செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்,பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களின் 90வது பிறந்த நாள்!எருமப்பட்டி-ஜம்புமடை பள்ளி மாணவ -மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு முக உறைகள் வழங்குதல்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்,பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களின் 90வது பிறந்த நாள்!
எருமப்பட்டி-ஜம்புமடை பள்ளி மாணவ -மாணவிகளுக்கு 
கொரோனா தடுப்பு 
முக உறைகள் வழங்குதல்!
*************************
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,
கவிமாமணி.முனைவர்,பாவலர். திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின்
 90 வது பிறந்தநாள் (ஆகத்து 15 )அன்று நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்வுகள் கொண்டதாக  அமைத்திடுமாறு மாநில,மாவட்ட  அமைப்புகள் முடிவாற்றி அறிவித்தது.

இதன் அடிப்படையில் எருமப்பட்டி ஒன்றியம்,
ஜம்புமடை,ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளியின் ஆசிரியப்பெருமக்கள் திருமதி.து.ஆரோக்கியமேரி,
திரு.வா.சுந்தரராசு மற்றும் திருமதி.ச.சங்கீதா ஆகியோரிடம் வடவத்தூர் ஊராட்சிமன்றத்தின்  துணைத்தலைவர் திரு.பிரபாகரன் மற்றும் பள்ளிக்கிராமக்கல்விக்குழுவின் முன்னாள் தலைவர்.திரு.குமார் ஆகியோரின் முன்னிலையில்  பள்ளிக்குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு ,
மற்றும் கிராமத்தின் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மாநிலச்செயலாளர் திருமுருகசெல்வராசன்  கொரோனா தடுப்பு முகஉறைகள்  வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக