வியாழன், 25 ஜூன், 2020

*🏆ஜூன் 25, வரலாற்றில் இன்று:கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்ற தினம் இன்று (1983).*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்ற தினம் இன்று (1983).

முதல் இரண்டு உலகக் கோப்பையை வென்ற அதே மகிழ்ச்சியில் ஹாட்ரிக் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கி இருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்தியா விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. இந்த முறை கட்டாயம் உலககோப்பையை வென்று மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது.

1983 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானம் ஹாட்ரிக் வெற்றி பெரும் முனைப்பில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர் போன ராபர்ட்ஸ், ஹோல்டிங், கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கியது. இரண்டு ரன்களை சேர்ப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 183 ரன்களுக்கு சுருண்டது. இதில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஸ்ரீகாந்த் 38  ரன்கள் குவித்தார்.

அவ்வளவு தான். கத்துக்குட்டி இந்திய அணி வீட்டுக்கு செல்ல வேன்டியது தான் பேட்டிங் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாயிட் என வரிசை கட்டி நிற்க இந்திய அணி பந்துவீச்சை தொடங்கியது. 76 ரன்னுக்குள் முன்னணி பேட்ஸ்மேன்களை  சுருட்டியது. 140 ரன்களில் ஆல் அவுட் அனைவரது எதிர்பார்ப்பையும் தாண்டி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.

*🌐ஜூன் 25, வரலாற்றில் இன்று:இந்திரா காந்தி அவர்களால் நெருக்கடி நிலை (emergency) அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1975).*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

இந்திரா காந்தி அவர்களால் நெருக்கடி நிலை (emergency) அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1975).

 இந்திரா காந்தி, தனது தேர்தல் வெற்றியை, அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்பதால் நெருக்கடி நிலையை அறிவித்தார்.

 பல கட்சிகளையும். அமைப்புகளையும் தடை செய்தார். பல ஆயிரக்கணக்கில் தொழிற்சங்கத் தலைவர்களையும் சிறைக்கு அனுப்பினார்.

மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான வெறுப்பு கூடுகிறது. தேர்தல் வருகிறது. ஆட்சி மாறுகிறது.

1970இன் தொடக்கத்திலேயே நாட்டில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன. ஒடுக்குமுறை அதிகரித்துவிட்டது. ஏழைகளது வாழ்க்கை சங்கடமாகிவிட்டது. இளைஞர்களும் அதை உணரத் தொடங்கிவிட்டனர். அப்போதுதான் ஜெயப்பிரகாஷ் நாராயணன், லட்சக்கணக்கான மாணவர்களைப் போராட வாருங்கள் என அழைக்கிறார். நாடெங்கும் என்றாலும், குறிப்பாக பிகாரிலும் குஜராத்திலும் மாணவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அறைகூவலை ஏற்று, கல்விச் சாலைகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். லட்சக்கணக்கில் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கினர். அரசு ஊழியர்களையும் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து போராடுங்கள் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறைகூவல் விடுத்தார். அரசுப் பணியாளர்களும்,அப்படியே செய்தனர். ஏற்கெனவே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில், இந்தியா முழுக்க, ரயில்வே தொழிலாளர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். ‘சக்கரங்கள் ஓடாது’ என அது புகழ்பெற்றது. கடைசியாக, ஜெயப்பிரகாஷின் அறைகூவல், ராணுவத்தில் பணியாற்றுபவர்களே, போராட வெளியே வாருங்கள் என்பதாக இருந்தது.

இனியும் பொறுக்குமா அரசு? அந்த நேரத்தில்தான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக அதுவே காரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்திய ஆளும் வர்க்கம், தனது தொடர் அடக்குமுறைகளால் மக்களைக் கொடுமைப்படுத்தும்போது, மக்கள் மத்தியிலிருந்து, ஆயுதப் போராட்ட வடிவத்திலும், அரசியல் போராட்ட வடிவத்திலும் எழுந்துவந்த மாபெரும் மக்கள் எழுச்சியை அடக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை நாம் கற்றுக்கொள்ளலாம்.

ஆள்வோர் தங்களது தவறான கொள்கைகளால், லாபம் ஈட்டும் திட்டங்களால், மக்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்போது, அது எதிர்ப்பாக உருவாவதை யாரும் தடுத்திட முடியாது என்ற படிப்பினையைக் கற்றுக்கொள்ளலாம். ஆள்வோர் நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறைகளால் தற்காலிகமாக வெல்லலாமே ஒழிய, தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்ற படிப்பினையையும்  கற்றுக்கொள்ளலாம்.

*☀ஜூன் 25, வரலாற்றில் இன்று:குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும்,* *பிற்படுத்தப்படோருக்கு* *இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய விஸ்வநாத் பிரதாப் சிங் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும், பிற்படுத்தப்படோருக்கு
இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய விஸ்வநாத் பிரதாப் சிங் பிறந்த தினம் இன்று.

வி.பி. சிங் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் அலகாபாத் நகரில் 1931ஆம் ஆண்டு ஜூன் 25இல் அரச குடும்பத்தில் பிறந்தார்.


இவர் தனது பள்ளிப் படிப்பை அலகாபாத்தில் முடித்தார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். 1969இல் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் உத்தப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினரானார். 1971இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வென்று நாடாளுமன்றத்திற்குச் சென்றார். 1974இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வி.பி.சிங்கை வர்த்தகத் துறை இணை அமைச்சராக்கினார்.

மத்தியில் 1975 ஜூன் 25இல் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு இந்தியாவில் நெருக்கடி நிலைச் சட்டத்தை அமல்படுத்தியது. இதை அடுத்து 1977இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போனது. மீண்டும் காங்கிரஸ் கட்சி 1980இல் ஆட்சிக்கு வந்தது.

அப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தை ஜனதாவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியது.
வி.பி.சிங் அம்மாநிலத்தின் முதலமைச்சராக்கப்
பட்டார். 1982வரை இந்தப் பொறுப்பில் அவர் இருந்தார். பின்னர் 1983இல் மீண்டும் வர்த்தகத் துறை அமைச்சரானார்.

1984இல் இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வி.பி. சிங் நிதியமைச்சராக்கப்
பட்டார். அப்பதவியில் இருந்தபோது வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் வியாபாரக் கொள்கைகளை மாற்றியமைத்தார். இந்த நடவடிக்கையால் வி.பி. சிங் பாராட்டுப் பெற்றார். அதன் பின்னர் 1987 ஜனவரியில் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.

அந்தத் துறையில் நடந்த ஆயுதக் கொள்முதல் தொடர்பாக அவர் ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தம் காரணமான நெருக்கடியால் அமைச்சரவையில் இருந்தும் கட்சியிலிருந்தும் வெளியேறினார்.

1988இல் ஜனதா தளம் என்னும் கட்சியைத் தொடங்கினார். ஜன்மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா தள் கட்சியை ஜெய்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினமான அக்டோபர் 11 அன்று ஆரம்பித்தார். அதன் மூலம் தேசிய அளவில் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டி தேசிய முன்னணி என்னும் கூட்டணியை ஏற்படுத்தி 1989 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார்.

அந்தத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்றதால் அதன் தலைவரான வி.பி. சிங் இந்தியாவின் எட்டாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மத, சாதியவாதப் பிரச்சினைகளால் இவரது ஆட்சிமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 1990 நவம்பர் 7 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1991 ம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த வி.பி.சிங்கை நீண்ட காலமாகப் புற்றுநோய் துன்புறுத்திவந்தது. புற்றுநோயுடன் சிறுநீரகப் பிரச்சினையும் சேர்ந்துகொண்டதால் டெல்லி அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வி.பி.சிங் சிகிச்சை பலனின்றி 2008 நவம்பர் 27 அன்று காலமானார்.

புதன், 24 ஜூன், 2020

☀ஆண்டவன் சொல்றான்; அருணாச்சலம் செய்யறான்! திரைப்பட வசனம் கல்வித்துறையில் எதற்கு? ஆசிரியர்களை வதைக்கவா?! ஊக்க ஊதியத்தை சிதைக்கவா?! :::::::::::::::::::::::::::::::::::: எப்போதில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு கருவூலகம் நிர்வாகம் தலைமைப் பீடமானது?! :::::::::::::::::::::::::::::::::::: வினாக்களும், விளக்கங்களும், வேண்டுகோளும்!திறந்தமடலில்...*

ஆண்டவன் சொல்றான்;
அருணாச்சலம் செய்யறான்!
திரைப்பட வசனம் கல்வித்துறையில் எதற்கு?
ஆசிரியர்களை வதைக்கவா?!
ஊக்க ஊதியத்தை  சிதைக்கவா?!
::::::::::::::::::::::::::::::::::::
எப்போதில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு  கருவூலகம் நிர்வாகம் தலைமைப்
பீடமானது?!
::::::::::::::::::::::::::::::::::::
வினாக்களும்,
விளக்கங்களும்,
வேண்டுகோளும்!திறந்தமடலில்...
::::::::::::::::::::::::::::::::::::
 *அரசாணை எண்:37(பநிசீது)நாள்:10.03.2020 ஐ காரணம் காட்டி உயர்கல்விக் கான ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்க முடியாது* என்று சார்நிலைக் கருவூலக நிர்வாகங்கள் தணிக்கைத் தடைகள் எழுப்பினால் ,
மறுப்புக்
குறிப்புரைகள் எழுதினால்
வட்டாரக்கல்வி அலுவலர்கள் விரைந்து செய்ய வேண்டியது என்ன!?

 அரசாணை எண்:42(கல்வி)நாள்:10.01.1969 மற்றும் அரசாணை எண்;1024(கல்வி)நாள்:09.12.1993 ஆகியவற்றின் அடிப்படையில்  உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்களை அனுமதித்து  செயல்முறை பிறப்பிப்பவர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள்.
*தான்பிறப்பித்த
செயல்முறையை செல்லாது என்றும், தவறானதுஎன்றும்*  வேறொருவர் சொன்னால் *திருவிளையாடல் திரைப்படத்தின்                    தருமி  கேரக்டருக்கு வந்த  நியாயமான கோபம்* இந்த வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் கடுகளவும்  வரலை என்பதே நம் கவலை.

இந்த நேரத்தில் ஏனோ எனக்கு, நம்முன்னோர் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்றுச்சொன்ன மூதுரை நினைவில் வந்து செல்கிறது.

சரி ,
பொருளுக்குள் செல்வோம்.

கோபம் தான் வராது போனால் போகிறது.
குறைந்த பட்சமாக கருவூலக நிர்வாகத்தின் தவறான தடையை, மறுப்பையாவது விலக்கிக் கொள்ளச் சொல்லி *கல்வித்துறையின் அரசாணைகளை     குறிப்பிட்டு விளக்கக்கடிதம் எழுதலாம் ;எதிர் வழக்காடலாம்*.

சரி,இதையாவது செய்யாத வட்டாரக்கல்வி அலுவலர்கள் அருகாமை உயர்அலுவலர் என்ற முறையில் குறைந்த பட்சமாக மாவட்டக்கல்வி அலுவலர்களுக்காவது  *தெளிவுரை கோரியோ, வழிகாட்டுதல் வேண்டியோ கடிதம் எழுதி இருக்கலாம்*.இவ்வலுவலர்கள் இவர்களின் உயர்அலுவலர்களின் வழிகாட்டுதலை பெற்றுதந்திருப்பர்.

சரி,இதையாவது செய்யாது போன வட்டாரக்கல்வி அலுவலர்கள் இன்னொன்றையாவது செய்து இருக்கலாம்.

அது என்னவென்று கேட்கிறீர்களா!?
வேறொன்றும் இல்லை!
இந்த அரசாணை எண்:37/10.03.2020 ஐ தமது கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் தமது அலுவலக  மின்னஞ்சலுக்கு
(இ-மெயில்) அரசாணையை பார்வேர்ட் செய்து  எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து மேல்நடவடிக்கைவழிகாட்டுதல்கள் செய்திருக்கிறார் களா!?என்றாவது *மெயிலாவது  செக்* செய்திருக்கலாம்.

சரி,இதையும் செய்யாத வட்டாரக்கல்வி அலுவலர்கள், இதையாவது செய்யாது சும்மாவாவது, கம்மென்று இருந்திருக்கலாம்.

அது !என்னவென்று கேட்கிறீர்களா?!வேறொன்றும் இல்லை!

ஆண்டவன் சொல்றான்;
அருணாசலம் செய்யறான் !எனும் திரைப்பட வசனத்தினை ஒத்த வகையில்  *கருவூலகம் சொல்லுது; கல்வித்துறை செய்யுது!?*
என்கிற  வேடிக்கையான பதில்களை கிளிப்பிள்ளை களைப் போல திரும்ப ...திரும்ப... உரைப்பதை யாவது செய்யாது இருந்து இருக்கலாம்.

இவ்வாறு சொல்வதையும்,செய்வதையும் கைவிட்டால் தான் *தமிழக கல்வித் துறையின் மாண்பும், மாட்சிமையும்*
காக்கப்படும்;
பாதுகாக்கப்படும்!
-முருகசெல்வராசன்.

*☀திறந்தமடல்* ************** *அடாவடியான - அரசாகமான வட்டாரக்கல்வி அலுவலர்களை என்ன சொல்ல? என்ன செய்ய?தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரே!இவர்களைக் கொஞ்சம் கவனியுங்களேன்!*

திறந்தமடல்
**************
அடாவடியான - அரசாகமான  வட்டாரக்கல்வி அலுவலர்களை  என்ன சொல்ல? என்ன செய்ய?தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரே!இவர்களைக் கொஞ்சம் கவனியுங்களேன்!
::::::::::::::::::::::::::::::::::::
அரசாணை எண்:37(பநிசீது)நாள்:10.03.2020 இல்  கூறப்பட்டுள்ள  அட்வான்ச் இன்கிரிமெண்ட்டுக்கும்,
அரசாணை எண் :42(கல்வி)
10.01.1969இல்  சொல்லப்பட்டுள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கும் உள்ள *அடிப்படை உண்மையும், அடிப்படை வேறுபாடும் மாறுபாடும்- குறைந்த பட்ச வித்தியாசமும் கூட அறிந்திடாத, மேல் அலுவலர்களை அணுகி புரிந்துக்கொள்ளவும் கூட முயற்சிக்காத* வட்டாரக்கல்வி அலுவலர்களை என்ன சொல்ல ?என்ன செய்ய?

கருவூலக நிர்வாகத்தின் மறுப்பை *ஒரு நொண்டிச் சாக்காக்கிக் கொண்டு* ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கானஊக்க ஊதிய உயர்வினை மிகுந்த ஆர்வத்தோடும்,
குரூரமான மனத்தின் ஆசையோடும் , வன்மம் நிறைந்த உள்நோக்கத்தோடும்,
அவசரம் அவசரமாக,
மின்னல் வேகத்தில்
இரத்து செய்து கொரோனாக்காலத்தில் ஊதியக்குறைப்பினை செய்தும், ஊதிய வெட்டினை ஏற்படுத்தியும்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை வேதனைக்குள்ளாக்கி
யுள்ள ,
மன உளைச்சலுக்கு
ஆளாக்கியுள்ள, ஒன்றியத்தின் ஒட்டுமொத்த  ஆசிரியர்களை பதட்டம் அடையச்செய்து கல்விக்களத்தில் கொந்தளிப்பினையும்,பெருத்த பதட்டத்தினையும் உருவாக்கி உள்ள, ஆசிரியர்களின் வேதனையில் மனம்மகிழ்வுக்கொள்ளும் அற்பத்தனமான புத்திக்கொண்ட  வட்டாரக்கல்வி அலுவலர்களை என்ன சொல்ல?என்னசெய்ய!

காலம் காலமாக பெற்றுவரும் ஊக்க ஊதிய  உயர்வினை போகிறப்போக்கில் இல்லை என்று சொல்லி விட்டு கடந்துச்செல்ல
,ஊக்க  ஊதிய உயர்வு ஒன்றும் *வட்டாரக்கல்வி அலுவலர்களின் விருப்பமும் - ஆசையும் சார்ந்த பொம்மைப் பொருள் அல்ல- விற்பனைப் பொருளும் அல்ல* என்று சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழ்நாடு
தொடக்கக்கல்வி இயக்குனரே!
மாநிலந்தழுவிய அளவில் ஆசிரியர்கள் அணிதிரண்டு தான் தங்களது ஊக்க ஊதிய ஊதிய உயர்வினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று வட்டாரக்கல்வி அலுவலர்கள் நினைக்கின்றார்களா?என்பதை விசாரியுங்கள்!

தமிழ்நாடு
அரசுக்கும்,
தமிழ்நாட்டுக்
கல்வித்துறைக்கும்
அவப்பெயர் தேடித் தரத் தான்-
களங்கம்
விளைவித்திடத்தான் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  பணியாற்றுகின்றார்களா?என்பதை ஆராயுங்கள்! 

கல்வித்துறையின் நற்பெயருக்கும்,பொது அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் உள்நோக்குடன் பணியாற்றும் *கல்வித்துறையின்   கறுப்பு ஆடுகளா*?வட்டாரக்கல்வி அலுவலர்கள் என்பதை சோதியுங்கள்!

-முருகசெல்வராசன்.

*G"o Ms.No:279 date: 24.6.2020 ☀தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு*

*☀தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு*


அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020.. -ஆசிரியர்களுக்கு பொருந்தாத இவ்வரசாணையின் அடிப்படையில் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம்..



*🌐ஜூன் 24, வரலாற்றில் இன்று:கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 24, வரலாற்றில் இன்று.

கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.

`
சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.


`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று`கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு.


 மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும்.
`பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும்,
சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார்.

அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.


காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் `பராசக்தி',
`ரத்தத்திலகம்’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50ஆவது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

`உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே!

 ஈ.வெ.கி.சம்பத்.
ஜெயகாந்தன்,சோ,
பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள்.

 தென்றல், தென்றல்திரை, முல்லை,கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!

`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’`எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
`
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது.

`நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார்.

*🌐ஜூன் 24, வரலாற்றில் இன்று:விக்டர் பிரான்சிஸ் ஹெஸ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 24, வரலாற்றில் இன்று.

விக்டர் பிரான்சிஸ் ஹெஸ் பிறந்த தினம் இன்று.

காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளரான விக்டர் பிரான்சிஸ் ஹெஸ், 1883-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று ஸ்ட்ரியா எனும் ஊரில் பிறந்தார். பிரபஞ்சத்திலிருந்து பூமிக்கு வரும் கதிர்வீச்சுகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். 1911 மற்றும் 1912 ஆண்டுகளில் ஒரு பலூனில் கதிர்வீச்சுக்களின் அளவை துல்லியமாக அளவிடும் கருவியைப் பொருத்தி பகல் மற்றும் இரவு என இரு நேரங்களிலும் சோதனை செய்தார். பூமியின் உயரத்திலிருந்து 5.3 கிலோ மீட்டர் வரையிலும் காஸ்மிக் கதிரின் செறிவு இருந்தது. இக்கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 1936ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

*🌐ஜூன் 24,* *வரலாற்றில் இன்று:முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி நினைவு தினம் இன்று.*

ஜூன் 24,
வரலாற்றில் இன்று

முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி நினைவு தினம் இன்று.


இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர்; ஆளுநர்; தொழிலாளர் நலத் துறை அமைச்சர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த பெருமைக்குரியவர் - வி.வி.கிரி என்று அழைக்கப்படும் வரககிரி வேங்கட கிரி. இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த இன்றைய ஆந்திரத்தின் பாதபட்டினம் தொகுதியிலிருந்து  வெற்றிபெற்றார். நேருவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறைக்குப் பொறுப்பு வகித்தார்.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே சென்னை மாகாணத்தின் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக ராஜாஜி, டி.பிரகாசம் ஆகியோரின் அமைச்சரவையில்  பதவி வகித்தவர் அவர். 1957 தொடங்கி 1967 வரைக்கும் உத்தர பிரதேசம், கேரளா, மைசூரு மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். 1967இல் குடியரசுத் துணைத் தலைவரானார். 1969இல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



கிரியின் தந்தை ஜோகையா பண்டுலு சென்னை மாகாண சட்டக் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். வங்கத்தில் ‘வட இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கம்’ அமைக்கப்பட்டத்தில் ஜோகையாவுக்கு முக்கியப் பங்குண்டு. தந்தையின் வழியிலேயே அரசியலிலும் தொழிலாளர் சங்க நடவடிக்கையிலும் அடியெடுத்துவைத்தவர் வி.வி.கிரி. லண்டனுக்குச் சட்டம் படிக்கச் சென்ற கிரி, அப்போது தீவிரமடைந்திருந்த அயர்லாந்து தொழிலாளர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். அதே காலக்கட்டத்தில்தான் காந்தியை அவர் லண்டனில் சந்தித்தார்.

1921-ல் காந்தியின் அழைப்பை ஏற்று, வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இந்திய தொழிற்சங்கத் தந்தை என்.எம்.ஜோஷியுடன் இணைந்து பணியாற்றினார். 1926, 1942 ஆண்டுகளில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் தலைவராக பதவிவகித்தார். குடியரசுத் தலைவரான பிறகும்கூட, சிறப்பு அழைப்பின்பேரில் ஜெனீவாவில் நடந்த சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். ஏறக்குறைய 40 ஆண்டு காலம் சர்வதேசத் தொழிலாளர் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் வி.வி.கிரி.