலாற்றில் இன்று.

சார்லஸ் குட் இயர், ரப்பரை பதப்படுத்தும் வல்கனைஷேசன் முறைக்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று.

நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னரும் எத்தனையோ ஆய்வுகளும்,அதீத உழைப்பும் உறைந்து போயிருக்கிறது என்று நாம் அறிவோமா ?
எடுத்துக்காட்டாக நாம் செல்லும் வண்டிகள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக இருக்கும் ரப்பர் டயருக்கு பின்னும் தன்னம்பிக்கை பொங்கும் ஒரு வாழ்க்கை கதை இருக்கிறது. அது சார்லஸ் குட் இயர் அவர்களின் கதை.

அமெரிக்காவில் பிறந்த இவர் இளம் வயதிலேயே வாட்டர் ப்ரூப் ரப்பர் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை ஆர்வத்துடன் பார்த்தார். ஆனால் அவை
வெயில் காலத்தில் ஒட்டிக்கொள்வதையும்,குளிர காலத்தில் விரிசல் அடைவதும் மிகப்பெரிய தொல்லையாக இருந்தது. ஏதேனும் செய்து சரி செய்ய வேண்டும் என்று
ரப்பரும்,கையுமாக ஆராய்ச்சியில் இறங்கினார் அவர்.

ரப்பரைக்கொண்டு இவர் செய்து ஆய்வுகள் அவருக்கு எண்ணற்ற சோதனைகளை கொடுத்தது. கடன் அதிகமாகி அடிக்கடி ஜெயிலுக்கு போய்விட்டு வந்தார். அவர்
ரப்பரை எரிப்பது நாற்றத்தை உண்டாக்கி தூக்கத்தை,சுவாசத்தை கெடுக்கிறது
என்று போலீஸ் வரை புகார் போய் ஊரைவிட்டே காலி செய்தார். இருந்தாலும் நம்பிக்கையை விடாமல் ஆய்வுகள் மட்டும் நகர்ந்து கொண்டே இருந்தன.

நைட்ரிக் அமிலத்தை ரப்பரில் கலந்து தயாரித்த பொருட்கள் நல்ல முடிவையே ஆரம்பத்தில் தந்தன. அவற்றைக்கொண்டு ரப்பர் பைகள் செய்து அவர் அரசாங்க
தபால் துறைக்கு  அனுப்பி வைத்த பின்னர் அவை ஒட்டிக்கொண்டும்,விரிசல்
தந்தும் தொல்லைகள் கொடுப்பதாக எல்லாம் திருப்பி அனுப்பப்பட மனம் நொந்தார். ஒரு நாள் கந்தகம் மற்றும் காரியத்தை ரப்பரோடு கலந்து ஆய்வுகள்
செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த கலவை அருகில் இருந்த அடுப்பில் தெரியாமல் எதேச்சையாக பட்டது. அதை அதற்கு பின்னர் எடுத்து பார்த்த பொழுது
அது பிசுபிசுப்பு இல்லாமல் இருந்தது. அதை பயன்படுத்தி பார்த்த பொழுது விரிசலோ,ஒட்டிக்கொள்ளுதலோ நிகழவில்லை.  அவை நன்றாக வளைகிற தன்மையும்
கொண்டிருந்தன. அதற்கு காப்புரிமை பெற்றார் அவர். அங்கே இருந்து தான் எல்லாரும் எக்காலத்திலும் பயன்படுத்தக்கூடிய டயர்கள் உலகுக்கு கிடைத்தன. அந்த முறைக்கு வல்கானைசேஷன் என்று பெயரிடப்பட்டது. இயர் வறுமையில்
வாடித்தான் இறந்து போனாலும் அவரின் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு மாபெரும் பாய்ச்சலை வழங்கியது என்பதே சரி. அந்த முறைக்கு அவர் காப்புரிமை பெற்ற தினம் ஜூன் 15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக